search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாத்துக்குடி"

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தற்போது 100 டன் முதல் 150 டன் வரை சாத்துக்குடி பழங்கள் விற்பனைக்கு வருகிறது.
    • கடந்த ஆண்டு இதே நேரத்தில் மொத்த விற்பனையில் சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது.

    போரூர்:

    கோயம்பேடு, பழ மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து சாத்துக்குடி பழங்கள் விற்பனைக்கு வருகிறது. அக்னி வெயில் நேற்றுடன் முடிந்தாலும் வெப்பத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதனால் சாத்துக்குடி பழங்கள் தேவை அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தற்போது 100 டன் முதல் 150 டன் வரை சாத்துக்குடி பழங்கள் விற்பனைக்கு வருகிறது. வரத்து அதிகரித்து உள்ளதால் சாத்துக்குடி விலை சரிந்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை ஆகிறது. அதேபோல் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சாத்துக்குடி மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, கடந்த ஆண்டு இதே நேரத்தில் மொத்த விற்பனையில் சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது.

    தற்போது விலை சரிவால் சாத்துக்குடி பழங்களின் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது என்றார்.

    • சூட்டை தணிக்க மக்கள் பெரும்பாலும் சாத்துக்குடி ஜுஸ் குடிப்பது வழக்கம்.
    • சாலையோர கடைகளில் சாத்துக்குடி ஜுஸ் அதிக அளவில் நடந்து வருகிறது.

    தமிழகத்தில் கத்தரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் அவதி அடைந்து வருகிறார்கள்.

    வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்ச்சியான பழங்கள், தர்பூசணி மற்றும் பழச்சாறு குடித்து வருகிறார்கள். இதனால் சென்னையில் தற்போது ஆங்காங்கே சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகளில் சாத்துக்குடி, கிர்ணி, எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகளின் விற்பனை சூடு பிடித்து உள்ளது.

    சூட்டை தணிக்க மக்கள் பெரும்பாலும் சாத்துக்குடி ஜுஸ் குடிப்பது வழக்கம். இதனால் சாலையோர கடைகளில் சாத்துக்குடி ஜுஸ் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனால் கடைகளில் சாத்துக்குடி விற்பனை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து தினசரி சாத்துக்குடி பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இன்று 20 லாரிகளில் சுமார் 160 டன் சாத்துக்குடி குவிந்தன. கோடை வெயில் தாக்கம் அதிகம் காரணமாக சாத்துக்குடி பழங்கள் தேவை வழக்கத்தை விட அதிகரித்து உள்ளதால் சாத்துக்குடி பழத்தின் விலையும் அதிகரித்து விற்பனையும் சூடு பிடித்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ50-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது.

    • கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    சேலம்:

    ஆந்திராவில் ராஜமுந்திரி, புலிவேந்தலா, கடப்பா, நந்திமண்டல், நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் சாத்துக்குடி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் சாத்துக்குடி இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு வழக்கத்தை விட, வரத்து அதிகரித்துள்ளது.

    ஆந்திராவில் கடந்த ஒரு மாதமாக சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. சேலத்திற்கு வழக்கமாக 30 டன் சாத்துக்குடி விற்பனைக்கு வரும். ஆனால் சில நாட்களாக 50 டன்னுக்கு மேல் விற்பனைக்கு வருகிறது. ஆயுதபூைஜக்கு முந்தைய நாள் இதன் வரத்து 70 முதல் 80 டன்னாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    தற்போது அளவு பொறுத்து சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ×