search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்ட விரோதமாக மது விற்ற 9 பேர் மீது வழக்கு
    X

    சட்ட விரோதமாக மது விற்ற 9 பேர் மீது வழக்கு

    • சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • 51 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை ஏதேனும் நடை பெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் ஈரோடு டவுண், கோபி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது கொல்லம்பாளையம், சென்னிமலை, பவானி, பங்களாபுதூர், புளியம்பட்டி ஆகிய பகுதி களில் சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரம ணியன் (வயது 56),

    சென்னி மலை துரைசாமி (60), ஈரோடு அதியமான் நகர் மாதேஸ்வரன் (40), மும்பை யை சேர்ந்த கார்த்தி, பங்க ளாபுதூர் கௌதம் (26), கருவம்பாளையம் ராமசாமி (57), குள்ளம்பாளையம் நடராஜ் (31), எண்ணமங்கலம் சசி (39) ஆகியோரை போலீ சார் மடக்கி பிடித்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் இருந்த 51 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவ ர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் பெருந்துறை பகுதியில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்றுக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் ராஜ மாணிக்கம் (44) என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர் வைத்திருந்த 8 மது பாட்டி ல்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×