search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
    X

    ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

    • பக்தர்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    ஆடி மாத பிறப்பை யொட்டி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ஆடி மாதம் நேற்று பிறந்தது. இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெறுவது வழக்கம். வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பொங்கல் வைத்தல் என இந்த மாதம் முழுவதும் அம்மனை வேண்டி பக்தர்கள் வழிபடுவார்கள்.

    நேற்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.

    அதன்படி, கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில், அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.

    இதே போல், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுர மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடந்தன. இதில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்களில் நேற்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×