search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பரமத்திவேலூர் வந்தடைந்தது
    X

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து செல்வதை படத்தில் காணலாம்.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பரமத்திவேலூர் வந்தடைந்தது

    • காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
    • அணையில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் மலர்களை தூவி வரவேற்றார்.

    பரமத்தி வேலூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்க ளின் குறுவை சாகுபடி பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அணை யில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் மலர்களை தூவி வரவேற்றார்.

    இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. முதலில் 3 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விடப்பட்ட நிலையில், பின்னர் படிப்படியாக அதி கரிக்கப்பட்டு, அணையில் இருந்து சுமார் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப் பாலம் பகுதிக்கு வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து காவிரி ஆற்று தண்ணீர் மோகனூர் வழியாக திருச்சி சென்று கொண்டிருக்கிறது. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×