search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சருமம்"

    • சீரம் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது.
    • உங்கள் சருமத்திற்கு பல நன்மைகளை தரக்கூடியதாக சீரம் உள்ளது.

    சீரம் என்பது தற்போது மார்க்கெட்டில் புகழ்பெற்று வரும் அழகு பொருளாகும். கொரியன் மேக் அப் டிரெண்டில் முக்கியமாக பயன்படுத்தும் பொருள் சீரம். இது எண்ணெய் போல் மிருதுவாக்கும் தண்ணீர் போல் இருக்கும். இதன் தன்மை சருமத்தின் துளைகளுல் புகுந்து தோலை மிருதுவாக்கும்.

    சீரம் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது. பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த தயாரிப்பாக உள்ளது.

    மாய்ஸ்சரைசருக்கு முன்னதாக பயன்படுத்தப்படும் சீரமானது, பல சிறிய மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதால் எளிதில் தோலின் ஆழமான அடுக்குகளில் ஊடுருவி, சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சரியாக வழங்குகிறது.

    இதனால் உங்கள் சருமத்தை பிரகாசமாக்குவதோடு, கரும்புள்ளிகள், வெண் புள்ளிகள், பருக்கள், கறைகள், திறந்த துளைகள், சுருக்கங்கள், கோடுகள் போன்ற சரும பிரச்சனைகளையும் குறைக்கிறது. இப்படி பல நன்மைகளை உங்கள் சருமத்திற்கு தரக்கூடியதாக சீரம் உள்ளது.

    நாம் எந்த வகையான சரும பராமரிப்பு அல்லது அழகு சாதன பொருட்களை வாங்குவதாக இருந்தாலும் உங்களுடைய சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமானது.

    வறண்ட சருமம், எண்ணெய் சருமம், உணர்திறன் மிக்க சருமம் என ஒவ்வொருவரது சருமம் வெவ்வேறு வகையானது.

    எண்ணெய் சருமம் கொண்ட நபர்கள் முகப்பரு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், சாலிசிலிக் அமிலம், ரெட்டினோல் அல்லது நியாசினமைடு கொண்ட சீரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு ஹைலூரோனிக் அமிலம் அடங்கிய சீரம் சிறப்பானது. இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. சாதாரண சரும வகையைக் கொண்டவர்களுக்கு வைட்டமின் "சி" அல்லது "ஹைலூரோனிக்" அமிலம் அடங்கிய சீரம் சிறந்ததாகும்.

    சருமத்தின் வகை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அதனை பயன்படுத்துபவரின் வயதும் சரும பராமரிப்பு சாதனங்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்குவகிக்கிறது.

    சீரம் பொதுவாக வயதான தோற்றத்தை குறைக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே நீங்கள் டீனேஜராக இருந்தால், சரும பராமரிப்பிற்கு க்ளென்சர், மாய்ஸ்சரைசர் மற்றும் சன் ஸ்கிரீன் போன்றவற்றைப் பயன்படுத்தினாலே போதும்.

    இருபது வயதை தொடப்போகும் பெண்கள், "நியாசினமைடு" அல்லது "ஹைலூரோனிக்" அமிலம் கலந்த சீரத்தை பயன்படுத்தலாம். இருபது வயதிற்கு மேல் மற்றும் முப்பது அல்லது நாற்பது வயதானவர்கள் "ரெட்டினோல்" அடங்கிய சீரம் வகைகளை தேர்வு செய்வது உங்கள் வயதான தோற்றத்தை மாற்ற உதவும்.

    சருமத்தின் பிரச்சனைகளை பொறுத்து தான் பராமரிப்பு சாதனங்களை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக சீரற்ற சரும நிறம், கரும்புள்ளி, முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் "ஆல்ஃபா-ஹைட்ராக்ஸி" அமிலங்களான கிளைகோலிக் அமிலம் அல்லது லாக்டிக் அமிலம், அசெலாயிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் கோஜிக் அமிலம் ஆகியவை அடங்கிய சீரம் வகைகளை பயன்படுத்தலாம்.

    வயதான தோற்றங்களை மறக்க விரும்புவோருக்கு ரெட்டினோல் சீரம் சிறந்த தேர்வாகும். கரும்புள்ளிகள் அல்லது வெண் புள்ளிகளைக் கொண்ட சருமத்திற்கு ரெட்டினோல் அல்லது சாலிசிலிக் அமிலம் நிறைந்த சீரம் சிறப்பான பலனளிக்கக்கூடும்.

    மேற்கூறிய சரும பிரச்சனைகள் அனைத்தும் இருந்தால், ஒரே நேரத்தில் அனைத்து விதமான சீரத்தையும் பயன்படுத்த வேண்டாம். அது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக பின்விளைவுகளை பெரிதாக்கக்கூடும்.

    எனவே வயது, சரும வகை, சரும பிரச்சனை ஆகியவற்றை பொருத்து சரியான மூலப்பொருட்களைக் கொண்ட சீரத்தை தேர்வு செய்யுங்கள். அதேபோல் சரும பிரச்சனைகள் சம்பந்தமான பராமரிப்பு சாதனம் அல்லது சிகிச்சை மேற்கொள்ளும் முன்பு நாம் தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

    • சந்தனம் பேஸ் பேக் முகம் வெள்ளையாகவும், பொலிவோடும் இருக்க உதவும்.
    • சருமத்திற்கு சந்தனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என பார்க்கலாம்.

    சந்தனத்தைக் கொண்டு முகத்திற்கு பேஸ் பேக் போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாகவும், பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும். இங்கு வெள்ளையாவதற்கு சந்தனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது.

