search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளிங்கராயன் வாய்க்காலில்"

    • ஆணின் உடல் மிதந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நஞ்சை கொள்ளாநல்லி, ஆட்டுக்காரன்புதூர் அருகே காளிங்கராயன் வாய்க்காலில் சம்பவத்தன்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு மலையம்பாளையம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. அந்த நபர் காளிங்கரான் வாய்க்காலில் குளித்து கொண்டிருந்த போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
    • இதனால் வேதனை அடைந்த பாசமலர் காளிங்கராயன் வாய்க்காலில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் குதித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் கே.எஸ்.நகர் பகுதியில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் ஒரு பெண்ணின் உடல் மிதந்து வந்தது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் விசாரணையில் அந்த பெண் குறித்து அடையாளம் தெரியவந்தது. ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ஆர்.என்.புதூரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மனைவி பாசமலர் (48) என தெரிய வந்தது.

    திருநாவுக்கரசுக்கும் பாசமலருக்கும் திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருநாவுக்கரசு கட்டிட வேலை செய்து வருகிறார். பாசமலரும் கூலி வேலை செய்து வந்தார். கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

    இதனால் வேதனை அடைந்த பாசமலர் நேற்று ஆர். என்.புதூர் அருகே காளிங்கராயன் வாய்க்காலில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் குதித்தார்.

    சிறிது நேரத்தில் அவர் நீரில் மூழ்கினார். அவரது உடல் கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகரில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் மிதந்து வந்த போது போலீசார்மிட்டது விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த நிலையில் கொடுமுடி அருகே பனப்பாளையம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் மிதப்பதாக கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் என்கிற சதீஷ் ராஜாவின் சாவுக்கான காரணம் என்ன என போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே பாசூர் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் என்கிற சதீஷ் ராஜா (48) தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. தனதுதாயார் துளசி மணியுடன் வசித்து வந்தார்.

    இவர் கடந்த 20-ந் தேதி இரவில் இருந்து காணவில்லை. இவரை தேடிப்பார்த்த போது பாசூர் ரெயில்வே கேட் அருகில் உள்ள காளிங்கராயன் வாய்க்கால் பாலம் அருகே சதீஷ்குமாரின் மொபட் மட்டும் அனாதையாக நின்று கொண்டு இருந்தது. இதனால் காளிங்கராயன் வாய்க்காலில் விழுந்து இருப்பாரோ என்ற சந்தேகத்தில் இது குறித்து மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் கோமதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாசூர் பகுதியில் இருந்து பழனிக்கவுண்டன் பாளையம் வரையில் காளிங்கராயன் வாய்க்காலில் 21-ந்தேதி காலை முதல் மாலை வரை தேடினர்.

    இதேபோல் கொடுமுடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் பழனிக் கவுண்டம்பாளையம் முதல் கொடுமுடி வரை காளிங்கராயன் வாய்க்காலில் தேடியதில் எங்குமே உடல் கிடைக்க வில்லை.

    இந்த நிலையில் கொடுமுடி அருகே பனப்பாளையம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் மிதப்பதாக கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த உடலை கைப்பற்றி விசாரணை செய்ததனர்.

    விசாரனையில் அது மாயமான சதீஷ்குமார் என்கிற சதீஷ் ராஜாவின் உடல் தான் என தெரிய வந்தது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் என்கிற சதீஷ் ராஜாவின் சாவுக்கான காரணம் என்ன என போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். போலீசார் இறந்த சதிஷ் குமாரின் உடலை கொடுமுடி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் ஒப்படைத்தனர்.

    ×