search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சருமம்"

    • கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
    • கிரீன் டீ தேயிலையை ஊற வைத்து பின் ஆவி பிடித்தால் முகத்திற்கு நல்லது.

    சூரியனில் இருந்து வெளியாகும் புறஊதா கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இக்கதிர்கள் சருமத்தில் எரிச்சல், குழிகள், கருமை போன்றவற்றை ஏற்படுத்தும். கிரீன் டீயை முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் இந்த பாதிப்புகளை சரி செய்யலாம்.

    கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பல்வேறு வழிகளில் தோல் பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

    இது பல அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்களில் காணப்படும் ஒரு சில பொருட்களில் ஒன்றாகும். இதை பயன்படுத்துவதால் முகத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

    * கிரீன் டீயுடன் சீனி மற்றும் தேன் சேர்த்து முகத்தில் பூசி ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவடைந்துக் காணப்படும்.

    * கிரின் டீ தயாரித்து அந்த கலவையை எடுத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து, கட்டியானதும் முகத்தில் பூசி வரவேண்டும். இதை தினமும் செய்தால் நல்லது.

    * கடலை மாவு, கிரீன் டீ மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் பூசி, காய்ந்ததும் தண்ணீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக் முகப்பருக்கள் வருவதை தடுக்க உதவும்.

    * இரவு தாமதமாக தூங்குவதாலும், அதிக வேலையினாலும் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உண்டாகக்கூடும். இதனை போக்க கிரீன் டீ பையை தண்ணீரில் ஊற வைத்து எடுத்த பின் கண்களுக்கு மேல் வைத்து 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். இதனால் கண்களில் உள்ள வீக்கங்கள் குறைவதோடு சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.

    * சூடான தண்ணீரில் கிரீன் டீ தேயிலையை ஊற வைத்து பின் ஆவி பிடித்தால் முகத்திற்கு நல்லது. மேலும் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கும்.

    * கிரீன் டீயை முகத்திற்கு தொடர்ந்து எட்டு வாரங்கள் அப்ளை செய்வதன் மூலம், முகத்தில் உள்ள எண்ணெய் பசையானது குறையும். மேலும், எதிர்காலத்தில் முகப்பரு வருவது போன்ற பிரச்சனைகளும் குறைக்கப்படுகின்றன.

    கிரீன் டீ ஆனது சருமத்தை இறுக செய்கிறது. இதனால் சருமத்துளைகள் அடைக்கப்படுகின்றன. டீ பேக்கை சருமத்திற்கு போடுவதன் மூலம் சருமத்தின் நிறம் மேம்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பானாகவும் பயன்படுகிறது.

    • அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • முல்தானி மிட்டியுடன் சமையலறை பொருட்களை சேர்த்து பேஸ் பேக்குகளை நீங்கள் உருவாக்கலாம்.

    சரும மினுமினுப்புக்கும் பாதுகாப்பிற்கும் உங்களுக்கு உதவக்கூடிய இயற்கையான பொருட்கள் நிறைய உள்ளன. அதில் ஒன்றான முல்தானி மிட்டி ஒரு இயற்கையான களிமண் மூலப்பொருள் ஆகும். இது அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பண்டைய ஆயுர்வேத மூலிகை மருந்து இயற்கை தாதுக்களால் நிரப்பப்பட்டுள்ளது. இது முகப்பரு, கரும்புள்ளிகள், சரும பிரச்சனைகள் மற்றும் திறந்த துளைகளை குறைக்க உதவுகிறது. தூள் வடிவ பேஸ்டாகப் பயன்படுத்தும்போது, அது சருமத்தை மெதுவாக வெளியேற்றி, மென்மையான, மிருதுவான சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது.

    முல்தானி மிட்டியுடன் உங்கள் சமையலறை பொருட்களை சேர்த்து பேஸ் பேக்குகளை நீங்கள் உருவாக்கலாம். உங்களுக்கு அழகான சருமத்தை வழங்கக்கூடிய முல்தானி மிட்டி பேஸ் பேக்குகளை பார்க்கலாம்.

    1 தேக்கரண்டி முல்தானி மெட்டி தூள், 1/4 கப் பால் (அதிக கொழுப்பு), ரோஸ் வாட்டர். அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். அதை முகத்தில் தடவவும். இந்த பேஸ் பேக்கை 10-15 நிமிடங்கள் அப்படியே முகத்தில் வைத்திருக்கவும். பின்னர், வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

    1 தேக்கரண்டி முல்தானி மிட்டி தூள், 1 தேக்கரண்டி சந்தன தூள், 2 தேக்கரண்டி தேங்காய் தண்ணீர், 2 தேக்கரண்டி பால். அனைத்து பொடிகள் மற்றும் திரவங்களை நன்கு கலந்து, நன்றாக பேஸ்ட் செய்யவும். சுத்தமான உங்கள் முகத்தில் தடவவும். அதை 10 நிமிடங்கள் அப்படியே விடவும். வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். சருமத்தை பிரகாசமாக்குவதற்கும், சுத்தப்படுத்துவதற்கும் மற்றும் ஈரப்பதமாக்குவதற்கும் இந்த கூலிங் ஃபேஸ் பேக் வேலை செய்கிறது.

