search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வ.உ.சி. மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்தது
    X

    வ.உ.சி. மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்தது

    • முகூர்த்த நாட்கள், கோவில் விசேஷ நாட்கள் தொடர்ந்து வருவதால் காய்கறிகள் தேவை அதிகரித்து உள்ளது.
    • இன்று ஒரு கிலோ கேரட், பீன்ஸ் விலை உயர்ந்து ரூ.120-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டி, பெங்களூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மேச்சேரி போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    தற்போது முகூர்த்த நாட்கள், கோவில் விசேஷ நாட்கள் தொடர்ந்து வருவதால் காய்கறிகள் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் கேரட், பீன்ஸ், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை விட ரூ.60 வரை உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் கேரட், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனையானது. இன்று ஒரு கிலோ கேரட், பீன்ஸ் விலை உயர்ந்து ரூ.120-க்கு விற்பனையானது. இதேப்போல் கத்திரிக்காய் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது.

    வ.உ.சி. மார்க்கெட்டில் மற்ற காய்களின் விலை கிலோவில் வருமாறு:

    பீர்க்கங்காய்-70, பாவைக்காய்-50, கருப்பு அவரை-110, பட்ட அவரை-70, சுரைக்காய்-20, பச்சைமிளகாய்-50, முட்டைகோஸ்-50, காலி பிளவர்-40, முருங்கைகாய்-120, வெண்டைக்காய்-40, முள்ளங்கி-50, பீட்ரூட்-80, சின்ன வெங்காயம்-80, பெரிய வெங்காயம்-45, தக்காளி-30.

    Next Story
    ×