search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு பூஜைகள்"

    • ராமகொண்டஅள்ளியில் எழுந்தருளியுள்ள சங்கடகர கணபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • கணபதி பூஜை, யாக பூஜை, கோ பூஜையைத் தொடர்ந்து, சங்கடகர கணபதிக்கு 12 வகை அபிஷேக பூஜைகளும், ஆராதனையும் நடைபெற்றது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்ட பென்னாகரம் அருகே ஏரியூரை அடுத்துள்ள ராமகொண்டஅள்ளியில் எழுந்தருளியுள்ள சங்கடகர கணபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் சங்கடகர சதுர்த்தி அன்று அபிஷேக பூஜைகளும் ஆராதனையும் நடைபெறும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று ஆண்டிற்கு ஒருமுறை வரும், மகா சங்கடகர சதுர்த்தி தினம் என்பதால், இந்த கோவிலில் மகா சங்கடகர சதுர்த்தி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கணபதி பூஜை, யாக பூஜை, கோ பூஜையைத் தொடர்ந்து, சங்கடகர கணபதிக்கு 12 வகை அபிஷேக பூஜைகளும், ஆராதனையும் நடைபெற்றது.

    இந்த பூஜையில் பென்னாகரம், ஏரியூர், செல்லமுடி, ராமகொண்டஅள்ளி, சிடுவம்பட்டி, மலையனூர், கவுண்டனூர், சாமத்தால், சோளப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர்.

    கிருஷ்ணகிரி,

    ஆடி 2-வது வெள்ளியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று இரண்டாம் ஆடி வெள்ளி என்பதால், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, திராட்சை மற்றும் பூலோகம் போன்று அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

    இதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் காய்கறி அலங்காரத்திலும், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் வேப்பிலை அலங்காரத்திலும், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், அக்ரஹாரம் அம்பா பவானி கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில், மேல்சோமார்பேட்டை ஸ்ரீயோகமாயா பிடாரி முண்டக கன்னி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ஆடி வெள்ளியை யொட்டி பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
    • ஆடி முதல் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

    கிருஷ்ணகிரி, ஜூலை.22--

    ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முதல் ஆடி வெள்ளி என்பதால், கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் காய்கறி அலங்காரத்திலும், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்திலும், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், அக்ரஹாரம் அம்பா பவானி கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரத்திலும் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை அம்மன் கோவிலில், ஆடிபண்டிகை உற்சவத்தை முன்னிட்டு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

    ஆடி வெள்ளியையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதே போல கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்களில் நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    ஆடி மாத பிறப்பை யொட்டி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ஆடி மாதம் நேற்று பிறந்தது. இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெறுவது வழக்கம். வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பொங்கல் வைத்தல் என இந்த மாதம் முழுவதும் அம்மனை வேண்டி பக்தர்கள் வழிபடுவார்கள்.

    நேற்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.

    அதன்படி, கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில், அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.

    இதே போல், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுர மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடந்தன. இதில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்களில் நேற்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடந்தது
    • பூக்கள், வாசனை திரவியங்களால் அபிஷேகம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நேற்று இரவு உற்சவர் ஆனந்த நடராஜர் ,சிவகாமி அம்பாள் சுவாமிகளுக்கு பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, இளநீர், பல்வேறு வகையான பழசாறுகள், பூக்கள், வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'சிவாய நம' என்ற கோஷத்தோடு நடராஜரை பக்தியோடு வழிபட்டு சென்றனர். 

    • சூரன்குட்டை தக்சண கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.
    • இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    கிருஷ்ணகிரி,

    தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன. தங்கக் கவச அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல், 12 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன.

    இதில், ஏராளமான பெண்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கால பைரவர் கோயில் மற்றும் சூரன்குட்டை தக்சண கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன், தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.
    • பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    கிருஷ்ணகிரி,

    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்&ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி விநாயகருக்கு, 508 லிட்டர் பால் அபிஷேகமும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். விபூதி அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன், தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.

    இதே போல், கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்த பேட்டா ஞான விநாயகர் கோவில், டான்சி விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்தி நகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகர் கோவில் என பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    • ஸ்ரீ ஓம் சக்தி அங்காளம்மன் சித்தர் பீடத்தில் 3-ம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது.
    • சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி அங்காளம்மன் சித்தர் பீடத்தில் 3-ம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது, இதனையொட்டி காலை கோபூஜை, சண்டி ஓமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியில் முன்னூர் கிராம குளக்கரையில் இருந்து சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய விதிகள் வழியாக வந்து அங்காளம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர், இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணகிரியில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
    • தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றி வழிப்பட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தன.