    1 டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி தூள், 1 டேபிள் ஸ்பூன் சந்தன தூள், 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர். அனைத்து பொடிகளையும் ஒன்றாக கலந்து, தண்ணீரில் நன்றாக பேஸ்ட் செய்யவும். அந்த பேஸ்ட்டை முகப்பரு, பருக்கள் மீது தடவவும். 30-45 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்னர், உங்கள் முகத்தை வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவவும். சிறந்த முடிவுகளுக்கு, இந்த இயற்கையான பேஸ் பேக்கை மாதத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும். முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளை சரி செய்ய ஸ்பாட் ட்ரீட்மென்ட் பேக்கை பயன்படுத்தலாம்.

    1 தேக்கரண்டி முல்தானி மிட்டி தூள், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல். உங்கள் முல்தானி மிட்டியை சம பாகமாக கற்றாழை ஜெல்லுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். முல்தானி மிட்டி மற்றும் கற்றாழை ஜெல்லை சம பாகங்களாக எடுத்துக் கொள்ளவும். ஒரு மென்மையான பேஸ்ட் வரை நன்கு கலக்கவும். அதை உங்கள் முகத்தில் தடவவும். பேக் 10-15 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். பின்னர், வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். அனைத்து தோல் வகை சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு இந்த ஈரப்பதமூட்டும் மாஸ்க் உதவும்.

    • ஸ்டாபெர்ரி பழங்கள் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல நன்மைகள் உண்டு.
    • ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவிடும்.

    பல்வேறு சத்துக்கள் நிறைந்த ஸ்டாபெர்ரி பழங்கள் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல நன்மைகள் உண்டு. இதிலிருக்கும் விட்டமின் ஏ, சி, கே,கால்சியம்,மக்னீசியம் ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி பழம் சருமத்திற்கும் மிகவும் நல்லது.

    சருமச் சுருக்கம் : ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சருமச்சுருக்கங்களை வராமல் தடுத்திடும். சருமச் செல்களை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவிடும். நான்கு ஸ்ட்ராபெர்ரிகளை அரைத்து அத்துடன் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பேஸ் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்தால் சருமம் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் சரும சுருக்கங்களை தவிர்த்திடும்.

    சருமப் பொலிவு : ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி மற்றும் எலாகிக் ஆசிட் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவிடும். ஸ்ட்ராபெர்ரியை பாதியாக வெட்டி அதை முகத்தில் ஸ்க்ரப் செய்யலாம் அல்லது ஸ்ட்ராபெர்ரியை கூலாக்கி அவற்றில் பாலைக் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம்.

    உதடுகள் : உதடுகளை நல்ல நிறமாக எடுத்துக் காட்ட ஸ்ட்ராபெர்ரி உதவிடும். இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவிடும். ஸ்ட்பெர்ரியை பாதியாக கட் செய்து உதட்டில் தேய்த்து வரலாம். ஸ்ட்ராப்பெர்ரி கூலுடன் பெட்ரோலியம் ஜெல்லியுடன் கலந்து லிப் பாம்மாக பயன்படுத்தலாம்.

    வெண்மை பற்கள் : கறை படிந்த பற்களை வெண்மையாக்க ஸ்ட்ராபெர்ரியை பயன்படுத்தலாம். ஸ்ட்ராபெர்ரியை அரைத்து டூத் வொயிட்னராக அப்ளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதிலிருக்கும் விட்டமின் சி பற்களை வெண்மையாக்குவதுடன் ஈறுகளை உறுதியாக்கும்.

    தேமல் : சருமத்தில் எங்கேனும் நிறம் மாறுபட்டிருந்தாலோ அல்லது தேமல், மரு போன்றவை வந்திருந்தாலோ இதனை செய்யலாம். ஸ்ட்ராபெர்ரிகூலுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் உடனடி பலன் கிடைத்திடும். இதனை வாரம் மூன்று முறை செய்யலாம்.

    நகம் : ஸ்ட்ராபெர்ரியில் அதிகப்படியான பயோட்டின் இருக்கிறது. இந்த பயோட்டின் நகம் வளர்ச்சிக்கு மற்றும் அதன் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்ட்ராபெர்ரி அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமான நகத்திற்கு கியாரண்ட்டி!

