search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்புலி நாயனார்"

    • திருஆக்கூரில் அவதரித்தவர், சிறப்புலி நாயனார்.
    • கொடும்பாளூரில் அவதரித்தவர், இடங்கழியார்.

    சிறப்புலி நாயனார்

    மயிலாடுதுறையில் இருந்து திருக்கடவூர் செல்லும் வழியில் அமைந்துள்ள திருஆக்கூரில் அவதரித்தவர், சிறப்புலி நாயனார். இவர் நீலகண்டப் பெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்து வந்தார். சிவனடியார்கள் தம்மை வந்தடைந்தபோது, அவர்கள் திருவடிகளில் விழுந்து வணங்கி உணவு வழங்கி உபசரிப்பார். அடியவர்கள் விரும்பும் யாவற்றையும் வழங்கியதால் புகழ்பெற்றவர். சிவபெருமான் திருவடிகள் மீது பற்று கொண்ட சிறப்புலி நாயனார், பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி, முக்தியை தேடி வந்தார். இவர் சிவ வேள்விகளை எல்லாம் சிவபெருமானைக் குறித்தே செய்தார். சிவனடியார்களுக்கு இல்லை என்று கூறாமல் கொடுத்து வந்தார். இவ்வாறு பல புண்ணிய காரியங்களை செய்து புகழும், சிறப்பும் பெற்ற தன்மையினால் சிறப்புலி நாயனாராகப் போற்றப்பட்டு சிவபெருமான் திருவடி நிழலிலே நிலைபெற்றிருந்தார்.

    இடங்கழி நாயனார்

    விராலிமலையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் அமைந்துள்ள கொடும்பாளூரில் அவதரித்தவர், இடங்கழியார். மன்னரான இவரது ஆட்சிக்காலத்தில் அடியார்களுக்குத் திருவமுது செய்விக்கும் திருத்தொண்டர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு கட்டத்தில் அடியார்களுக்கு திருவமுது வழங்குவதற்கு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டார். மனம் வருந்திய அவர், இடங்கழியாரின் அரண்மனைக்குள் புகுந்து நெற்கூடத்தில் இருந்து நெல்லை திருடினார். அவரை அரண்மனைக் காவலர்கள் பிடித்து இடங்கழியார் முன்பாக நிறுத்தினா். அவரிடம் இடங்கழியார், நடந்த விஷயத்தைக் கேட்டார். அதற்கு அந்த நபர், சிவனடியார்களுக்கு திருவமுது செய்விக்க பொருள் இல்லாததால், இப்படிச் செய்ததாகக் கூறினார். அதைக் கேட்டு அவரை விடுதலைச் செய்யும்படி இடங்கழியார் உத்தரவிட்டார். மேலும் நெற்கூடத்தில் உள்ள நெல் மட்டுமின்றி, அரண்மனையில் உள்ள எந்த மதிப்புமிக்க பொருளையும், எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லவும் அனுமதி கொடுத்தார். இந்த செயலால், இடங்கழியார், நாயன்மார்கள் பட்டியலில் இணைந்தார்.

    ×