    சந்தனப் பவுடரை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடு இருக்கும்.

    கற்றாழை ஜெல்லில் 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் தடவி உலர வைத்துக் கழுவ வேண்டும். இதனால் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமம் குணமாகும்.

    சந்தனப் பவுடர் மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, அதை பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி காய வைத்து கழுவ, முகம் பிரகாசமாக இருக்கும்.

    பருக்கள் அதிகம் உள்ளவர்கள், சந்தனப் பொடி மற்றும் வேப்பிலைப் பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், அதில் உள்ள பாக்டீரியல் தன்மை, பருக்களைப் போக்கி, முகத்தைப் பொலிவாக்கும்.

    சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அதிலும் இதை தினமும் முகத்திற்கு போட்டு வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

    சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற ஸ்கரப் செய்ய வேண்டும். அதிலும் சந்தனப் பொடியுடன், கடலை மாவை சேர்த்து, பால் ஊற்றி பேஸ்ட் செய்து, 20-30 நிமிடம் கழித்து தேய்த்து கழுவ, முகம் அழகாக ஜொலிக்கும்.

    • பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன.
    • பூக்கள் எவ்வாறு முக அழகை இளமையாக வைக்க உதவுகிறது என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

    ஒவ்வொரு பூக்களும் பல்வேறு நன்மைகளை கொண்டது. இவை உடல் ஆரோக்கியம் முதல் முக அழகு வரை பராமரிக்க பயன்படுகின்றது. பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இவற்றை முகத்தில் தடவினால் முகம் இளமையாக மாறுவதோடு, மினுமினுப்பாகவும் பொலிவு தரும். பூக்கள் எவ்வாறு முக அழகை இளமையாக வைக்க உதவுகிறது என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

    சாமந்தி பூ :- இந்த மலர்கள் அதிக நன்மைகளை கொண்டது. இவை வெயிலினால் கலை இழந்த முகத்தை முற்றிலுமாக அழகும்பெற செய்கிறது.

    தேவையனவை :- சாமந்தி பூக்கள் 3, பால் 1 டீஸ்பூன், யோகர்ட் 1 டீஸ்பூன், துருவிய கேரட் 2 டீஸ்பூன்

    செய்முறை :- முதலில் துருவிய கேரட்டையும், சாமந்தி இதழ்களையும் ஒன்று சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பால் மற்றும் யோகர்ட் சேர்த்து முகத்தில் பூசவும். பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் மினுமினுக்க செய்யும். அத்துடன் கலை இழந்த முகத்தில் புது பொலிவு கிடைக்கும்.

    மல்லிகை பூ :- வறண்ட சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள இந்த மல்லிகை உதவுகிறது. மல்லிகை பூக்கள் சிறிது எடுத்து கொண்டு அவற்றை நன்கு அரைத்து கொள்ளவும். பின் அவற்றுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் மிகவும் மென்மையாகும். அத்துடன் முகத்தில் உள்ள சொரசொரப்புகளை நீக்கி விடும்.

    ரோஜா பூ :- தேவையானவை :- ரோஜா பூ 1, பால் 1 டீஸ்பூன், கோதுமை தவடுகள் 1 டீஸ்பூன்

    செய்முறை :- முதலில் ரோஜா பூவின் இதழை நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் கோதுமை தவடுகளையும் சேர்த்து அரைத்து கொண்டு பால் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் மிகவும் அழகு பெரும்.

    தாமரை பூ :- தேசிய மலரான தாமரையில் அதிக படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இது உடலில் செல்களை மறு உற்பத்தி செய்து என்றும் இளமையாக வைக்கிறது. அத்துடன் முகத்தை மிகவும் அழகாக மாற்றுகிறது.

    தேவையானவை :- ஆலிவ் எண்ணெய் 2 டீஸ்பூன், தாமரை மலர் 1, பால் 2 டீஸ்பூன்

    செய்முறை :- வெள்ளை தாமரை இதழ்களை முதலில் தனியாக நறுக்கி கொள்ளவும். பிறகு அவற்றுடன் பால், ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து கொண்டு முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் இளமை பெரும்.

    செம்பருத்தி பூ :- பொதுவாக செம்பருத்தி பூ முடி பிரச்சினையை போக்கும் என்பதுதான் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவற்றுடன் முகத்தின் அழகையும் இது பராமரிக்க பெரிதும் பயன்படுகிறது.

    தேவையானவை :- 1 செம்பருத்தி பூ, 1 டீஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் முல்தானி மட்டி, 1 ரோஜா பூ

    செய்முறை :- முதலில் ரோஸ் மற்றும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தயிர் மற்றும் முல்தானி மட்டி கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்த இந்த முக பூச்சை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் மிருதுவாகும். அத்துடன் கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவற்றையும் நீக்கி விடும்.

    • உருளைக்கிழங்கு, இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட்.
    • தக்காளியில் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.

    வயது 30-யைத் தாண்டியதும், நம் சருமத்துக்குக் கீழே உள்ள கொழுப்புகள் கரையும். இதனால் சருமம் தளர ஆரம்பிக்கும். முகத்தில் சுருக்கங்கள் தோன்றும் என்பதுடன், முகத்தில் உள்ள குறுத்தெலும்புகள் தேய்ந்து வடிவமும் மாறும். இப்படியாகத்தான் வயதாகும் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ளும். இத்துடன், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, தூக்கமின்மை, மன அழுத்தம், மாசு போன்ற காரணங்களும் சேரும்போது, 'ஏஜிங்' விரைவுபடுத்தப்படுகிறது''. வயதாகும் தோற்றத்தை தள்ளிப்போடுவதற்கான இயற்கையான அழகுப் பராமரிப்பு வழிகளை பார்க்கலாம்.

    1. ''விளக்கெண்ணெய், சருமப் பிரச்னைக்கான சிறப்பான தீர்வைக் கொடுக்கவல்லது. தினமும் இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்துவர, சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

    2. வாரம் ஒருமுறை, சில அன்னாசிப் பழத்துண்டுகளை அரைத்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ, அதில் உள்ள புரொமிலைன் என்ஸைம் இறந்த செல்களை நீக்கி இளமைக்கான பளபளப்பை சருமத்துக்குத் தரும்.

    3. உருளைக்கிழங்கு, இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட். வயதாவதால் முகத்தில் ஆங்காங்கே பழுப்பு நிறப் புள்ளிகள் தென்படலாம். அதை நீக்கி சரும நிறத்தை சீராக்க உருளைக்கிழங்கு ஜூஸ் அல்லது கூழை முகத்தில் பேக் போட்டுக் கழுவலாம்.

    4. கரும்புச்சாறுடன் மஞ்சளைக் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்துக்கு பேக் போட்டு வர, முதுமைத் தோற்றம் எளிதில் அண்டாது. கண்களின் கீழ் தோன்றும் கருவளையத்தை நீக்கவும், அந்த இடத்தில் சருமம் தளர்வதைத் தடுக்கவும் அங்கு தேனைத் தடவி வரலாம்.

    5. காய்ச்சி ஆறிய பாலுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து இரவு உறங்கச்செல்லும் முன் நெற்றி, கண்களின் ஓரம் என முகத்தில் சுருக்கங்கள் உள்ள இடங்களில் தடவி, காலையில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவிவர, சுருக்கங்கள் மறையும்.

    6 கடலை மாவு, தேன் மற்றும் பால் கலந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்கி இளமைத் தோற்றம் தரும்.

    7 நல்லெண்ணய் மற்றும் பாதாம் எண்ணெயை சம அளவு எடுத்து, இரவு முகத்தில் தேய்த்து ஊறவைத்து, காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர சருமத்தின் ஈரப்பதம் மீட்கப்படும்; வறட்சியும் தொய்வும் தவிர்க்கப்படும். இதேபோல ஆலிவ் ஆயிலையும் இரவில் முகத்தில் தடவி காலையில் கழுவலாம்.

    8 உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, சரும பளபளப்புக்கான சுலபமான வழி. அது இளமைத் தோற்றத்தை நீட்டிக்கச் செய்யும்.

    9 கேரட், ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ள, அது வயதானாலும் முதுமையைத் தள்ளிவைக்கும்.

    10 தக்காளியில் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. தக்காளிச் சாறுடன் ஆலிவ் ஆயில் கலந்து முகம், கழுத்து, கை, கால் என அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதைத் தொடர்ந்து செய்துவர, உங்கள் வயதை எப்போதும் 5, 10 வருடங்கள் குறைத்தே மதிப்பிட வைக்கலாம்!''

    • நீங்கள் சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன் அதன் அளவுகோல்களை அறிந்து கொள்ளுங்கள்.
    • சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன் நீங்கள் சரிபார்க்க வேண்டிய மூன்று விஷயங்கள் இங்கே.

    சன்ஸ்கிரீன் என்பது ஒரு வேதியியல் பொருள் ஆகும், இது சூரிய ஒளி கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க செயல்படுகிறது. ஏற்கனவே சருமத்தில் நுழைந்த சூரிய கதிர்வீச்சை உறிஞ்சுவதற்கு சருமத்தின் மேல் அடுக்கில் ஊடுருவி செயல்படுவதே இது. எனவே, கதிர்வீச்சு உங்கள் உடலால் உறிஞ்சப்படுவதற்கு முன்பு சன்ஸ்கிரீனால் உறிஞ்சப்படும். நீங்கள் அதை வாங்க முடிவு செய்வதற்கு முன், சிறந்த சன்ஸ்கிரீன் அளவுகோல்களை அறிந்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யாதீர்கள், இதனால் அதிகபட்ச பாதுகாப்பு கிடைக்கும். சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன் நீங்கள் சரிபார்க்க வேண்டிய மூன்று விஷயங்கள் இங்கே.

    1. பாதுகாப்பு நிலை

    UVA மற்றும் UVB கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கக்கூடிய ரசாயன சன்ஸ்கிரீன்களைத் தேர்வுசெய்க. காரணம், இந்த இரண்டு வகையான கதிர்கள் பல்வேறு தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இரண்டு வகையான கதிர்களிலிருந்து பாதுகாக்க நீங்கள் சன்ஸ்கிரீன் என்று பெயரிடப்பட்ட போர்டு ஸ்பெக்ட்ரம் தேர்வு செய்ய வேண்டும்.

    ஏனென்றால், இந்த லேபிள் இல்லாத தயாரிப்புகள் சருமத்தை வெயிலிலிருந்து மட்டுமே பாதுகாக்கின்றன, புற்றுநோய் அல்லது தோல் வயதானவை அல்ல. கூடுதலாக, அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜியின் பரிந்துரைகளின்படி, நீங்கள் வாங்கும் சன்ஸ்கிரீன் குறைந்தது UVB 30 என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதிக எஸ்பிஎஃப் எண், அதிக பாதுகாப்பு உங்களுக்கு கிடைக்கும்.