    க்ளன்சர் : ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி சாலிசைக்ளிக் ஆசிட் சிறந்த பேஷியல் க்ளன்சராக பயன்படும். சாலிசைக்ளிக் ஆசிட் நம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன் சருமத்துளைகளை இறுக்கமாக்கிடும். ஸ்ட்ராபெர்ரியை அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி லேசகா மசாஜ் செய்திடுங்கள்.

    டோனர் : ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து அவற்றுடன் ரோஸ் வாட்டர் கலந்து பீரசிரில் வைத்திடுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து அதனை முகத்தில் தேய்த்து வர ஸ்ட்ராபெர்ரி சிறந்த டோனராக செயல்படும்.

    ஸ்க்ரப் : ஸ்டாபெர்ரியை அரைத்து அந்த கலவையுடன் பொடித்த ஓட்ஸ் மற்றும் க்ளிசரின் கலந்து பாதம் முழுவதும் மசாஜ் செய்திடுங்கள். பின்னர் சூடான நீரில் 10 காலை வைத்தால் பாதங்களில் உள்ள டெட் செல்கள் நீங்கிடும்.

    அடர்த்தியான கூந்தல் : ஸ்ட்ராபெர்ரியில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்,மெக்னீசியம் மற்றும் காப்பர் இருக்கிறது. இவை எல்லாமே கூந்தலின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பத்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் அவற்றுடன் இரண்டு ஸ்பூன் மயோனைஸ் கலந்து தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்திடுங்கள். அரை மணி நேரம் ஊறிய பிறகு தலைக்குளிக்கலாம். இவை தலை முடியை அதிகம் வரண்டுவிடாமல் வைத்திருக்க உதவுவதுடன் முடி உதிர்தலையும் தடுத்திடும்.

    பொடுகு : பொடுகுத் தொல்லை அதிகமிருந்தால் ஸ்ட்ராபெர்ரி பழக்கூலுடன் தேயிலை மர எண்ணெய் இரண்டு டீஸ்ப்பூன் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகுத் தொல்லை ஒழிந்திடும், வாரம் ஒரு முறை இப்படிச் செய்யலாம்.

    • உடற்பயிற்சி செய்த பிறகு ஒரு சில விஷயங்களை கவனமாக பின்பற்றுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் முக்கியமானது.

    உடல் எடையை குறைப்பதற்கும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் நிறைய பேர் உடற்பயிற்சியை நாடுகிறார்கள். உடற்பயிற்சி உடலுக்கு மட்டும் நன்மை சேர்ப்பதில்லை. உள் உறுப்புகளுக்கும், சருமத்திற்கும் நலம் பயக்கும். உடற்பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். அதன் மூலம் ஆக்சிஜனை பரப்பி சருமத்தையும் வளப்படுத்தும். அதாவது உடற்பயிற்சியின் மூலம் சருமத்தின் தரத்தையும் மேம்படுத்தமுடியும். அதேவேளையில் உடற்பயிற்சி செய்த பிறகு ஒரு சில விஷயங்களை கவனமாக பின்பற்றுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

    உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது செய்து முடித்த பிறகோ கைகளை கொண்டு முகத்தை தொடக்கூடாது. குறிப்பாக உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்தி பயிற்சி செய்யும்போது கைகளில் அழுக்குகள் படிந்திருக்கும். அந்த கைகளால் முகத்தை தொடும்போது சருமத்தில் பாக்டீரியாக்கள் பரவுவதற்கு அடிகோலிடும். ஜிம் கருவிகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் முகத்தில் படர்ந்தால் முகப்பருக்கள் எளிதாக தோன்றிவிடும். அதனால் எப்போதும் டவல் வைத்துக்கொள்ளுங்கள். வியர்வை வழியும்போது கைகளால் துடைப்பதற்கு பதிலாக டவலை பயன்படுத்துங்கள்.

    சரும பராமரிப்பில் முக்கியமான அம்சம், முகத்தை சுத்தப்படுத்துவதாகும். வியர்வை, அழுக்கு, தூசு, இறந்த சரும செல்கள், பாக்டீரியாக்கள் போன்றவை சருமத்திற்கு தொல்லை தருபவை. இத்தகைய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அடிக்கடி முகத்தை கழுவி வரலாம். சருமத்தின் தன்மையை பொறுத்து ஆயில் மற்றும் ஜெல் அடிப்படையிலான கிளீனர்களை பயன்படுத்தலாம். வியர்வை, சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு ஆயில் அடிப்படையிலான கிளீன்சர்களை பயன்படுத்தலாம். சாலிசிலிக் அமிலம் கொண்ட ஜெல் அடிப்படையிலான கிளீன்சர், பாக்டீரியாக்களை அகற்றவும், சரும துளைகளை சுத்தம் செய்யவும் உதவும்.

    சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும் சிறந்த நண்பனாக மாய்ஸ்சுரைசர் விளங்குகிறது. சருமத்தை அமைதியாக உணர வைப்பதற்கான திறவுகோலாகவும் அமைந்திருக்கிறது. உடற்பயிற்சி செய்த பிறகு சருமத்தில் உண்டாகும் அரிப்பு, சிவத்தல் போன்ற பிரச்சினைகளை குறைக்கவும் உதவுகிறது. மாய்ஸ்சுரைசர்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது என்பதால் கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு தாராளமாக உபயோகிக்கலாம். சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்வதும், உடற்பயிற்சியின்போது வெளியேறும் வியர் வையை ஈடு செய்ய நீர்ச்சத்தை பராமரிப்பதும் முக்கியம்.

    சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் முக்கியமானது. சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கலாம். சரும வீக்கம், சிவத்தல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். சுருக்கங்கள், வயதான தோற்ற அறிகுறிகளில் இருந்தும் சருமத்தை பாதுகாக்கலாம். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்ட பிறகு சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படும். கடுமையான புற ஊதாக்கதிர்வீச்சுகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க எஸ்.பி.எப். தன்மை கொண்ட பொருத்தமான சன்ஸ்கிரீனை தேர்வு செய்வது முக்கியம்.

    தண்ணீர் பருகுவது தாகத்தை மட்டும் தணிக்க உதவுவதில்லை. உடலை சுத்தப்படுத்தும். மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்தும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தண்ணீர் குடிக்கும்போது உடல் மட்டுமல்ல சருமமும் பயனடைகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், உடலில் நீர்ச்சத்தை பேணுவதும் சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சியின்போது வியர்வை மூலம் வெளியேறும் நீர்ச்சத்தை ஈடு செய்வது அவசியம். அதனால் உடற்பயிற்சி செய்தபிறகு குறைந்தபட்சம் ஒரு டம்ளர் தண்ணீராவது பருகுவது அவசியமானது.

    • காபி தூள் நம் அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருளாகும்.

    காபி இல்லாமல் அன்றைய நாளே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் நாம் அனைவரும் காபியை குடித்த பின் தான் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறோம். சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலை வலியே வந்துவிடும். எனவே காபி தூள் நம் அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருளாகும். இந்த காபி நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது. என்னடா நம்ம காபி குடிக்க மட்டும் தான பயன்படுத்துவோம் இது என்ன புதுசா இருக்குனு நீங்க யோசிக்கலாம். ஆமாங்க காபி தூள் நம்ம முகத்தை அழகாக்கவும் பயன்படுகிறது.

    காபி தூள் ஒரு கப், ஏலக்காய் பொடி 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 கப் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும். தினமும் இதை செய்து வந்தால் படிப்படியாக முகத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் காணலாம்.

    ஒரு டீஸ்பூன் காபி பொடியில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இப்படி வாரம் ஒரு முறை செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் முகம் பளிச்சிடும்.

    கற்றாழையை ஐந்து ஸ்பூன் எடுத்து மசித்துக்கொள்ளவும். அதோடு காபி பொடி ஒரு டீஸ்பூன் கலந்து முகத்தில் 10 - 15 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 4 ஸ்பூன் காபி தூளில் ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து முகம் கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில் தடவி 10 - 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

    4 ஸ்பூன் காபி தூள், 4 ஸ்பூன் பட்டர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கவும். முகத்தில் மட்டுமல்லாது கை கால், கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து 10 - 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.

    காபி பவுடர், சர்க்கரை இரண்டையும் சமமாக கலந்து சிறிது தண்ணீர் இட்டு, முகத்தில் ஸ்கிரப் போன்று பயன்படுத்தலாம். இதனால் சருமத்தின் இறந்த செல் நீங்கி முகம் பொலிவு பெறும்.

    கால், கையில் டேன், கருமையை போக்க கடல் உப்புடன் காபி பவுடர் சேர்த்து ஏதேனும் எண்ணெயில் கலந்து சருமத்தில் 15 நிமிடம் தேய்த்து மசாஜ் செய்து பின் கழுவவும்.

    இதில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு முறையை நீங்கள் செய்து வந்தால் உங்கள் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.

    • வெள்ளரிக்காய் உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை தருகிறது.
    • வெள்ளரிக்காயை முகத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

    அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தை செலவழித்து செல்வதை விட, வீட்டிலேயே உட்கார்ந்து பணம் அதிகம் செலவழிக்காமல் வெறும் இயற்கைப் பொருட்களாலேயே சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் பொலிவோடு வைத்துக் கொள்ளலாம்.

