search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "a roadblock"

    • இன்று அதிகாலை திருச்சியில் இருந்து தாமரைக்கரை, பர்கூர் வழியாக மைசூருக்கு செல்வதற்காக காரில் 5 பேர் வந்தனர்.
    • அப்போது மழையின் காரணமாக சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மோதியது

    அந்தியூர், நவ. 12-

    அந்தியூர்-பவானி சாலையில் விபத்துக்களை தடுப்பதற்காக சாலையின் மையப்பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து தாமரைக்கரை, பர்கூர் வழியாக மைசூருக்கு செல்வதற்காக காரில் 5 பேர் வந்தனர்.

    அப்போது மழையின் காரணமாக சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மோதியது. இதனால் காரின் முன் பகுதியில் உள்ள ஏர்பேக் ஓப்பன் ஆனதால் காரில் வந்த 5 பேருக்கும் எந்தவித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்.

    இது குறித்து உடனடியாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் காரை அகற்றி சாலையின் பக்கவாட்டில் எடுத்து வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×