search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டவிரோதமாக மது விற்ற"

    • அனுமதியின்றி மதுவிற்றுக் கொண்டிருந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், ஈரோடு டவுண் போலீசார் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது பவானி, அந்தியூர், நம்பியூர் ஆகிய பகுதி களில் அரசு அனுமதியின்றி மதுவிற்றுக் கொண்டிருந்த சூரம்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் தண்டபானி (வயது 27),

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த சின்னையா (44), பவானி கண்ணாடி பாளை யத்தை சேர்ந்த அண்ணா துரை (52),

    அந்தியூர் கோ ட்டைமேடு பகுதியை சேர் ந்த சுரேஷ் குமார் (44), நம்பியூர் சத்யா நகரை சேர்ந்த செல்வராஜ் (63) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதைபோல் மரப்பம்பாளையம் அருகே மது அருந்திய குற்றத்திற்காக செங்கேரிபாளையம் சௌந்தரராஜன் (37) என்பவரை சிவகிரி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • சட்ட விரோதமாக அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 32 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக அரசு அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வரப்பாளையம், கடத்தூர், ஈரோடு டவுண், கோபி போலீசார் அந்தந்த காவல் நிலையத்திற்குட்பட்ட சரகங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சட்ட விரோத மாக மது விற்றுகொண்டி ருந்த பெரிய சோமூர் ஆனந்தன் (49), ஈரோடு மாரப்பன் தெரு பூங்கோதை (38), சிங்கம்பேட்டை சரவ ணன் (58),

    அம்மாபேட்டை சுப்பிரமணி (60), தர்மபுரியை சேர்ந்த அகிலன் (30), கருங்கல்பாளையத்தை சேர்ந்த கௌரி சங்கர் (37), ராயர்பாளையத்தை சேர்ந்த முருகேசன் (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடமிருந்த 32 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பொதுமக்களுக்கு இடையூராக மது அருந்தி கொண்டிருந்த கோபி பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் (25), தமிழ ரசு (23) ஆகியோரை போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×