    அதிலும் கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காயை கொண்டு சருமத்தை முறையாக அழகு நிலையங்களில் பராமரிப்பது போன்றே செய்யலாம். இப்போது வெள்ளரிக்காய் மாஸ்க் போடும் போது மேற்கொள்ள வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி பின்பற்றினால், உடனடிப் பலனை பெறலாம்.

    வெள்ளரிக்காய் மாஸ்க் போடும் முன், முகத்தை நன்கு நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக முகத்திற்கு க்ரீம் போட்டிருந்தால், அதனை முற்றிலும் நீக்கி விட வேண்டும். அதிலும் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்துக் கொண்டு, முகத்தை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீக்கிவிடும்.

    வெள்ளரிக்காய் மாஸ்க்கின் மூலம் பொலிவான சருமம் பெற வேண்டுமானால், புதினாவை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் புதினாவானது முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கும். எனவே வெள்ளரிக்காய் மாஸ்க் செய்யும் போது, அத்துடன் புதினாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    வெள்ளரிக்காயை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனால் மாஸ்க் போடும் போது வசதியாக இருக்கும். குறிப்பாக இத்துடன் புதினா சேர்த்துக் கொள்ளவும். அரைத்த வெள்ளரிக்காயுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    வெள்ளரிக்காய் மாஸ்க் தயார் ஆன பின்பு, அதனை முகத்தில் தடவ வேண்டும். ஆனால் கண்களைச் சுற்றி தடவக்கூடாது. ஏனெனில் இதனால் கண்களுக்கு பாதிப்பு கூட ஏற்படலாம். இப்படி முகத்திற்கு மாஸ்க் போட்ட பின்னர், கண்களின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து, 25 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும்.

    இந்த மாஸ்க்கை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் போடலாம். இந்தமாஸ்க் சரும ஈரப்பதத்தை பாதுகாக்கும்.

    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாக்கலாம்.
    • கடலை மாவை வைத்து நம் சருமத்தை எப்படி பாதுகாக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.

    இந்த ஆண்டு கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. கோடை வெப்பத்தால் சருமம் பிரச்சனைகள் வருமோ என்று பெண்கள் கவலைப்பட வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாக்கலாம். அந்த வகையில் வீட்டில் இருக்கும் கடலை மாவு அனைத்து விதமான சரும பிரச்சனைகளில் இருந்தும் காக்கும் சக்தி படைத்தது.

    வீட்டில் இருக்கும் கடலை மாவை வைத்து நம் சருமத்தை எப்படி பாதுகாக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.

    ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு முகத்தில் நன்றாக தடவி, உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என மாறும்.

    சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக ஒரு சில பேருக்கு இருக்கும். அதற்கு கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து பேஷியல் செய்து கொண்டால் முகம் தெளிவு பெறும். மேலும் இதனுடன் எலுமிச்சை சாறு ஊற்றி பேக் செய்தாலும் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.

    வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு, சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும். இதனை நீக்க தேங்காய் பால் 1 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து கலந்து பசை போல பிசைந்து,முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரு முறை செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

    நிறைய பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு, கடலை மாவில், தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவி, நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், கருமை விரைவில் நீங்கி விடும்.

    உருளைகிழங்கு சாறுடன், கடலை மாவையும் சேர்த்து முகத்தில் பேக் செய்யும்போது ,பார்லரில் பேசியல் செய்தது போன்ற ஒரு பளபளப்பை கொடுக்கும். சோப்பிற்கு பதிலாக தினமும் கடலை மாவு பயன்படுத்தும் போது பருக்களற்ற தூய்மையான முகத்தை பெறலாம்.

    • நீராவி (ஆவி) பிடிக்கும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.
    • சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களும் நீங்கும்.

    ஆவி பிடிக்கும்போது முகப்பருக்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து போய்விடும். மழைக்காலத்தில் சளி, இருமல் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கு நீராவி (ஆவி) பிடிக்கும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். ஆயுர்வேத மூலிகை இலைகளை கொதிக்க வைத்து ஆவி பிடிப்பவர்களும் இருக்கிறார்கள். உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும்போதுதான் ஆவி பிடிக்க வேண்டும் என்றில்லை.

    வெறுமனே நீரை கொதிக்க வைத்து முகத்தில்படும்படி நுகர்வதும் சருமத்தை பாதுகாக்க உதவும். ஆவி பிடிக்கும்போது முகப்பருக்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துபோய்விடும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களும் நீங்கும். கொலாஜன் செல்கள் புதுப்பிக்கப்படும். இதன் மூலம் சருமம் பொலிவடையும். இளமை தோற்றத்தை தக்கவைத்துக்கொள்ளலாம்.

