search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொட்டப்படும் குப்பைகள்"

    • பவானி நகரில் மிக சிறப்பு வாய்ந்த கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
    • பவானி ஆற்றில் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விடு வதால் அந்தப் பகுதி புகை மூட்டமாக காணப்படுகிறது.

    பவானி:

    பவானி நகரில் மிக சிறப்பு வாய்ந்த கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    கோவில் பின் பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    தற்போது கோவிலுக்கு வெளியூர், வெளி மாநில அய்யப்ப பக்தர்கள் கூடு துறைக்கு அதிகளவு வந்து காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து செல்வதால் கோவில் பகுதியில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

    இதனால் குப்பைகளும் அதிக அளவில் காணப்படு கிறது.இந்த குப்பைகளை கோவில் பணியாட்கள் அவ்வபோது சுத்தம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈரோடு- பவானி ரோடு கோவிலை யொட்டி உள்ள பவானி ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும பொதுமக்கள் சிலர் கோவில் நுழைவு வாயில் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பைகள் குவிந்து வருகிறது.

    இதையடுத்து பவானி ஆற்றில் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விடு வதால் அந்தப் பகுதி புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் புகை மூட்டத்தால் அவதி அடைந்து வருகின்ற னர்.

    எனவே பவானி கூடுதுறை நுழைவு வாயில் பகுதியில் உள்ள ஆற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குப்பைக்கு தீ வைப்ப வர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்‌பகுதி பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • நோய் பரவும் அபாயம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் ஒட்டர்பா–ளையம் ஊராட்சிக்குட்பட்ட அல்லிக்காரபாளையத்தில் இருந்து மேட்டுப்பா–ளையத்திற்கு சாலை செல்கிறது.

    இந்த சாலையில் 4 பள்ளிகளும், கடைகளும் அதிகளவில் உள்ளன. இதனால் இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். குறிப்பாக பள்ளி மாணவர்களும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 20 மாதங்களுக்கும் ேமலாக இந்த சாலையானது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. சாலையின் பெரும்பாலான இடங்களில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    மழைக்காலங்களில் ஆங்காங்கே குழிகளில் மழைநீர் தேங்கி முழுவதும் மறைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் குழிகள் தெரியாமல் அதில் விழும் நிலையும் காணப்படுகிறது. மேலும் சேறும், சகதியாகவும் காட்சியளிக்கிறது.

    இதற்கிடையே இந்த சாலையோரத்தில் குப்பைகள் குவியல், குவியலாக கொட்டப்பட்டு வருகின்றனர். இந்த குப்பைகள் காற்றில் பறந்து வாகனங்களில் செல்வோர் மீதும் விழுந்து வருகிறது.

    அடிக்கடி இந்த குப்பைகளுக்கு சிலர் தீ வைத்து செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடைபாதையை பயன்படுத்துபவர்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

    அதிக அளவில் குப்பை–கள் கொட்டுவதினால் நாளுக்கு நாள் துர்நாற்றம் அதிகமாக இருப்பதுடன், நோய் தொற்று பரவும் அபாயமும் காணப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இங்கு குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    ×