search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "case against 5 people"

    • விருதுநகர் அருகே பெண்ணை தாக்கிய கள்ளக்காதலன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இதுகுறித்து முதலமைச்சர் தனிபிரிவில் புகார் கொடுத்தார்.

    விருதுநகர்

    திருத்தங்கல் புதிய ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசித்து வருபவர் மாலா பிரியதர்ஷினி (வயது42). இவர் கணவரை பிரிந்தவர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிவசந்திரன் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் சேர்ந்து வாழ தொடங்கினர்.

    அப்போது 16 பவுன் நகைகள், ரூ.4½ பணம் ஆகியவற்றை தொழில் தேவைக்காக மாலா பிரிய தர்ஷினியிடம் சிவகங்கர் வாங்கியுள்ளார். பல நாட்களாகியும் அதனை திருப்பித்தரவில்லை. அதுகுறித்து கேட்கும் போதெல்லாம் தட்டிக் கழித்து வந்துள்ளார். சந்தேகமடைந்த மாலா பிரியதர்ஷினி நகை, பணத்தை திருப்பித்தரும்படி சிவசங்கரிடம் வலியுறுத்தி யுள்ளார்.

    இந்தநிலையில் சிவசங்கர் தனது உறவினர்கள் கார்த்தி, தேவி உள்பட 4 பேருடன் வந்து பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாலா பிரியதர்ஷினி இது தொடர்பாக கள்ளக்குறிச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே திருத்தங்கல் வீட்டிற்கு வந்து அவர்கள் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் எனக்கூறி 

    • பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காஞ்சிக்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காஞ் சிகோவில் கொண்டையன் காட்டு வலசுபகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காஞ்சிக்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த சேலம் மாவட்டம் ராமகிருஷ்ணா காலனியை சேர்ந்த முனுசாமி மகன் மணி (வயது 42), காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்த பூபதி மகன் ஜெ கதீஷ் (29),

    பெத்தம்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் ரவி (53), காஞ்சிக்கோவில் தெற்கு ரத வீதியை சேர்ந்த தண்டபாணி மகன் ராமராஜ் (32), வெங்கட்ராமர் தெருவை சேர்ந்த காவிரி மகன் சுந்தரம் (28) ஆகியோரை மடக்கி பிடித்தார்.

    பின்னர் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டு மற்றும் ரூ.1,650 போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமதியின்றி மதுவிற்றுக் கொண்டிருந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், ஈரோடு டவுண் போலீசார் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது பவானி, அந்தியூர், நம்பியூர் ஆகிய பகுதி களில் அரசு அனுமதியின்றி மதுவிற்றுக் கொண்டிருந்த சூரம்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் தண்டபானி (வயது 27),

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த சின்னையா (44), பவானி கண்ணாடி பாளை யத்தை சேர்ந்த அண்ணா துரை (52),

    அந்தியூர் கோ ட்டைமேடு பகுதியை சேர் ந்த சுரேஷ் குமார் (44), நம்பியூர் சத்யா நகரை சேர்ந்த செல்வராஜ் (63) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதைபோல் மரப்பம்பாளையம் அருகே மது அருந்திய குற்றத்திற்காக செங்கேரிபாளையம் சௌந்தரராஜன் (37) என்பவரை சிவகிரி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • நிலத்தில் இருந்த வரப்பை சீர் செய்து கொண்டிருந்தார்.
    • 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் ஓமிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 42). விவசாயி. இவர் கடந்த 22-ந்தேதி தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த வரப்பை சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து நிலத்தின் உரிமையாளர் செல்வம் (57) மோகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த வர்கள் இருவரை யும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த செல்வம் நடந்தவைகளை குடும்பத்தா ரிடம் கூறினார். இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி வெண்ணிலா, மகன்கள் ஆனந்து, அரி மற்றும் உறவினர்கள் செல்வத்தை மோகன் வீட்டிற்கு அழைத்து சென்று தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் செல்வம் குடும்பத்தார் மோகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மோகன் புதுவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவரது வீட்டிலிருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பான புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

    • டாக்டர்கள் சிறுமியின் வயதை பரிசோதித்தபோது 17 வயதில் திருமணம் நடந்தது தெரியவந்தது.
    • சிறுவர் திருமண தடுப்புச்சட்டம் , போக்சோ சட்டங்களின்கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி அம்மாபட்டியை சேர்ந்தவர் வீரச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியரின் 17 வயது மகளை போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தை சேர்ந்த செல்வன் மகன் சந்திரபிரகாசுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார். அவரை பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெற்றோர்கள் சேர்த்தனர்.

    அப்போது டாக்டர்கள் சிறுமியின் வயதை பரிசோதித்தபோது 17 வயதில் திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து சமூகநலத்துறைக்கு புகார் தெரிவித்தனர். பின்னர் போடி அனைத்து மகளிர் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் செல்வன், மகேஸ்வரி, கணவர் சந்திரசேகர், சிறுமியின் பெற்றோர் வீரச்சாமி, லட்சுமி ஆகிய 5 பேர் மீதும் சிறுவர் திருமண தடுப்புச்சட்டம் , போக்சோ சட்டங்களின்கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கோவிலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் மேல தாழனூர் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பச்சையம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்ததாக மேல தாயனூர் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 28), ராமதாஸ் (30), இளவரசன்(26), குப்பன் (31) மற்றும் பார்த்திபன் (35) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×