search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கடகர சதுர்த்தியையொட்டி கணபதி கோவிலில் சிறப்பு அபிஷேக, பூஜைகள்
    X

    மகா சங்கடகர சதுர்த்தியையொட்டி கணபதி கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றபோது எடுத்த படம்.


    சங்கடகர சதுர்த்தியையொட்டி கணபதி கோவிலில் சிறப்பு அபிஷேக, பூஜைகள்

    • ராமகொண்டஅள்ளியில் எழுந்தருளியுள்ள சங்கடகர கணபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • கணபதி பூஜை, யாக பூஜை, கோ பூஜையைத் தொடர்ந்து, சங்கடகர கணபதிக்கு 12 வகை அபிஷேக பூஜைகளும், ஆராதனையும் நடைபெற்றது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்ட பென்னாகரம் அருகே ஏரியூரை அடுத்துள்ள ராமகொண்டஅள்ளியில் எழுந்தருளியுள்ள சங்கடகர கணபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் சங்கடகர சதுர்த்தி அன்று அபிஷேக பூஜைகளும் ஆராதனையும் நடைபெறும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று ஆண்டிற்கு ஒருமுறை வரும், மகா சங்கடகர சதுர்த்தி தினம் என்பதால், இந்த கோவிலில் மகா சங்கடகர சதுர்த்தி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கணபதி பூஜை, யாக பூஜை, கோ பூஜையைத் தொடர்ந்து, சங்கடகர கணபதிக்கு 12 வகை அபிஷேக பூஜைகளும், ஆராதனையும் நடைபெற்றது.

    இந்த பூஜையில் பென்னாகரம், ஏரியூர், செல்லமுடி, ராமகொண்டஅள்ளி, சிடுவம்பட்டி, மலையனூர், கவுண்டனூர், சாமத்தால், சோளப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×