search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைத்துப்பாக்கி"

    • புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிப்பது, தங்களின் வாகனங்களை கழுவுதல் வழக்கம்.
    • ஆய்வுக்கு அனுப்ப கடலூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணையாறு உள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காகவும், அப்பகுதியில் வசிப்பவர்கள் கடலூருக்கு வந்து செல்வதற்காகவும் புதுவை மாநில அரசால் தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால், கடலூர் மற்றும் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிப்பது, தங்களின் வாகனங்களை கழுவுதல் வழக்கம். பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்கள் அதிகளவில் வலை விரித்தும், தூண்டில் போட்டும் மீன்களை பிடிப்பார்கள். அதன்படி கடலூர் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் இன்று தரைப்பாலம் அருகே மீன்களை பிடிக்க வலை விரித்தனர். சிறிது நேரம் கழித்து வலையை மேலே எடுத்தனர். வலையில் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. இதனை பார்த்த சிறுவர்கள், பொம்மை துப்பாக்கி என நினைத்து கையில் எடுத்து சென்றனர்.

    அப்போது தரைப்பாலத்தில் சென்ற ஒருவர், சிறுவர்களிடமிருந்து இதனை வாங்கி பார்த்தார். இதையெல்லாம் நீங்கள் வைத்திருக்க கூடாது, பெரியவர்களிடம் தான் இருக்க வேண்டுமென கூறி வாங்கி சென்றுள்ளார். இதனால் குழப்பமடைந்த சிறுவர்கள் கலெக்டர் அலுவலகம் எதிரில் பணியில் இருந்த போலீசாரிடம் இது குறித்து கூறினார்கள். உடனடியாக தரைப்பாலத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரை வழிமறித்து, அவரிடமிருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதனைக் கண்ட போலீசார், இது ஒரு வகையான ஏர் பிஸ்டல் என்பதை உறுதி செய்தனர். இந்த கைத்துப்பாக்கியை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த துப்பாக்கியில் குண்டுகள் உள்ளதா? இது வேறு ஏதேனும் குண்டுகளுடன் ஒத்துப்போகிறதா? இந்த கைத்துப்பாக்கி எந்த காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டது? என்பது குறித்து கண்டறிய ஆய்வுக்கு அனுப்ப கடலூர் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்பிறகே இந்த கைத்துப்பாக்கி யாருடையது? எவ்வாறு தென்பெண்ணையாற்றுக்கு வந்தது என்பது குறித்து தெரியவரும் என கடலூர் புதுநகர் போலீசார் தெரிவித்தனர். சிறுவர்களின் மீன்பிடி வலையில் கைத்துப்பாக்கி சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சத்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ஹா கிராமத்தில் கடந்த 11-ந்தேதி ஆகாஷ்-சீதா அகிர்வார் என்ற தலித் தம்பதியின் திருமண விழா நடைபெற்றது.
    • திருமண விழாவிற்கு வந்தவர்கள் இரவு விருந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள அனுமான் கோவிலான பாகேஷ்வர் தாம் கோவிலின் இளம் பீடாதிபதியாக திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி உள்ளார்.

    சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.

    இந்த கோவிலுக்கு சமீபத்தில் மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், பா.ஜனதா மாநில தலைவர் சர்மா உள்பட பல அரசியல்வாதிகள் சென்று வந்தனர்.

    இந்நிலையில் இவரது இளைய சகோதரரான சவுரப் என்ற ஷாலிகிராம்( வயது 26) என்பவரும் தற்போது ஒரு வீடியோவால் பரபரப்பாக பேசப்படுகிறார்.

    சத்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ஹா கிராமத்தில் கடந்த 11-ந்தேதி ஆகாஷ்-சீதா அகிர்வார் என்ற தலித் தம்பதியின் திருமண விழா நடைபெற்றது.

    இந்த திருமண விழாவிற்கு வந்தவர்கள் இரவு விருந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சவுரப் கையில் நாட்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டு விருந்தினர்களை மிரட்டுவது போன்றும், கையில் சிகரெட்டை புகைத்தவாறும் வீடியோவில் காட்சியளிக்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து சத்தர்பூர் மாவட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக ஒரு குழு அமைத்துள்ளனர்.

    விசாரணையின் அடிப்படையில் சவுரப் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கைத்துப்பாக்கி விற்பனையை உடனடியாக முடக்க கனடா பிரதமர் ட்ரூடோ உத்தரவிட்டார்.
    • இது உடனடியாக அமல்படுத்தப்படும் எனவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

    ஒட்டாவா:

    கனடாவில் கைத்துப்பாக்கிகளின் விற்பனை, வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது என்றும், இது உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    கனடா பாராளுமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக விவாதித்தனர். புதிய கைத்துப்பாக்கி முடக்கம் ஒரு உடனடி நடவடிக்கை என ட்ரூடோ நிர்வாகம் கூறிவந்தது. இந்த மசோதா தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மக்கள் கொல்லப்படும்போது, ​​மக்கள் பாதிக்கப்படும்போது, பொறுப்பான தலைமை நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். துப்பாக்கிகள் சம்பந்தமாக மீண்டும் பல கொடூரமான சம்பவங்களை உதாரணங்களாக நாங்கள் பார்த்திருக்கிறோம்.. மக்கள் இனி கனடாவிற்குள் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது. மேலும் அவர்கள் புதிதாக வாங்கிய கைத்துப்பாக்கிகளை நாட்டுக்குள் கொண்டுவர முடியாது என தெரிவித்தார்.

    ×