search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறிகள் விலை உயர்ந்தது"

    • வ.உ.சி. மார்க்கெட்டிற்கு 800 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
    • கடந்த வாரத்தை விட காய்கறிகள் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், பெங்களூர், கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக காய்கறிகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் காய்கறிகள் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்நிலையில் புரட்டாசி மாதம் பிறந்ததை யொட்டி காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது.

    இந்த மாதத்தில் பெரும்பா லானோர் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறி உள்ளதால் காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது.

    இதைபோல் முகூர்த்த நாட்களும் தொடர்ந்து வருவதால் காய்கறிகள் விலை கடந்த வாரத்தை விட இன்று அதிகரித்து விற்கப்படுகிறது.

    இன்று வ.உ.சி. மார்க்கெட்டிற்கு 800 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ரூ.100-க்கு விற்கப்பட்ட கருப்பு அவரை ஒரு கிலோ இன்று ரூ.130 ஆக உயர்ந்துள்ளது.

    இதேபோல் கடந்த வாரம் ரூ.80-க்கு விற்ற ஒரு கிலோ பீன்ஸ் இன்று ரூ.90 முதல் ரூ.100 வரை உயர்ந்து விற்கப்படுகிறது.

    ரூ.40-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ புடலங்காய் இன்று ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. ரூ40-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்திரிக்காய் இன்று ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

    ரூ 40-க்கு விற்கப்பட்ட முள்ளங்கி ரூ.50-60-க்கும், ரூ.20-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.30-க்கும், ரூ.60-க்கு விற்கப்பட்ட பீட்ரூட் ரூ.70-க்கும் விற்கப்பட்டது.

    இதை போல் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட பீர்க்கங்காய் இந்த வாரம் ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    பாவைக்காய்-60, முருங்கைக்காய்-60, கொத்த வரங்காய்-30, கேரட்-60-70, பச்சைமிளகாய்-50, பட்டவரை - 70, பழைய இஞ்சி - 270, சின்ன வெங்காயம்-50, பெரிய வெங்கா யம்-80-90,

    முட்டை கோஸ்-20, காலிங்பிளவர்-40, காளான்-60, உருளைக் கிழங்கு-40-60, தக்காளி-15. கடந்த வாரத்தை விட காய்கறிகள் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது.

    • ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டுக்கு இன்று வெறும் 75 டன்கள் மட்டுமே காய்கறிகள் வரத்தாகி இருந்தது.
    • பச்சை மிளகாய் கிலோ ரூ.70-க்கு விற்பனையான நிலையில் இன்று கிலோ ரூ 100-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தாளவாடி, சேலம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மங்களூர், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து தினமும் 100 முதல் 120 டன் காய்கறிகள் வரத்தாகி வந்தது.

    இங்கு மொத்த விலை மற்றும் சில்லரை விலை விற்பனையில் காய்கறிகள் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்து விட்டது.

    இதன் எதிரொலியாக காய்கறி விலை கிடுகிடு என உயர்ந்து உள்ளது. ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டுக்கு இன்று வெறும் 75 டன்கள் மட்டுமே காய்கறிகள் வரத்தாகி இருந்தது. வரத்து குறைவு எதிரொலியாகவும், தற்போது தொடர் முகூர்த்தம் வருவதாலும் காய்கறிகள் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து விட்டது.

    கடந்த வாரத்தை விட இன்று சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. உதாரணமாக தக்காளி விலை இன்று ஒரு கிலோ ஒரு 35-க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரம் ரூ.20-க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோவுக்கு ரூ.15 உயர்ந்து விட்டது. பொதுவாக மார்க்கெட்டிற்கு 7000 பெட்டி தக்காளிகள் வரத்தாகி வந்த நிலையில் இன்று 3 ஆயிரம் தக்காளி பெட்டிகள் மட்டுமே வரத்தாகி இருந்தது.

    இதேபோல் கடந்த வாரம் ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 80-க்கு விற்ற நிலையில் இன்று ரூ.100-க்கு விற்பனையானது. இதுபோல் கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 70- க்கு விற்ற நிலையில் இன்று ரூ.130-க்கு விற்பனையானது. கடந்த வாரம் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ. 25-க்கு விற்ற நிலையில் இன்று ரூ. 40-க்கு விற்பனையானது.

    இதேப்போல் பச்சை பட்டாணி கிலோ ரூ.250-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த வாரம் பச்சை மிளகாய் கிலோ ரூ.70-க்கு விற்பனையான நிலையில் இன்று கிலோ ரூ 100-க்கு விற்பனையானது.

    ஈரோடு வ. உ. சி. மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:

    சுரக்காய்-15, இஞ்சி-220, கேரட்-70, பீட்ரூட்-50, முட்டைகோஸ்-20, கோவக்காய்-30, காலிபிளவர்-35, மாங்காய்-20, சின்ன வெங்காயம்-70-80, பெரிய வெங்காயம்-30, கத்திரிக்காய்-60, புடலங்காய்-30, பீர்க்க ங்காய்-60, முள்ளங்கி-40, பாவக்காய்-60, கருப்பு அவரை-110, பட்ட அவரை80, குடை மிளகாய்-70, கொத்தவரங்காய்-30.

    • முகூர்த்த நாட்கள், கோவில் விசேஷ நாட்கள் தொடர்ந்து வருவதால் காய்கறிகள் தேவை அதிகரித்து உள்ளது.
    • இன்று ஒரு கிலோ கேரட், பீன்ஸ் விலை உயர்ந்து ரூ.120-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டி, பெங்களூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மேச்சேரி போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    தற்போது முகூர்த்த நாட்கள், கோவில் விசேஷ நாட்கள் தொடர்ந்து வருவதால் காய்கறிகள் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் கேரட், பீன்ஸ், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை விட ரூ.60 வரை உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் கேரட், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனையானது. இன்று ஒரு கிலோ கேரட், பீன்ஸ் விலை உயர்ந்து ரூ.120-க்கு விற்பனையானது. இதேப்போல் கத்திரிக்காய் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது.

    வ.உ.சி. மார்க்கெட்டில் மற்ற காய்களின் விலை கிலோவில் வருமாறு:

    பீர்க்கங்காய்-70, பாவைக்காய்-50, கருப்பு அவரை-110, பட்ட அவரை-70, சுரைக்காய்-20, பச்சைமிளகாய்-50, முட்டைகோஸ்-50, காலி பிளவர்-40, முருங்கைகாய்-120, வெண்டைக்காய்-40, முள்ளங்கி-50, பீட்ரூட்-80, சின்ன வெங்காயம்-80, பெரிய வெங்காயம்-45, தக்காளி-30.

    ×