search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியிருப்பு வாசிகள்"

    • கொடுங்கையூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு குழாய் மூலம் அனுப்பப்படுகிறது.
    • தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பம்பிங் நிலையங்கள் பராமரிப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருக்கிறது.

    சென்னை:

    சென்னை கொரட்டூரில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியம் சார்பில் கழிவுநீர் சேகரிப்பு நிலையம் அமைத்து பராமரிக்கப்படுகிறது. 22 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய இந்த சேகரிப்பு நிலையத்துக்கு நகரில் கழிவு நீரகற்று வாரியத்தால் சேகரிப்படும் கழிவுநீர் கொண்டுவரப்பட்டு சேகரிக்கப்படுகிறது.

    இங்கிருந்து கொடுங்கையூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு குழாய் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த கழிவுநீர் சேகரிப்பு நிலையம் அருகே 222 வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கடந்த 2019-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கழிவுநீர் சேகரிப்பு நிலையத்தில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் மற்றும் வாயு கசிவுகளால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக பொது மக்கள் சார்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டதும் அவ்வப்போது தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் துர்நாற்றம் வெளிவருவதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.

    குடியிருப்பு வாசிகள் கூறும்போது, நாங்கள் இந்த பகுதியில் வீடு வாங்கி குடியேறியபோது வேறு எந்த பிரச்சினையும் இல்லை. துர்நாற்றம் வெளி வருவது, வாயு கசிவு ஏற்படுவது பற்றி புகார் செய்ததும், வீட்டு வசதி வாரியம் தற்காலிகமாக குடியிருப்பை சுற்றி தடுப்பு நடவடிக்கையாக சில கட்டமைப்புகளை ஏற்படுத்தியது. அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை என்றனர்.

    அந்த பகுதியின் கவுன்சிலர் ஜான் கூறும்போது, இந்த பிரச்சினை பற்றி பலமுறை மாநகராட்சி கூட்டத்திலும் கேள்வி எழுப்பி இருக்கிறேன். பம்பிங் நிலையத்தை இங்கிருந்து மாற்ற முடியாது. துர்நாற்றம் வெளியேறுவதை தடுக்க மெட்ரோ வாட்டர் நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பம்பிங் நிலையங்கள் பராமரிப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருக்கிறது. அதன் அடிப்படையில் சில ஆய்வுகள் நடத்தி வருவதாகவும் விரைவில் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • தனிநபர் ஒருவர் கட்டிடங்களை இடிக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    விருத்தாசலம் ஆலடி ரோடு மற்றும் கடலூர் ரோடு ஸ்டேட் பேங்க் நிறுத்தம் அருகில் உள்ள இடங்களில் முல்லா ஏரி என்ற நீர்நிலை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டன. இதனை எதிர்த்து போடப்பட்ட பொது நல வழக்கின் பேரில் சென்னை உயர்நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிர மிப்புகளை உடனடி யாக அகற்றம் செய்யும்படி உத்தரவிட்டது. இதன்படி அந்த பகுதிகளில் தாசில்தார் தனபதி தலைமையில் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு–களை அகற்றும் பணி தொடங்கியது. 

    தாசில்தார் தனபதி தலை–மையிலான வருவாய்த் துறையினர், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை ஜேசிபி., எந்திரம் மூலம் அகற்றும் பணியை தொடங்கினர். ஒரு சுற்றுச்சுவர் மற்றும் ஒரு வீட்டை இடித்த நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் அவர்களிடம் பல ஆண்டு–களாக வசித்து வரும் வீட்டை இடித்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் மற்றும் தாங்கள் உடனடியாக செல்ல போக்கிடம் இல்லை, கட்டிடங்களை இடிக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யும் பணி தற்போது வீட்டில் இருக்கும் தங்கள் பொருட்களை எடுத்துச் செல்லும்படியும் கூறினார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்பு செய்யும் பணி தொடங்கும் போது தனிநபர் ஒருவர் கட்டிடங் களை இடிக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யும்போது பதற்றம் ஏதும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • இடிந்த விழும் நிலையில் கட்டிடங்கள் உள்ளது
    • அனைத்து வீடுகளின் கதவுகளிலும் நோட்டீஸ் ஒட்டினர்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூரில் உழவர் சந்தை பின்புறம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், 11 ஏக்கரில் கடந்த 1984-ம் ஆண்டு தரைத்தளம் மற்றும் 3 தளங்களைக் கொண்ட 21 பிளாக்குகளில் 960 வீடுகள் கட்டப்பட்டன.

    இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வருடங்கள் பல ஆனதாலும், முறையாக பராமரிப்பு இல்லாததாலும், பழுதடைந்து காணப்படுகின்றன.தற்போது 409 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித் தருமாறு குடியிருப்புவாசிகள் தமிழக வீட்டுவசதி வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில், பருவ மழைக் காலம் தொடங்க உள்ளதையடுத்து, வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் ஆர்.டி.ஓ. இளங்கோ மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

    பழுதடைந்த நிலையில் கட்டிடங்கள் உள்ளதால், குடியிருப்புகளை காலி செய்யுமாறு குடியிருப்புவாசி களிடம் அறிவுறுத்தினர். மேலும், அனைத்து வீடுகளின் கதவுகளிலும் நோட்டீஸ் ஒட்டினர்.

    அந்த நோட்டீசில், குடியிருப்புகள் இடிந்துவிழும் அபாயகரமான நிலையில் உள்ளது புலத்தணிக் கையில் தெரியவருகிறது. எனவே, குடியிருப்புகளில் வசிப்போர், தாங்களாக முன்வந்து, வருகிற 20-ந் தேதிக்குள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு உத்தரவிடப்படுகிறது. தவறும் பட்சத்தில் குடியிருப்புகளை காலி செய்ய சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×