search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி ஆற்று"

    • தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
    • இன்றுகாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    ஒகேனக்கல்,

    கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.

    இதனால் இன்றுகாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது. மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    • காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
    • அணையில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் மலர்களை தூவி வரவேற்றார்.

    பரமத்தி வேலூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்க ளின் குறுவை சாகுபடி பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அணை யில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் மலர்களை தூவி வரவேற்றார்.

    இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. முதலில் 3 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விடப்பட்ட நிலையில், பின்னர் படிப்படியாக அதி கரிக்கப்பட்டு, அணையில் இருந்து சுமார் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப் பாலம் பகுதிக்கு வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து காவிரி ஆற்று தண்ணீர் மோகனூர் வழியாக திருச்சி சென்று கொண்டிருக்கிறது. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×