என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போடி அருகே சிறுமிக்கு திருமணம் செய்த 5 பேர் மீது வழக்கு
- டாக்டர்கள் சிறுமியின் வயதை பரிசோதித்தபோது 17 வயதில் திருமணம் நடந்தது தெரியவந்தது.
- சிறுவர் திருமண தடுப்புச்சட்டம் , போக்சோ சட்டங்களின்கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி அம்மாபட்டியை சேர்ந்தவர் வீரச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியரின் 17 வயது மகளை போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தை சேர்ந்த செல்வன் மகன் சந்திரபிரகாசுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார். அவரை பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெற்றோர்கள் சேர்த்தனர்.
அப்போது டாக்டர்கள் சிறுமியின் வயதை பரிசோதித்தபோது 17 வயதில் திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து சமூகநலத்துறைக்கு புகார் தெரிவித்தனர். பின்னர் போடி அனைத்து மகளிர் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் செல்வன், மகேஸ்வரி, கணவர் சந்திரசேகர், சிறுமியின் பெற்றோர் வீரச்சாமி, லட்சுமி ஆகிய 5 பேர் மீதும் சிறுவர் திருமண தடுப்புச்சட்டம் , போக்சோ சட்டங்களின்கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்