என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கார் மோதி விபத்து"
- இன்று அதிகாலை திருச்சியில் இருந்து தாமரைக்கரை, பர்கூர் வழியாக மைசூருக்கு செல்வதற்காக காரில் 5 பேர் வந்தனர்.
- அப்போது மழையின் காரணமாக சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மோதியது
அந்தியூர், நவ. 12-
அந்தியூர்-பவானி சாலையில் விபத்துக்களை தடுப்பதற்காக சாலையின் மையப்பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து தாமரைக்கரை, பர்கூர் வழியாக மைசூருக்கு செல்வதற்காக காரில் 5 பேர் வந்தனர்.
அப்போது மழையின் காரணமாக சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மோதியது. இதனால் காரின் முன் பகுதியில் உள்ள ஏர்பேக் ஓப்பன் ஆனதால் காரில் வந்த 5 பேருக்கும் எந்தவித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்.
இது குறித்து உடனடியாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் காரை அகற்றி சாலையின் பக்கவாட்டில் எடுத்து வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- 10 மணி நேரத்திற்கு மேல் மின் தடை
ராணிப்பேட்டை:
ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன் (50). இவர் குடும்பத்தினருடன் காரில் சென்னை வந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
காரை அவரே ஓட்டிச்சென்றார். ராணிப்பேட்டை எம்.பி.டி சாலையில் நவல்பூர் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
இதில் மின் கம்பம் சேதம் அடைந்து, காரின் மீது உடைந்து விழுந்தது. நல்லவேளையாக காரை ஓட்டி சென்ற திருக்கும ரன், மற்றும் அதில் பயணம் செய்த அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் தப்பினர்.
மின் கம்பம் உடைந்து விழுந்ததில், மின்சாரம் தடை ஏற் பட்டது. சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் மின் தடை நீடித்தது. மின் ஊழியர்கள் கடுமையாக முயற்சி எடுத்து மின் வினியோகம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
- ெபண் பலி
- 3 குழந்தைகள் உள்ளனர்
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடுத்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் இவருடைய மனைவி கண்ணம்மா (வயது 32) அதே பகுதியைச் சேர்ந்த செல்வரசு என்பருடன் பைக்கில் பில்லூரில் இருந்து திருவண்ணாமலை அருகே உள்ள தனது தாய் வீடான மல்லவாடி கிராமத்திற்கு திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
நாயுடு மங்கலம் கூட்ரோடு அருகே பின்புறமாக வந்த கார் ஒன்று அதிவேகமாக மோதியதில் நிலைத்தலைமாறி கீழே விழுந்தனர்.
இதில் கண்ணம்மாவிற்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு கலசப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணம்மா பரிதாபமாக இறந்தார்.
அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இது சம்பந்தமாக கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி
- விரட்டி பிடித்தனர்
திருப்பத்தூர்:
ஜோலார்பேட்டையில் இருந்து நேற்று இரவு 8 மணி அளவில் ஜோலார்பேட்டை யில் இருந்து திருப்பத்தூர் நோக்கி அதி வேகமாக வந்த கார் நுகர்பொருள் வாணிபக்கழகம் அருகே ஒரு கார் மீது மோதியது.
பின்னர் அங் கிருந்து நிற்காமல் வேகமாக சென்ற கார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே முதிய வர் மீது மோதியது . இதில் முதியவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் . அப்போதும் கார் நிற்காமல் சென்றது . உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் துரத்தி சென்று திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே காரை மடக்கி பிடித்த னர் .
அப்போது கார் டிரைவர்குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது . அவரை அடித்து வெளியே இழுத்த னர் . அதற்குள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் காரை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி பார்த்தபோது காரின் பின் சீட்டில் குடிபோதையில் ஒரு வர் மயங்கி கிடந்தார். அவ ரையும் வெளியே இழுத்துப் போட்டு அடித்தனர். அதற்குள் காரை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தும்டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து காரை பறிமுதல் செய்து, குடி போதையில் இருந்தவரை திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள் . இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது .
- திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் திடீரென நிலை தடுமாறிய கார் தாறுமாறாக ஓடியது
- இதில் சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானது
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 34). இவரது மனைவி கற்பகம் (32). தந்தை அழகர்சாமி (57), மகள் மதுமிதா (11), மகன் யோகதர்ஷன் (9), உறவினர்கள் ஆசை பிரியா, பால்பாண்டி, யோகிசாய் (2), உள்பட 9 பேர் காரில் திருச்சி சமயபுரத்துக்கு சென்றனர்.
சாமி தரிசனம் முடித்து விட்டு மீண்டும் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் மாணிக்கம் பிள்ளை சத்திரம் பகுதியில் வந்தபோது திடீரென நிலை தடுமாறிய கார் தாறுமாறாக ஓடியது. சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சிறுவன் யோகி சாய் படுகாயமடைந்தான். மற்றவர்களும் காயமடைந்ததால் அவர்களை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்