search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகச நிகழ்ச்சி"

    • ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டு ஆரவாரம் செய்தனர்.

    திருப்பதி:

    கடற்படை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

    கடற்படை தினத்தை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் 4-ந் தேதி சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    மிச்சாங் புயல் காரணமாக 4-ந் தேதி நடைபெற இருந்த சாகச நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு நேற்று மாலை நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விமானப்படை பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் சாகசம் செய்தனர். விண்ணில் விமானத்தில் பறந்து தீப்பிழம்பை கக்கிய படியும், விமானங்கள் குறுக்கு நெடுக்காக சென்றும், வண்ணப் பொடிகளைத் தூவியும் சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர்.

    இதேபோல் கடற்படை வீரர்கள் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் சாகசங்களை செய்து காண்பித்தனர்.

    ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டு ஆரவாரம் செய்தனர். 

    • மதுரை அய்யர்பங்களாவில் சாகச நிகழ்ச்சிகளுடன் மக்களை மகிழ்விக்கும் கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிகழ்ச்சி நடக்கிறது.
    • குடும்பத்துடன் வர மேலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

    மதுரை

    கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிறுவன மேலாளர்கள் வி.தேவராஜ், ஏ.எம்.எஸ். நாசர் கூறியதாவது:-

    ஆசியாவிலேயே மிகப் பெரியதும், உலகப்புகழ் பெற்றதுமான கிரேட் இந்தி யன் சர்க்கஸ் நிறுவனம் சுமார் 45 ஆண்டுகள் பாரம் பரியம் மிக்கதாகும். 100-க் கும் மேற்பட்ட இந்திய, மலே சிய, ரஷ்ய நாட்டு அனுபவ மிக்க சாகச வீரர்களின் மயிர் கூச்செரியும் நிகழ்ச்சிக ளுக்கு பொதுமக்க ளிடம் எப்போதுமே தொடர்ந்து ஆதரவு இருந்து வருகிறது.

    கடந்த 5 ஆண்டு இடை வெளிக்கு பிறகு மதுரையில் மீண்டும் மக்களை மகிழ் விக்க வந்துள்ளது கிரேட் இந்தியன் சர்க்கஸ். அதன் படி செப்டம்பர் 15-ந்தேதி முதல் மதுரை அய்யர் பங் களா கிருஷ்ணன் கோவில் மைதானத்தில் கிரேட் இந்தி யன் சர்க்கஸ் நிறுவனத்தா ரின் சர்க்கஸ் நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகிறது.

    தினசரி பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என மூன்று காட்சிக ளாக நடத்தப்படுகிறது. பகை, பள்ளி விடு முறை காலங்களை முன் னிட்டு இந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. பீமல் பார் விளை யாட்டுகள், கலைஞர்கள் பங்கேற்கும் சர்க்கஸ் பரேடு, நேபாள கலைஞரின் ஜிக் விங் விளையாட்டு, கோமா ளிகளின் நகைச்சுவை விளையாட்டுகள்,

    அரேபிய நாட்டு ஒட்டகங் களின் சாகசங்கள், கேரள அழகிகளின் சைக்கிள் சாக சங்கள், ஆஸ்திரேலியா நாட்டு கலைஞரிடம் பயிற்சி பெற்ற கலைஞரின் அக்ரோ பட் எனப்படும் மயிர் கூச் செரியும் சாகச நிகழ்ச்சி, குதிரை சாகசங்கள், மரண கூண்டிற்குள் 3 பேர் செய்து காட்டும் அதிபயங்கர நிகழ்ச்சிகள், பொமேரியன் நாய்கள் செய்து காட்டும் வித்தைகள்,

    மணிப்பூர் மாநில கலை ஞர்கள் பங்கேற்கும் கத்தி மேல் சாகசங்கள், பிரமிப் பூட்டும் ரோப் பேலன்ஸ், மிகச்சிறிய சைக்கிள் சாகசங் கள், கொல்கத்தா அழகிக ளின் துப்பாக்கி சூட்டிங், மகாராஷ்டிரா அழகிகளின் குரூப் டெண்டல் பேலன்சிங், 8 அழகிகள் பங்கேற்கும் சாகசங்கள், பிரமிப்பூட்டும் அதிபயங்கர பயர் டான்ஸ், மணிப்பூர் கலைஞர்களின் சேர் பேலன்ஸ் என எண் ணற்ற சாசக நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க குடும்பத்தின ருடன் வருகை தாருங்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×