search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் பள்ளப்பட்டி கொலை வழக்கில் கைதானவர்கள் உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
    X

    குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள். 

    சேலம் பள்ளப்பட்டி கொலை வழக்கில் கைதானவர்கள் உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

    • 4 பேரையும் பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
    • இதில் பன்னீர்செல்வம், ஆனந்த் மீது போலீஸ் வாகனத்தை தாக்கியது, ஆள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது 24), சேலம் 3 ரோடு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (26), கல்லாங்குத்து விக்னேஷ்குமார் (23), பள்ளப்பட்டி சந்தோஷ் குமார் (28) ஆகியோர் சேர்ந்து, கொடுக்கல் வாங்கல் தகராறு காரண மாக கடந்த மாதம் 15 தேதி உதயசங்கர் என்பவரை வெட்டி கொலை செய்தனர்.

    இதனால் இந்த 4 பேரையும் பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். இதில் பன்னீர்செல்வம், ஆனந்த் மீது போலீஸ் வாகனத்தை தாக்கியது, ஆள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதையடுத்து, பள்ளப்பட்டி போலீசார் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தனர். அதை ஏற்று போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, நேற்று அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதேபோல சேலம் சிவதாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர் கடந்த மே 19-ந் தேதி, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சேலம் டவுன் மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்து ரைத்தனர். அதை ஏற்று கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் உள்ள 5 பேரிட மும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

    Next Story
    ×