என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "who sold alcohol illegally"

    • பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதேபோல் சோதனையிலும் ஈடுபட்டனர். இதில் ஈரோடு பஸ் நிலையம் அருகில் மது விற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ் (34) என்பவரை கைது செய்தனர்.

    கருங்கல்பாளையம் போலீசார் நடத்திய சோதனையில் சுண்ணாம்பு ஓடை பகுதியை சேர்ந்த மல்லிகா (42) என்பவரை கைது செய்தனர்.

    பவானி போலீசார் நடத்திய சோதனையில் சீனிவாசபுரத்தை சேர்ந்த சின்னமணி (34) என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல ஆப்பக்கூடல், அம்மாபேட்டை, கோபி, மலையம்பாளையம், கவுந்தப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • 51 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை ஏதேனும் நடை பெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் ஈரோடு டவுண், கோபி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது கொல்லம்பாளையம், சென்னிமலை, பவானி, பங்களாபுதூர், புளியம்பட்டி ஆகிய பகுதி களில் சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரம ணியன் (வயது 56),

    சென்னி மலை துரைசாமி (60), ஈரோடு அதியமான் நகர் மாதேஸ்வரன் (40), மும்பை யை சேர்ந்த கார்த்தி, பங்க ளாபுதூர் கௌதம் (26), கருவம்பாளையம் ராமசாமி (57), குள்ளம்பாளையம் நடராஜ் (31), எண்ணமங்கலம் சசி (39) ஆகியோரை போலீ சார் மடக்கி பிடித்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் இருந்த 51 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவ ர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் பெருந்துறை பகுதியில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்றுக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் ராஜ மாணிக்கம் (44) என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர் வைத்திருந்த 8 மது பாட்டி ல்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமதியின்றி மதுவிற்றுக் கொண்டிருந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், ஈரோடு டவுண் போலீசார் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது பவானி, அந்தியூர், நம்பியூர் ஆகிய பகுதி களில் அரசு அனுமதியின்றி மதுவிற்றுக் கொண்டிருந்த சூரம்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் தண்டபானி (வயது 27),

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த சின்னையா (44), பவானி கண்ணாடி பாளை யத்தை சேர்ந்த அண்ணா துரை (52),

    அந்தியூர் கோ ட்டைமேடு பகுதியை சேர் ந்த சுரேஷ் குமார் (44), நம்பியூர் சத்யா நகரை சேர்ந்த செல்வராஜ் (63) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதைபோல் மரப்பம்பாளையம் அருகே மது அருந்திய குற்றத்திற்காக செங்கேரிபாளையம் சௌந்தரராஜன் (37) என்பவரை சிவகிரி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    ×