search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டர் சட்டத்தில்"

    • புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் நடப்போர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    • இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு ஜாமினில் வர முடியாது.

    சேலம்:

    ரவுடிகள், தொடர் திருட்டு, வழிப்பறி, கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் நடப்போர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு ஜாமினில் வர முடியாது.

    இந்த நிலையில், சேலம் சரகத்தில் அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர் லாவண்யா நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி, சேலம் மாந கரில் கடந்த 6 மாதத்தில் 63 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா மற்றும் குட்கா, லாட்டரி, பாலியல் வழக்கு, ரேஷன் அரிசி கடத்தல் உட்பட பல்வேறு வழக்கு களில் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • 4 பேரையும் பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
    • இதில் பன்னீர்செல்வம், ஆனந்த் மீது போலீஸ் வாகனத்தை தாக்கியது, ஆள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது 24), சேலம் 3 ரோடு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (26), கல்லாங்குத்து விக்னேஷ்குமார் (23), பள்ளப்பட்டி சந்தோஷ் குமார் (28) ஆகியோர் சேர்ந்து, கொடுக்கல் வாங்கல் தகராறு காரண மாக கடந்த மாதம் 15 தேதி உதயசங்கர் என்பவரை வெட்டி கொலை செய்தனர்.

    இதனால் இந்த 4 பேரையும் பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். இதில் பன்னீர்செல்வம், ஆனந்த் மீது போலீஸ் வாகனத்தை தாக்கியது, ஆள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதையடுத்து, பள்ளப்பட்டி போலீசார் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தனர். அதை ஏற்று போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, நேற்று அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதேபோல சேலம் சிவதாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர் கடந்த மே 19-ந் தேதி, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சேலம் டவுன் மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்து ரைத்தனர். அதை ஏற்று கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் உள்ள 5 பேரிட மும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

    ×