search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பாபிசேகம்"

    • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கட்ட பெரியாம்பட்டி கிராமம் நமச்சிவாயனூர் பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சஞ்சீவிராய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
    • சஞ்சீவராய ஆஞ்சநேய சுவாமி கருட கம்பம் அமைக்கப்பட்டு ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கட்ட பெரியாம்பட்டி கிராமம் நமச்சிவாயனூர் பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சஞ்சீவிராய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக யாக சாலை அமைக்கப்பட்டு சஞ்சீவராய ஆஞ்சநேய சுவாமி கருட கம்பம் அமைக்கப்பட்டு ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கு முன்பாக கடந்த 5- தேதி தீபஸ்தம்ப பாலாலயம், அங்குரார்ப்பணம், ரக்க்ஷாபந்தனம், முகூர்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று காலை வாஸ்து பூஜை, முதற்கால யாக வேள்வி, பூர்ணாகுதியும் தொடர்ந்து 2-ம் கால யாக வேள்வி, திருமஞ்சனம், கருடகம்ப பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நச்சுவாயனூர் கட்ட பெரியாம்பட்டியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கரபுரநாதர் கோவிலில் 2006-ம் ஆண்டுக்கு பின் தற்போது கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
    • இப்பணி 6 மாதத்தில் முடிக்கப்படும். அதற்கு பின்கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் அருகே உத்தம சோழபுரத்தில் பழமையான பெரிய நாயகி சமேத கரபுரநாதர் கோவில் உள்ளது. ராவணன் சகோதரன் கரதூசனன், ஆயிரம் ஆண்டு தவம் செய்து அக்னிபிரவேசம் செய்யும் நேரத்தில் "நில்' என்ற அசரீரி வாக்கு கேட்டு நின்றான். இறைவன் கரதூசனனுக்கு காட்சி அளித்தார். அப்போது இறைவனுக்கு கரதூசனன் பூஜை செய்ததால், "கரபுரநாதர்' என்ற பெயர் வழங்கப்படுகிறது.

    இந்த கோவில் முகப்பு வாயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் அருகே ஒளவை சிலை நிறுவப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே பெரிய ஒளவையார் சிலை ஆகும். இந்த கோவிலின் பழமையும், வரலாற்று சிறப்பும், இலக்கியங்களில் பெற்ற இடம் பெருமைக்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்துள்ளன.

    குணசீலன் என்ற சிறுவன் கரபுரநாதர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தான். லிங்கம் உயரமாக இருந்ததால் சிறுவனால் மாலை போட முடியவில்லை. இதனால் சிறுவன் கதறி அழுது இறைவனை வேண்டுகிறான். அப்போது கரபுரநாதர் எழுந்தருளி, சிறுவன் உயரத்திற்கேற்றவாறு லிங்கத்தை சாய்த்து கொடுத்தார். அதனால் தான் இன்றும் இந்த கோவிலில் உள்ள லிங்கம் ஒரு புறம் சாய்ந்தவாறு உள்ளது.

    இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்டஇந்த கோவிலில் திருப்பணி நடத்தி குமாபிசேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி இன்று காலை பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்காக நேற்று கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் காலை 5 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் காலை 9 மணிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் வீரபாண்டி டாக்டர் மலர்விழி, பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், முன்னாள் வேளாண்துறை அமைச்சர் உதவியாளர் சேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    கரபுரநாதர் கோவிலில் 2006-ம் ஆண்டுக்கு பின் தற்போது கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக திட்ட மதிப்பீடு தயாரித்து,சேலம் மண்டல இந்து சமய அற நிலையத்துறை இணை கமிஷனரிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

    திருப்பணியின்போது ராஜகோபுத்தில் உள்ள சிலைகளை மராமத்து செய்து வண்ணம் பூசப்படும். சன்னதி விமானம் மராமத்து செய்து வண்ணம் பூசப்படும். திருப்பணி 80 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. இப்பணி 6 மாதத்தில் முடிக்கப்படும். அதற்கு பின்கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காலை 7 மணிக்கு பால்குட ஊர்வலம், காப்பு கட்டுதல் நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை முதலே கோவிலுக்கு பந்தலூர், தேவாலா உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா அட்டியில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

    இதனையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு ஆற்றில் இருந்து முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.மாலை 6 மணிக்கு முதல் யாக பூஜை, விக்னேஸ்வரர் பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 9 மணிக்கு சுவாமிகளுக்கு பாபணாபிஷேகம், கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடைபெற்றது.

    சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடந்தது. காலை 6.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு பால்குட ஊர்வலம், காப்பு கட்டுதல் நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.

    காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக சாலையில் இருந்து கலசங்கள் எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    பின்னர் கோ பூஜையும், சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை முதலே கோவிலுக்கு பந்தலூர், தேவாலா உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கும்பாபிஷேகத்தை பார்த்து, சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    ×