search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    6 மாதங்களில் 63 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    6 மாதங்களில் 63 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    • புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் நடப்போர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    • இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு ஜாமினில் வர முடியாது.

    சேலம்:

    ரவுடிகள், தொடர் திருட்டு, வழிப்பறி, கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் நடப்போர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு ஜாமினில் வர முடியாது.

    இந்த நிலையில், சேலம் சரகத்தில் அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர் லாவண்யா நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி, சேலம் மாந கரில் கடந்த 6 மாதத்தில் 63 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா மற்றும் குட்கா, லாட்டரி, பாலியல் வழக்கு, ரேஷன் அரிசி கடத்தல் உட்பட பல்வேறு வழக்கு களில் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×