    2. சன்ஸ்கிரீனின் உள்ளடக்கம்

    சன்ஸ்கிரீன்களில் தொடர்ச்சியான செயலில் உள்ள ரசாயனங்கள் உள்ளன, அவை சருமத்திற்கு புற ஊதா கதிர்வீச்சிற்கான வடிப்பான்களாக செயல்படுகின்றன. உள்ளடக்கங்களில் ஆக்டில்க்ரிலீன், சுலிசோபென்சோன், ஆக்டினாக்ஸேட், ஆக்டிசலேட், ஆக்ஸிபென்சோன், ஹோமோசலேட், ஹெலியோப்ளெக்ஸ், 4-எம்பிசி, மெக்ஸோரில் எஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ்எல், டைனோசார்ப் எஸ் மற்றும் எம், உவினுல் டி 150, மற்றும் உவினுல் ஏ பிளஸ் ஆகியவை அடங்கும். இந்த சேர்மங்களிலிருந்து தயாரிக்கப்படும் அனைத்து வகையான சன்ஸ்கிரீன்களும் பொதுவாக நிறமற்றவை, மேலும் நீங்கள் ஒப்பனை பயன்படுத்துவதற்கு முன்பு பயன்படுத்தலாம். இருப்பினும், நீங்கள் உணர்திறன் வாய்ந்த சருமம் மற்றும் சில தோல் பிரச்சினைகள் இருந்தால், பாரா-அமினோபென்சோயிக் (பாபா), டையோக்ஸிபென்சோன், ஆக்ஸிபென்சோன் அல்லது சுலிசோபென்சோன் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் சன்ஸ்கிரீன்களைத் தவிர்க்கவும். கூடுதலாக, ஆல்கஹால், மணம் மற்றும் அதிகப்படியான பாதுகாப்புகளைக் கொண்டிருக்கும் சன்ஸ்கிரீன்களையும் தவிர்க்கவும்.

    3. உங்கள் தோல் வகையை சரிசெய்யவும்

    உங்களிடம் உள்ள தோல் வகைகளுடன் சன்ஸ்கிரீனின் தேவையை சரிசெய்வது சிறந்த சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு முக்கியமான வழியாகும். காரணம் வெவ்வேறு தோல் வகைகளும் உங்களுக்குத் தேவையான பல்வேறு வகையான சன்ஸ்கிரீன்கள். சான்றாக, எண்ணெய் மற்றும் முகப்பரு பாதிப்புக்குள்ளான தோலுக்கு எண்ணெய் அல்ல, நீர் சார்ந்த சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். இது சன்ஸ்கிரீன் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்பட்டு துளைகளை அடைக்காது. பொதுவாக இந்த வகை சன்ஸ்கிரீன் ஜெல் வடிவில், தடிமனான கிரீம் அல்ல. உலர்ந்த சருமம் இருந்தால், சருமத்தை ஈரப்பதமாக்க உதவும் எண்ணெய் சார்ந்த சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்கவும்.

    சன்ஸ்கிரீன் பயன்படுத்த சரியான வழி

    உங்கள் சருமத்திற்கு சிறந்த சன்ஸ்கிரீன் கிடைத்த பிறகு, அடுத்த கட்டமாக அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும். சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே சன்ஸ்கிரீன்கள் நன்றாக வேலை செய்யும். எனவே, சூரிய ஒளியை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் வெளிப்படுத்துவதற்கு 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கழுத்து மற்றும் காதுகளின் முன் மற்றும் பின்புறம் இதில் அடங்கும். கூடுதலாக, கடற்கரைக்குச் செல்லும்போது மட்டுமல்லாமல், வெப்பமான வெயிலில் நீங்கள் வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். அது சூடாக இல்லாதபோதும் நீங்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். காரணம், தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சில் 80 சதவீதம் மேகமூட்டமான வானிலை இருந்தபோதிலும் மேகங்களுக்குள் ஊடுருவ முடிகிறது.

    • கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள்.
    • கற்றாழையைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள்.

    ஒவ்வொரு வரும் மற்றவர்கள் முன்பு அழகாக காட்சியளிக்க வேண்டுமென்று நினைப்போம். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வோம். குறிப்பாக சற்று கருப்பாக இருப்பவர்கள், வெள்ளையாவதற்கு பல முயற்சிகளை எடுப்பார்கள். மேலும் வேறு வழிகள் ஏதேனும் உள்ளதா என்றும் தேடுவார்கள். நீங்களும் அப்படி வெள்ளையாக வழிகளைத் தேடுபவரா? அப்படியெனில் எளிதில் கிடைக்கும் கற்றாழையைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள்.

    கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகளும் விரைவில் நீங்கும். சரி, இப்போது வெள்ளையாவதற்கு கற்றாழையைக் கொண்டு எப்படியெல்லாம் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம்.

    1 . சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமைகள் அகலும்.

    2 . ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவும் முன், சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முதுமைப் புள்ளிகள் போன்றவை மறைந்து, முகமும் பொலிவோடு காணப்படும்.

    3 . இந்த பேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு பொருந்தமானவை. அதற்கு கற்றாழை இலையை எடுத்து, அதன் கூர்மையான முனைகளை கத்தியால் நீக்கி விட்டு, நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

    4 . உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால் கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் ரோஸ் ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக் முகத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, முகத்தின் பொலிவை அதிகரிக்கும்.