    ஆவி பிடிக்கும்போது முகத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமம் பிரகாசமாகவும், பொலிவாகவும் காட்சி அளிக்கும். வாரத்தில் ஒரு முறையாவது ஆவி பிடிக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் இயற்கையாகவே சருமத்தில் சேரும் அழுக்குகள் அகன்றுவிடும். அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதை விட இது சிறப்பானது.

    • கோடை காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமானது.
    • சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

    வெளி இடங்களுக்கு செல்லும்போது சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும். சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து செல்களை சேதம் அடையாமல் காக்கும். கோடை காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமானது. வெளியே செல்லும்போது தான் அதனை பயன்படுத்த வேண்டும் என்றில்லை. வீட்டிற்குள் இருக்கும்போதும் சன்ஸ்கிரீனை சருமத்திற்கு பூசி வரலாம். அதனை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

    நீல ஒளியில் இருந்து காக்கும்:

    ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், கணினிகள் மற்றும் டி.வி.கள் போன்ற எலெக்ட்ரிக் சாதனங்களின் டிஜிட்டல் திரைகள் நீல ஒளியை வெளியிடுகின்றன. அவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. நீல ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் ப்ரீ ரேடிக்கல்கள் வயதாகும் செயல்முறையை விரைவுபடுத்தும். மெலனின் உற்பத்தியையும் ஊக்குவித்து சரும புள்ளிகளை விரைவாக வயதான தோற்றத்திற்கு வித்திடும்.

    நீல ஒளியின் வீரியம் சருமத்தை எளிதில் பாதிப்புக்குள்ளாக்குவதுதான் அதற்கு காரணம். அதனை தவிர்க்க தினமும் சன்ஸ்கிரீன் அணிவது நல்லது. குறிப்பாக டிஜிட்டல் திரை சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துபவர்கள் மறக்காமல் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

    புற்றுநோயை தடுக்கும்:

    வீட்டுக்குள் இருக்கும் சமயங்களில் சூரிய கதிர்வீச்சுக்களால் தீங்கு ஏற்படாது என்று பலர் நினைக்கிறார்கள். அதனால் சன்ஸ்கிரீன் உபயோகிக்க தேவையில்லை என்று கருதுகிறார்கள். ஆனால் சூரியனால் உமிழப்படும் புற ஊதாக்கதிர்வீச்சுகளின் வீரியம் எல்லா இடங்களிலும் பரவி இருக்கும்.

    ஆரம்பத்தில் சருமத்திற்கு லேசான பாதிப்பை ஏற்படுத்தும். காலப்போக்கில் செல்கள் சேதமடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. புற ஊதாக்கதிர்களால் சருமம் பாதிப்புக்குள்ளாகுவதை கவனிக்காவிட்டால் சரும புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

    சருமத்தை பாதுகாக்கும்:

    சருமத்துக்கு ஈரப்பதமூட்டும் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் சன்ஸ்கிரீன் மூலக்கூறுகள் கொண்ட அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவது சிறப்பானது. நவீன சன்ஸ்கிரீன்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் கூறுகளை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்தியும் சருமத்தை பாதுகாக்கலாம்.

    வயது முதிர்ச்சியை தடுக்கும்:

    சருமம் விரைவில் முதிர்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தவிர்ப்பதில் சன்ஸ்கிரீனுக்கு முக்கிய பங்கு உண்டு. சன்ஸ்கிரீனிலும் எஸ்.பி.எப். 30-க்கும் அதிகமாக இருக்கும் கிரீமை பயன்படுத்துவது சருமத்திற்கு இதமளிக்கும்.

    சன்ஸ்கிரீனை அறவே தவிர்ப்பது, மற்ற சரும பொருட்களின் செயல்திறனைக் குறைப்பதுடன், சூரிய ஒளி அதிகம்படும் பகுதியில் செல்லும்போது சருமத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    • பாதாம் பேஸ் பேக் கோடைக்காலத்தில் பயன்படுத்த ஏற்றது.
    • சருமம் பொலிவுடனும், இளமை தோற்றத்துடனும் மிளிரும்.

    இந்த பாதாம் ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, முகம் பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும். பாதாம் விலை அதிகமானது தான். இருப்பினும், இதைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், எதிர்பார்த்த அழகைப் பெறலாம்.

