search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவாலா"

    • கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கி குண்டுகள்- மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • தேவாலா உட்கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில், காட்டு யானை, மான், கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் தேவாலா உட்கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில், காட்டு யானை, மான், கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த வனப்பகுதிகளில் காட்டு விலங்குகள் மர்மநபர்களால் வேட்டையாடப்படுவதாக உள்ளூர் மக்கள் போலீசில் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இதனை கண்காணிக்க சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் திருகேஸ்வரன், பிரதீப்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று சிலர் வனப்பகுதிக்கு வேட்டையாட செல்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார், தேவாலா பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த 4 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் 2 பைகளில் துப்பாக்கி குண்டுகள் மற்றும் மான்கறி வைத்திருந்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தனர். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள், நாடுகாணியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(38), பெரிய சூண்டியை சேர்ந்த மைக்கேல்(30), புஷ்பராஜ்(33), அருண்(26) என்பதும் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் மானை வேட்டையாடி, இறைச்சியை எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மான்கறி மற்றும் துப்பாக்கி குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
    • தினமும் பகல் நேரங்களில் குரங்குகளும், இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் தேவாலா அடுத்துள்ளது. வாழவயல் கிராமம். இந்த கிராமத்தையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    வனவிலங்குகள் அவ்வப்போது உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க வனத்துறையினரும் நடவடிக்ைக எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று வாழவயல் கிராம பகுதிகளுக்குள் புகுந்தது. வெகுநேரம் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்த யானை அங்கு வசித்து வரும் முத்தையா என்பவரது வீட்டின் அருகே சென்றது.

    பின்னர் அந்த வீட்டில் இருந்த குளியல் அறையை உடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு முத்தையா மற்றும் குடும்பத்தினர் எழுந்து பார்த்தனர். அப்போது யானை நின்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினரும் விரைந்து யானையை வனத்திற்குள் விரட்டினர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- தினமும் பகல் நேரங்களில் குரங்குகள் தொல்லை கொடுத்து வருகிறது. தற்போது கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியில் வரவே பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.

    எனவே ஊருக்குள் யானை வருவதை தடுக்க இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காலை 7 மணிக்கு பால்குட ஊர்வலம், காப்பு கட்டுதல் நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை முதலே கோவிலுக்கு பந்தலூர், தேவாலா உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா அட்டியில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

    இதனையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு ஆற்றில் இருந்து முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.மாலை 6 மணிக்கு முதல் யாக பூஜை, விக்னேஸ்வரர் பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 9 மணிக்கு சுவாமிகளுக்கு பாபணாபிஷேகம், கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடைபெற்றது.

    சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடந்தது. காலை 6.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு பால்குட ஊர்வலம், காப்பு கட்டுதல் நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.

    காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக சாலையில் இருந்து கலசங்கள் எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    பின்னர் கோ பூஜையும், சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை முதலே கோவிலுக்கு பந்தலூர், தேவாலா உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கும்பாபிஷேகத்தை பார்த்து, சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    ×