    5 . இந்த பேஸ் பேக் வறட்சியான சருமத்திற்கு ஏற்றது. அதற்கு கற்றாழை ஜெல்லுடன், காட்டேஜ் சீஸ், பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

    6 . இந்த பேஸ் பேக் சரும நிறத்தை அதிகரிப்பதோடு, முகத்தை புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் வெளிக்காட்டும். அதற்கு கற்றாழை ஜெல்லுடன் மாம்பழ கூழ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    7 . வெள்ளரிக் காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.

    • சருமத்தை அதிக அளவில் வறட்சி அடைய வைத்தாலும், சருமத்தில் சுருக்கங்களானது ஏற்படும்
    • சருமத்தை வாரம் ஒருமுறை அல்லது அன்றாடம் வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்கள் கொண்டு பராமரித்து வரலாம்.

    வயதாகிவிட்டால் தான் சருமமானது சுருக்கத்துடன் காணப்படும். ஆனால் தற்போது 20 வயதிலேயே சருமம் சுருக்கமடைந்து முதுமைத் தோற்றத்தைத் தருகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சரியான சரும பராமரிப்பு இல்லாதது, முகத்தை அழுத்தியவாறு தூங்குவது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவைகள் முக்கியமானவையாகும்.

    சருமத்தை அதிக அளவில் வறட்சி அடைய வைத்தாலும், சருமத்தில் சுருக்கங்களானது ஏற்படும். எனவே சருமத்தை வறட்சியடையாமல் பர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், வாரம் ஒருமுறை அல்லது அன்றாடம் சருமத்தை வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்கள் கொண்டு பராமரித்து வந்தால், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, சருமம் சுருக்கமடைவதைத் தடுக்கலாம்.

    வாழைப்பழ பேஸ் பேக்

    இதற்கு வாழைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் தோலுரித்து நன்றாக மசிக்கவும். பின்னர் இந்த வாழைப்பழ பேஸ்ட்டை சீராக முகத்தில் தடவவும். அதன் பிறகு, சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்க விட்டு உலர்த்த பிறகு சுத்தமான நீரினால் கழுவவும். இந்த வாழைப்பழ மாஸ்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினாலே, நீங்கள் நல்ல பலனைக் காணத் தொடங்குவீர்கள். வாழைப்பழத்தில் நல்ல அளவு வைட்டமின் ஏ, பி6 மற்றும் சி நிறைந்துள்ளதால், முகச் சுருக்கங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

    தயிர் பேஸ் பேக்

    தயிர் மாஸ்கிற்கு இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேன், ஒரு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து கழுவவும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. அதே நேரத்தில், எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன, அவை உங்கள் சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது.

    தேங்காய் எண்ணெய்

    தேங்காய் எண்ணெய் இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. தினமும் இரவில் தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சரும வறட்சியிலிருந்து விடுபடலாம். ஆனால் எண்ணெய் சருமத்தில் இந்த செய்முறையை முயற்சிக்காதீர்கள்.

    அரிசி பேஸ் பேக்

    இதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரோஸ் வாட்டர் மற்றும் பால் கலக்கவும். பின்னர் இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முழு முகத்திலும் தடவி, சுமார் 20 நிமிடங்கள் கழித்து, சுத்தமான நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை தடவுவது நல்லது. அரிசி மாவில் முதுமையைத் தடுக்கும் பண்புகள் இருப்பதால், கொரிய தோல் பராமரிப்புப் பொருட்களில் அரிசி மாவு அல்லது தண்ணீர் கண்டிப்பாக சேர்க்கப்படும்.

    தினமும் இரவில் படுக்கும் முன் கிளிசரின், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டரை சரிசமமாக எடுத்து கலந்து, முகத்தில் தடவி வர வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான சத்துக்களானது கிடைத்து சரும சுருக்கங்களானது மறையும்.

    அன்னாசிப் பழத்தைக் கொண்டு முகத்தை தேய்த்து, 10-15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சரும சுருக்கங்களானது நீங்கிவிடும்.

    • அழகு நிலையம் சென்றால் நிறைய பணம் செலவாகும்.
    • பெண்கள் தங்கள் சரும அழகை மற்றும் நிறத்தை மேம்படுத்த இயற்கை வழிகளை நாடுகிறார்கள்.

    ஒவ்வொருவருமே தங்களின் சரும நிறத்தை மேம்படுத்த முயற்சிப்போம். அதற்காக நிறைய பேர் அழகு நிலையங்களுக்குச் சென்று பேஸ் பேக், ப்ளீச்சிங், ஸ்க்ரப் என்று பலவற்றை மேற்கொள்வதுண்டு. அழகு நிலையம் சென்றால் அங்கு நிறைய பணம் செலவாகும். எனவே அனைவராலும் அழகு நிலையங்களுக்கு செல்ல முடியாது. இது தவிர தற்போது அலுவலகத்தில் உள்ள வேலைப்பளுவால் நிறைய பேருக்கு அழகு நிலையம் செல்வதற்கு நேரம் கிடைப்பதில்லை.

    இதனால் நிறைய பெண்கள் தங்கள் சரும அழகை மற்றும் நிறத்தை மேம்படுத்த இயற்கை வழிகளை நாடுகிறார்கள். குறிப்பாக வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே சருமத்திற்கு பேஸ் பேக் போட விரும்புகிறார்கள். சரும நிறத்தை அதிகரிக்கும், பாதுகாக்கும் நிறைய பொருட்கள் நமது வீட்டில் உள்ளன. குறிப்பாக நாம் சாப்பிடும் பொருட்களை கொண்டே நமது சரும நிறத்தை அதிகரிக்கும், பாதுகாக்கும் பேஸ் பேக்குகளைப் போடலாம்.

    வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தைப் பாதுகாக்கும் பேஸ்பேக்குகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    * பாதி எலுமிச்சைப் பழத்தின் சாறு, அரை வெள்ளரிக்காய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மாவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.

    பலன்கள்: எண்ணெய்ப் பசை நீங்கி, முகம் பளபளக்கும். பருக்கள் நீங்கும். முகம் பளபளப்புடன் காணப்படும்.

    * ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கற்றாழை (Aloe vera) ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

    பலன்கள்: இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், வறண்ட தன்மை நீங்கி முகத்துக்குப் பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறண்ட தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.

    * இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால், ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மற்றும் ஒரு பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். பிறகு இந்தக் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

    பலன்கள்: நேச்சுரல் மாய்ஸ்ச்சரைசர் தரும் பேக் இது. மிருதுவாக, மென்மையாகச் சருமம் மாறும். சூரியக் கதிர்களால் பாதித்த சருமத்துக்கு மிகவும் நல்லது.

    * ஒரு டேபிள்ஸ்பூன் தயிரை, ஒரு டீஸ்பூன் மைதா மாவுடன் நன்கு கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரில் முகத்தைக் கழுவலாம்.

    பலன்கள்: இந்த வகை ஃபேஸ்பேக் வறண்ட மற்றும் எண்ணெய் சருமத்தினருக்கு ஏற்றது. சருமம் மிருதுவாகும். பளிச்சென்று சருமம் மாறும். இன்ஸ்டன்ட் பொலிவு பெற இந்த பேஸ் பேக் பெஸ்ட் சாய்ஸ்.

    * ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு பெரிய பழுத்த தக்காளி பழம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.

    பலன்கள்: முகம் பளிச்சென மாறும். சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். எண்ணெய் பசையை நீக்கும். சிறந்த டோனராகச் செயல்படும். இயற்கையாகவே பளபளப்பான சருமம் பெற உதவும்.

    * ஒரு கப் பழுத்த பப்பாளி, ஒரு கப் பழுத்த வாழைப்பழம், ஒரு டேபிள்ஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றைத் தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரால் முகத்தைக் கழுவலாம்.

    பலன்கள்: சருமம் புத்துணர்வாகும். ஈரப்பதத்துடன், மென்மையாகவும் இளமையாகவும் காணப்படும். இந்த வகை ஃபேஸ் பேக்கை அடிக்கடி முகத்தில் பூசி வந்தால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

    * ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாற்றைக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.

    பலன்கள்: முகம் பளிச்சென மாறும். இந்த பேக்கை வாரத்தில் நான்கு முறை தொடர்ந்து பூசினால் முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகள் மறையும்.

    • எல்லா நேரமும் சன்ஸ்கிரீனை குறைவான அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.
    • சன்ஸ்கிரீனை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆபத்துக்களை குறைக்கலாம்.

    சூரியனிடம் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்திற்கும், உடல் பாகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனை தவிர்க்க சருமத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்குவது அவசியம். ஏனெனில் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக சருமத்தை தாக்குவது முன்கூட்டியே வயதான தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். சரும புற்றுநோய் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய ஆபத்துக்களில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு சன்ஸ்கிரீன் உபயோகமாக இருக்கும். ஆனால் எல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளாது.

    அது சிலருக்கு சருமத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சன்ஸ்கிரீனில் சேர்க்கப்படும் ரசாயனக்கலவைதான் பக்கவிளைவுகளுக்கு காரணமாக அமையும். புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க தோல் பகுதியை சுற்றி பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது மிருதுதன்மை வாய்ந்த சருமம் கொண்டவர்களை பாதிக்கும். ஆனால் சன்ஸ்கிரீனை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆபத்துக்களை குறைக்கலாம்.

    * எல்லா நேரமும் சன்ஸ்கிரீனை குறைவான அளவில்தான் உபயோகிக்க வேண்டும். குறைந்த அளவைக்கொண்டே வெயில் படும் அனைத்து பாகங்களிலும் தடவிவிட வேண்டும்.

    * சன்ஸ்கிரீனை பூசிக்கொண்ட உடனே வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே சன்ஸ்கிரீனை பூசிக்கொள்ள வேண்டும்.

    * உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியாகிக்கொண்டிருந்தால் ஐந்து மணி நேரம் கழித்து மீண்டும் சன்ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும்.

    * முகப்பரு பாதிப்புக்கு ஆளானவர்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை தவிர்த்துவிடலாம். ஏனெனில் அது முகப்பருவின் வீரியத்தை அதிகப்படுத்திவிடும். அவர்கள் எண்ணெய் பசை இல்லாத அழகு சாதன பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். அதுபோல் உடலில் காயம், தடிப்பு உள்ளிட்ட சரும பிரச்சினைகள் இருந்தாலும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கக்கூடாது.