    பாதாம் பருப்பை நிறைய பேர் ஊறவைத்து சாப்பிடுகிறார்கள். ஊறவைத்த பாதாம் ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பது போல அதன் தோலும் சரும பராமரிப்புக்கு பயன்படக்கூடியது. பாதாம் தோலை கொண்டு இறந்த சரும செல்களை உரித்தெடுக்கலாம். 10 பாதாம் தோலுடன் மூன்று டீஸ்பூன் பால் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    அதனுடன் சிறிதளவு தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம். சருமத்தின் தன்மையை பொறுத்து தயிரும் கலந்து கொள்ளலாம். இந்த பேஸ்டை முகம் மற்றும் கைகளில் தடவி மசாஜ் செய்யவும். அது சருமத்தில் படர்ந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதுடன், சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவும். இந்த மாஸ்க்கை தினமும் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    பாதாம் தோல் வயதான அறிகுறிகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மையும் கொண்டது. சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. 10 பாதாம் தோலுடன் 2 டீஸ்பூன் பால், சிறிதளவு மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் கலந்து சருமத்தில் பூசலாம். அதனுடன் தேனும் சேர்த்துக்கொள்ளலாம். அது உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவி விடலாம். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் சருமம் பொலிவுடனும், இளமை தோற்றத்துடனும் மிளிரும்.

    பாதாம் பேஸ் பேக் கோடைக்காலத்தில் பயன்படுத்த ஏற்றது. இந்த மாஸ்க்கை கோடையில் தினமும் பயன்படுத்தி வந்தால், சருமம் கருமையாவதைத் தடுப்பதோடு, பருக்களின் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். மேலும் வெளியே வெயிலில் சுற்றுவதால், சருமத்தில் இறந்த செல்களின் அளவும் அதிகரித்து, சருமம் பொலிவிழந்து காணப்படுவது தடுக்கப்படும்.

    • கோடை காலத்தில் தினமும் தர்பூசணி பழம் சாப்பிடுவது நல்லது.
    • தர்பூசணியில் உள்ள வைட்டமின் சி ஒளிரும் சருமத்தை பெற உதவுகிறது.

    தர்பூசணிகள் ஆக்ஸிஜனேற்றி பண்புகள் மற்றும் வைட்டமின்களின் நன்மைகளால் நிரம்பியுள்ளன, அவை நம் சருமத்திற்கு நல்லது. நீங்கள் உங்கள் அன்றாட உணவில் தர்பூசணியைச் சேர்க்க வேண்டும், குறிப்பாக கோடை காலத்தில் தினமும் தர்பூசணி பழம் சாப்பிடுவது நல்லது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிற்கும் நல்லது. அதன் அற்புதமான நன்மைகளுக்காக உங்கள் சருமத்திலும் இதைப் பயன்படுத்தலாம்.

    தர்பூசணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் சண்டையிடுகிறது. இது உங்கள் சருமம் விரைவில் வயதான தோற்றத்தை தடுக்கவும் உதவுகின்றன. உங்கள் முகத்தில் தர்பூசணி பழத்தை அப்ளை செய்வதால், சரும துளைகள் இறுக்கப்பட்டு, சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பை குறைக்க உதவும். தர்பூசணிகளில் அதிக நீர் சத்து நிறைந்து இருப்பதால், வறண்ட சருமம் இருப்பவர்கள் இதனை அடிக்கடி செய்து வரலாம். தர்பூசணியில் உள்ள வைட்டமின் சி ஒளிரும் சருமத்தை பெற உதவுகிறது.

    எந்த பேஷியல் செய்தாலும் முதலில் உங்கள் முகத்தை சுத்தப்படுவது அவசியம். பின்னர் ஒரு பவுலில் சிறிது தர்பூசணி சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை எடுத்து நன்கு கலந்து கொள்ளவும், இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் ஒரு பருத்தி பஞ்சு கொண்டு அப்ளை செய்யவும். இதை 5-10 நிமிடங்கள் வைத்து விட்டு உலர்ந்த பின்னர் கழுவவும்.

    தர்பூசணி சாறு மற்றும் அரிசிப் பொடியைப் பயன்படுத்தி ஒரு ஸ்க்ரப் தயாரிக்கவும். உங்கள் முகத்தை சுமார் 3-5 நிமிடங்கள் வட்ட இயக்கத்தில் மெதுவாக ஸ்க்ரப் செய்து மசாஜ் செய்யவும். எனினும் இது உங்கள் சருமத்தை பாதிக்காதவாறு பார்த்து கொள்ளுங்கள். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள், பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஒயிட்ஹெட்ஸ் பிரச்சனைகள் நீங்கி விடும்.

    உங்கள் சருமத்தில் இருந்து இறந்த செல்களை நீக்கிய பிறகு, அதை ஈரப்பதமாக்குவது முக்கியம். இதற்கு தர்பூசணி சாறு, தேன், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து மசாஜ் கிரீம் தயாரிக்கவும். இந்த கிரீமை உங்கள் முகத்தில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இந்த மசாஜ் கிரீம் உங்கள் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், அழகான பிரகாசத்தை அளிக்கவும் உதவும்.

