search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமி சப்பரம்"

    • விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வம்பா கீரப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மயான கொள்ளை உற்சவம் மிக சிறப்பாக நடைபெறும்.

    அதுபோல் இந்த ஆண்டு மயான கொள்ளை உற்சவம் கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் அங்குள்ள சன்னியாசி தோப்பு சுடுகாட்டில் மயான கொள்ளை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது சாமி சப்பரம் எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது. இதனால் சாமியை தூக்கிவந்த இளைஞர்களை மின்சாரம் தாக்கியது.

    இதனால் சுதாரித்துக் கொண்ட இளைஞர்கள் சாமியை கீழே வைத்தனர். உடனடியாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    இந்த தகவல் பரவியதும் அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×