    * சன்ஸ்கிரீனில் இருக்கும் ரசாயனங்கள் சிலருடைய சருமத்தை கடுமையாக பாதிக்கும். சருமம் சிவத்தல், வீக்கம், அரிப்பு, தடிப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். வாசனை திரவியங்களை உள்ளடக்கிய சன்ஸ்கிரீன்கள் சிலருக்கு ஒவ்வாமை பாதிப்பை ஏற்படுத்தும். சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன்பு தோல் மருத்து வரிடம் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

    * கண்களுக்கு அருகே சன்ஸ்கிரீனை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கண்களில் எரிச்சல், அரிப்பு, வெளிச்சத்தை பார்த்தால் கண் கூச்சம் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும். சன்ஸ்கிரீனில் ரசாயனத்தன்மை அதிகம் இருந்தால் கண் பார்வைத்திறன் பாதிப்புக்குள்ளாகுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    * சன்ஸ்கிரீனில் உள்ள சில பொருட்கள் மார்பக செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    * குழந்தைகளின் சருமம் மிருதுவானது என்பதால் சன்ஸ்கிரீன் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் குழந்தைகளுக்கு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

    * சன்ஸ்கிரீனை பயன்படுத்தியதும் சருமத்தில் கொப்பளங்கள், வலி, தடிப்புகள் போன்ற அறிகுறிகள் சிலருக்கு தோன்றும். அவர்கள் சன்ஸ்கீரினை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    • பால் சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்யும் சிறந்த க்ளென்சிங் என்று சொல்லலாம்.
    • எல்லா சருமத்திற்கும் ஏற்ற பாலை நீங்கள் எப்படி எதற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

    பாலில் வைட்டமின்பி, ஹைட்ராக்ஸி அமிலங்கள், கால்சியம், சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இதை சருமத்தில் பயன்படுத்தும் போது அவை நாள் முழுக்க சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். முகப்பரு இருக்கும் போது கூட வெறும் பாலை கொண்டே பதமாக தோல் பாதிப்படையாமல் சுத்தமாக்கலாம். எல்லா சருமத்திற்கும் ஏற்ற பாலை நீங்கள் எப்படி எதற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

    பால் சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்யும் சிறந்த க்ளென்சிங் என்று சொல்லலாம். முகத்தில் இருக்கும் இறந்த செல்களை சரும பாதிப்பில்லாமல் வெளியேற்றுகிறது. சரும சுத்தம் என்னும் போது அவை முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவற்றையும் வரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது என்பதால் இவை எப்போதும் முகத்துக்கு நன்மை செய்யகூடியது.

    பச்சை பால் உங்கள் சருமத்திற்கு பல அதிசயங்களை செய்யும். இந்த காரணத்திற்காக, உங்கள் தோல் பராமரிப்பு தேவைகளுக்கு பச்சை பால் பயன்படுத்த அழகு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

    மெல்லிய துணி அல்லது பஞ்சை காய்ச்சாத பாலில் நனைத்து சருமம் முழுவதும் படரும் படி தேய்க்க வேண்டும். தினமும் செய்து வந்தால் மேக் அப் தேவையில்லை. பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சக்திவாய்ந்தது. சருமத்துக்கு பொலிவை அளிக்க கூடியது. அதனாலேயே இதை இயற்கை மாய்சுரைசர் என்று அழைக்கிறோம். சருமத்தில் ஈரப்பசை இல்லாவிட்டால் அவை வறட்சிக்குள்ளாகும். அதனால் எப்போதும் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உரிய பராமரிப்பு செய்ய வேண்டியிருக்கும். இது உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது, நீரேற்றத்தை அதிகரிக்கிறது, சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் மற்றும் வயதானதை குறைக்கிறது.

    பச்சை பால் மற்றும் ரோஸ் வாட்டர் பேஸ் பேக் சரும டோனராக செயல்படுகிறது. சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது, சருமத்தை இறுக்கமாக்குகிறது, சரும தொய்வைத் தடுக்கிறது மற்றும் வயதானதைத் தடுக்கிறது. இரண்டு டேபிள்ஸ்பூன் பச்சை பாலில் நான்கு முதல் ஐந்து சொட்டு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். உங்கள் முகத்தை சுத்தம் செய்த பிறகு ஒரு பருத்தி பந்தைப் பயன்படுத்தி இந்த கலவையை முகத்தில் போடவும். 15 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை சாதாரண அல்லது வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த முறையை இரவில் போட்டு விட்டு காலையிலேயும் கழுவலாம்.

    காய்ச்சாத பால் 1 தேக்கரண்டி எடுத்து பஞ்சு உருண்டைகளை அதில் 2 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு உங்கள் சருமம் முழுவதும் முகம், கண்கள் சுற்றி, வாய்ப்பகுதியைச் சுற்றி, கழுத்து போன்ற இடங்களில் தடவி கொள்ளுங்கள். இவை காய்ந்ததும் நன்றாக உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் மூன்று முறையாவது இதை செய்து வந்தால் கோடையிலும் முகம் ஓஹோ அழகுதான்.

    • கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
    • கிரீன் டீ தேயிலையை ஊற வைத்து பின் ஆவி பிடித்தால் முகத்திற்கு நல்லது.

    சூரியனில் இருந்து வெளியாகும் புறஊதா கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இக்கதிர்கள் சருமத்தில் எரிச்சல், குழிகள், கருமை போன்றவற்றை ஏற்படுத்தும். கிரீன் டீயை முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் இந்த பாதிப்புகளை சரி செய்யலாம்.

    கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பல்வேறு வழிகளில் தோல் பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

    இது பல அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்களில் காணப்படும் ஒரு சில பொருட்களில் ஒன்றாகும். இதை பயன்படுத்துவதால் முகத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

    * கிரீன் டீயுடன் சீனி மற்றும் தேன் சேர்த்து முகத்தில் பூசி ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவடைந்துக் காணப்படும்.

    * கிரின் டீ தயாரித்து அந்த கலவையை எடுத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து, கட்டியானதும் முகத்தில் பூசி வரவேண்டும். இதை தினமும் செய்தால் நல்லது.

