search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
    X

    கிருஷ்ணகிரி சென்னை சாலை உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையொட்டி தென்னை ஓலை சிறப்பு அலங்காரத்தில் அம்மனை படத்தில் காணலாம்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

    • ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
    • ஆடி முதல் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

    கிருஷ்ணகிரி, ஜூலை.22--

    ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முதல் ஆடி வெள்ளி என்பதால், கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் காய்கறி அலங்காரத்திலும், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்திலும், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், அக்ரஹாரம் அம்பா பவானி கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரத்திலும் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை அம்மன் கோவிலில், ஆடிபண்டிகை உற்சவத்தை முன்னிட்டு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

    ஆடி வெள்ளியையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதே போல கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்களில் நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×