    தர்பூசணி பேஸ் பேக் செய்ய ஒரு பாத்திரத்தில், சிறிது கடலை மாவு, பால் மற்றும் சிறிது தர்பூசணி சாறு எடுத்து ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு பிரஷை பயன்படுத்தி, உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் இந்த ஃபேஸ் பேக்கை தடவி 15 நிமிடங்கள் உலர விட்டு பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவவும்.

    இது முற்றிலும் இயற்கையானது என்பதால் பொதுவாக எந்த பக்க விளைவுகளும் இல்லை என்றாலும், சரும பிரச்னைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க உங்கள் முகத்தில் இதனை நேரடியாகப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் கையில் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

    • ஆரஞ்சு தோலில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்திற்கு உடனடியான மினுமினுப்பைத் தரக்கூடியது.
    • மாசு, வெயிலால் ஏற்படும் கருமையை இயற்கை பொருட்களைக்கொண்டு நீக்கும் முறையே ‘பிளீச்சிங்’.

    அதிகப்படியான வெயில், மாசு போன்றவற்றால் சருமம் கருத்து பொலிவு இழந்து போகும். இந்தக் கருமையை, சில பொருட்களைக்கொண்டு நீக்கும் பராமரிப்பு முறையே 'பிளீச்சிங்' எனப்படுகிறது. எந்த விதமான ரசாயனமும் பயன்படுத்தாமல், எளிதாக கிடைக்கும் இயற்கையானப் பொருட்களைப் பயன்படுத்தி கருமையை நீக்கி, சரும நிறத்தை பழையபடி கொண்டு வர முடியும். அதைப்பற்றி பார்க்கலாம்.

    கடலை மாவு பிளீச்

    கடலை மாவு - 2 தேக்கரண்டி

    கோதுமை மாவு - 1 தேக்கரண்டி

    தயிர் - 2 தேக்கரண்டி

    பாதாம் - 5

    எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி

    சிறிய பாத்திரத்தில் கடலை மாவு, கோதுமை மாவு, பொடியாக்கப்பட்ட பாதாம், தயிர், எலுமிச்சம் பழச்சாறு இவை அனைத்தையும் கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். சிறிது பஞ்சை காய்ச்சாத பாலில் நனைத்து முகம் முழுவதும் சுத்தப்படுத்தவும். பின்பு ஊறவைத்த கடலை மாவு கலவையை பூசி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

    புளி

    ரசாயனக் கலவை கலந்த பிளீச்சிங் பொருட்களுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக புளி இருக்கிறது. இது சருமத்துக்கு உடனடியான பொலிவைத் தரக்கூடியது.

    புளி - ஒரு எலுமிச்சை அளவு

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    அரிசி மாவு - 1 தேக்கரண்டி

    தேன் - 1 தேக்கரண்டி

    எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி

    ரோஜா பன்னீர், தண்ணீர் - தேவையான அளவு

    வெந்நீரில் புளியை ஊறவைத்து அதன் சாற்றை கெட்டியாக பிழிந்தெடுத்துக்கொள்ளவும். பிழிந்த சாறில் அரிசி மாவு, மஞ்சள் தூள், எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். முகத்தை ரோஜா பன்னீர் கொண்டு நன்றாகத் துடைத்த பின்பு, புளி கலவையை முகம் முழுவதும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.

    ஆரஞ்சு தோல்

    ஆரஞ்சு தோலில் உள்ள 'வைட்டமின் சி' சருமத்தில் உள்ள கரும்புள்ளி, சீரற்ற நிறத்தை நீக்கி பொலிவுடன் வைக்க உதவுகிறது. மேலும் இதிலுள்ள சிட்ரிக் அமிலம் சருமத்திற்கு உடனடியான மினுமினுப்பைத் தரக்கூடியது.

    ஆரஞ்சு தோல் பொடி - 2 தேக்கரண்டி

    வால்நட் பொடி - 1 தேக்கரண்டி

    சந்தனத் தூள் - 1 தேக்கரண்டி

    வெள்ளரிச் சாறு - 5 தேக்கரண்டி

    சிறிய பாத்திரத்தில் ஆரஞ்சு தோல் பொடி, வால்நட் பொடி, சந்தனத் தூள் மற்றும் வெள்ளரிச் சாறு என அனைத்தையும் நன்றாகக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். முகத்தை வெள்ளரிச் சாறு கொண்டு துடைத்த பின்பு, ஆரஞ்சு தோல் பிளீச்சிங் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். இவ்வாறு வாரம் இரண்டு முறை ஆரஞ்சு தோல் பிளீச்சிங் செய்யலாம்.

    ×