    * கடலை மாவு, கிரீன் டீ மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் பூசி, காய்ந்ததும் தண்ணீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக் முகப்பருக்கள் வருவதை தடுக்க உதவும்.

    * இரவு தாமதமாக தூங்குவதாலும், அதிக வேலையினாலும் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உண்டாகக்கூடும். இதனை போக்க கிரீன் டீ பையை தண்ணீரில் ஊற வைத்து எடுத்த பின் கண்களுக்கு மேல் வைத்து 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். இதனால் கண்களில் உள்ள வீக்கங்கள் குறைவதோடு சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.

    * சூடான தண்ணீரில் கிரீன் டீ தேயிலையை ஊற வைத்து பின் ஆவி பிடித்தால் முகத்திற்கு நல்லது. மேலும் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கும்.

    * கிரீன் டீயை முகத்திற்கு தொடர்ந்து எட்டு வாரங்கள் அப்ளை செய்வதன் மூலம், முகத்தில் உள்ள எண்ணெய் பசையானது குறையும். மேலும், எதிர்காலத்தில் முகப்பரு வருவது போன்ற பிரச்சனைகளும் குறைக்கப்படுகின்றன.

    கிரீன் டீ ஆனது சருமத்தை இறுக செய்கிறது. இதனால் சருமத்துளைகள் அடைக்கப்படுகின்றன. டீ பேக்கை சருமத்திற்கு போடுவதன் மூலம் சருமத்தின் நிறம் மேம்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பானாகவும் பயன்படுகிறது.

    • அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • முல்தானி மிட்டியுடன் சமையலறை பொருட்களை சேர்த்து பேஸ் பேக்குகளை நீங்கள் உருவாக்கலாம்.

    சரும மினுமினுப்புக்கும் பாதுகாப்பிற்கும் உங்களுக்கு உதவக்கூடிய இயற்கையான பொருட்கள் நிறைய உள்ளன. அதில் ஒன்றான முல்தானி மிட்டி ஒரு இயற்கையான களிமண் மூலப்பொருள் ஆகும். இது அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பண்டைய ஆயுர்வேத மூலிகை மருந்து இயற்கை தாதுக்களால் நிரப்பப்பட்டுள்ளது. இது முகப்பரு, கரும்புள்ளிகள், சரும பிரச்சனைகள் மற்றும் திறந்த துளைகளை குறைக்க உதவுகிறது. தூள் வடிவ பேஸ்டாகப் பயன்படுத்தும்போது, அது சருமத்தை மெதுவாக வெளியேற்றி, மென்மையான, மிருதுவான சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது.

    முல்தானி மிட்டியுடன் உங்கள் சமையலறை பொருட்களை சேர்த்து பேஸ் பேக்குகளை நீங்கள் உருவாக்கலாம். உங்களுக்கு அழகான சருமத்தை வழங்கக்கூடிய முல்தானி மிட்டி பேஸ் பேக்குகளை பார்க்கலாம்.

    1 தேக்கரண்டி முல்தானி மெட்டி தூள், 1/4 கப் பால் (அதிக கொழுப்பு), ரோஸ் வாட்டர். அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். அதை முகத்தில் தடவவும். இந்த பேஸ் பேக்கை 10-15 நிமிடங்கள் அப்படியே முகத்தில் வைத்திருக்கவும். பின்னர், வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

    1 தேக்கரண்டி முல்தானி மிட்டி தூள், 1 தேக்கரண்டி சந்தன தூள், 2 தேக்கரண்டி தேங்காய் தண்ணீர், 2 தேக்கரண்டி பால். அனைத்து பொடிகள் மற்றும் திரவங்களை நன்கு கலந்து, நன்றாக பேஸ்ட் செய்யவும். சுத்தமான உங்கள் முகத்தில் தடவவும். அதை 10 நிமிடங்கள் அப்படியே விடவும். வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். சருமத்தை பிரகாசமாக்குவதற்கும், சுத்தப்படுத்துவதற்கும் மற்றும் ஈரப்பதமாக்குவதற்கும் இந்த கூலிங் ஃபேஸ் பேக் வேலை செய்கிறது.

    1 டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி தூள், 1 டேபிள் ஸ்பூன் சந்தன தூள், 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர். அனைத்து பொடிகளையும் ஒன்றாக கலந்து, தண்ணீரில் நன்றாக பேஸ்ட் செய்யவும். அந்த பேஸ்ட்டை முகப்பரு, பருக்கள் மீது தடவவும். 30-45 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்னர், உங்கள் முகத்தை வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவவும். சிறந்த முடிவுகளுக்கு, இந்த இயற்கையான பேஸ் பேக்கை மாதத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும். முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளை சரி செய்ய ஸ்பாட் ட்ரீட்மென்ட் பேக்கை பயன்படுத்தலாம்.

    1 தேக்கரண்டி முல்தானி மிட்டி தூள், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல். உங்கள் முல்தானி மிட்டியை சம பாகமாக கற்றாழை ஜெல்லுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். முல்தானி மிட்டி மற்றும் கற்றாழை ஜெல்லை சம பாகங்களாக எடுத்துக் கொள்ளவும். ஒரு மென்மையான பேஸ்ட் வரை நன்கு கலக்கவும். அதை உங்கள் முகத்தில் தடவவும். பேக் 10-15 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். பின்னர், வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். அனைத்து தோல் வகை சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு இந்த ஈரப்பதமூட்டும் மாஸ்க் உதவும்.

    ×