search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman assault"

    • விருதுநகர் அருகே பெண்ணை தாக்கிய கள்ளக்காதலன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இதுகுறித்து முதலமைச்சர் தனிபிரிவில் புகார் கொடுத்தார்.

    விருதுநகர்

    திருத்தங்கல் புதிய ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசித்து வருபவர் மாலா பிரியதர்ஷினி (வயது42). இவர் கணவரை பிரிந்தவர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிவசந்திரன் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் சேர்ந்து வாழ தொடங்கினர்.

    அப்போது 16 பவுன் நகைகள், ரூ.4½ பணம் ஆகியவற்றை தொழில் தேவைக்காக மாலா பிரிய தர்ஷினியிடம் சிவகங்கர் வாங்கியுள்ளார். பல நாட்களாகியும் அதனை திருப்பித்தரவில்லை. அதுகுறித்து கேட்கும் போதெல்லாம் தட்டிக் கழித்து வந்துள்ளார். சந்தேகமடைந்த மாலா பிரியதர்ஷினி நகை, பணத்தை திருப்பித்தரும்படி சிவசங்கரிடம் வலியுறுத்தி யுள்ளார்.

    இந்தநிலையில் சிவசங்கர் தனது உறவினர்கள் கார்த்தி, தேவி உள்பட 4 பேருடன் வந்து பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாலா பிரியதர்ஷினி இது தொடர்பாக கள்ளக்குறிச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே திருத்தங்கல் வீட்டிற்கு வந்து அவர்கள் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் எனக்கூறி 

    • பி சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் குடும்பத்துடன் காரில் சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
    • அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கண்ணன் என்பவர் குடிபோதையில் காரின் முன்பு பட்டாசு வெடித்துள்ளார்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பி சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். (வயது 28) குடும்பத்துடன் காரில் சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே கார் வந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கண்ணன் (28) என்பவர் குடிபோதையில் காரின் முன்பு பட்டாசு வெடித்துள்ளார். இதை அருண்குமார் கண்டித்துள்ளார்.

    உடனே அருண்குமாரின் வீட்டுக்கு சென்ற சந்தோஷ் கண்ணன் அருண்குமாரின் தாயார் இந்திராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இயைடுத்து வழக்குப் பதிவு செய்து போலீசார் சந்தோஷ் கண்ணனை கைது செய்தனர்.

    ×