    வெள்ளிக் கவச அலங்காரத்தில் காலபைரவர் அருள் பாலித்தார். பகல் 12 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன. இதில், ஏராளமான பெண் பக்தர்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.

    இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கால பைரவர் கோவில் மற்றும் சூரன் குட்டை தட்சிண கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன், தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    கிருஷ்ணகிரி,

    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்- ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    இதையொட்டி விநாயகருக்கு, 508 லிட்டர் பால் அபிஷேகமும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன், தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.

    இதே போல், கிருஷ்ணகிரி காந்தி சாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினை தீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், டான்சி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதி சக்தி விநாயகர் கோவில் என பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    இதே போல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    • ராம நவமியை முன்னிட்டு, உத்தனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தன.
    • ஓசூர் நகரத்தில் 15 இடங்களில் நீர்மோர் வழங்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    ராமநவமியை முன்னிட்டு மாவட்டத்தில் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராம நவமி விழாவை முன்னிட்டு ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்ப பூஜைகள் நடந்தன. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை செந்தில்நகர் ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணா, ஸ்ரீ முக்யப்ராணா ஆஞ்சநேயா, ஸ்ரீ ராகவேந்திரா சாமி கோவிலில் 67&வது ஆண்டு ராம நவமி உற்சவம் நேற்று நடந்தது.

    இதையொட்டி கடந்த 22&ந் தேதி முதல் 29 வரை நிர்மால்ய அபிேஷகம், பஞ்சாமிர்த அபிேஷகம், சத்யநாராயண பூஜை, மகா தீபாராதனை, தீபாராதனை ஆகியவை நடந்தன. ராம நவமியை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு நிர்மால்ய அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 10 மணிக்கு சத்யநாராயணபூஜை, வீர ஆஞ்சநேயர் பஜனா மண்டலி பஜனை, அர்ச்சனை, மகா தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. இரவு 7 மணிக்கு தீபாராதனை நடந்தன.

    கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திர சாமி கோவிலில், ராம நவமி விழா நேற்று முன்தினம் மாலை பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை ஸ்ரீகணேஷ், ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம், கலச ஸ்தாபனத்துடன் ராமநவமி உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

    இன்று (வெள்ளிக்கிழமை) மாலை லட்சார்ச்சனையும், வருகிற 3-ந் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீ சீதா திருக்கல்யாண வைபமும், மங்களாரத்தியும், 4-ந் தேதி மாலை குத்துவிளக்கு பூஜையும், 5-ந் தேதி காலை ஹோமம், காலை 11.30 மணிக்கு ஸ்ரீராமர் பட்டாபிேஷகம், மங்களாரத்தியும், மாலை சாமி நகர்வலமும் நடைபெற உள்ளன.

    ராம நவமியை முன்னிட்டு, உத்தனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தன. தொடர்ந்து நீர் மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டன. மேலும் ஓசூர் நகரத்தில் 15 இடங்களில் நீர்மோர் வழங்கப்பட்டன. மேலும் ராம நவமியை முன்னிட்டு நேற்று மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    • 32 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சுவாமி சிலைக்கு வண்ண வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
    • கிராம மக்கள் ஏராளமானோர் ஆஞ்சநேயர் மற்றும் ராமரை வழிபட்டனர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள எச்.செட்டிப்பள்ளி ஊராட்சி ஒசபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த சீதா சமேத ராமர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ ராம நவமி விழா கொண்டாடப்பட்டது.

    முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள 32 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சுவாமி சிலைக்கு வண்ண வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    பக்தர்கள் ஆஞ்சநேயரின் சிலை மீது ரோஜா மலர்களை தூவி அபிஷேகம் செய்தனர். அப்போது கிராம மக்கள் ஏராளமானோர் ஆஞ்சநேயர் மற்றும் ராமரை வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் ஸ்ரீ சீதா ராமர் ஆஞ்சநேயர் சுவாமிகளை போற்றும் விதமாக ஸ்ரீ சீதா கல்யாணம் என்ற ஹரிகதா நிகழ்ச்சி கோலாரை சேர்ந்த மஞ்சுளா பாகவதாரணி யால் தெலுங்கு மொழியில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.

    ×