search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசா மருத்துவமனை"

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் சென்றிருந்தார்
    • ஹமாஸ்க்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு துணை நிற்பதை உணர்த்தும் வகையில் பைடன் பயணம் அமைந்திருந்தது

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல் மிகப்பெரியதாக உள்ளது. ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    நேற்று முன்தினம் காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் சென்றிருந்தார். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். அப்போது, காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை என்றார். தாக்குதல் நடத்தியது வேறு அமைப்பு எனக் கூறினார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேல் செல்லும் அவர் நேதன்யாகுவை சந்தித்து பேசுகிறார்.

    காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஜோ பைடன்- அரபு நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.

    • காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது யார்?
    • இஸ்ரேல் ராணுவம்- பாலஸ்தீன அமைப்பு பரஸ்பர குற்றச்சாட்டு

    ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு இஸ்ரேல் மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்றிரவு காசாவில் உள்ள மருத்துவமனை மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு உலகத் தலைவர்களால் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    காசாவின் வடக்கு பகுதியில் இருந்து தென்பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் ராணுவத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதனால் பெரும்பாலான மக்கள் மருத்துவமனையில் அகதிகளாக தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகளுடன் அப்பாவி மக்களும் உயிரிழந்துள்ளனர்.

    இந்த தாக்குதலை இஸ்ரேல் ராணுவம்தான் நடத்தியது என்று பாலஸ்தீனம் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், நாங்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை. பாலஸ்தீனத்தின் இஸ்லாமிக் ஜிகாத் (Islamic Jihad) அமைப்புதான் ஏவுகணை தாக்குதலின்போது தவறாக கையாண்டு தாக்கு நடத்தப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு பொறுப்பு ஏற்கவில்லை. இஸ்ரேல் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

    இந்த நிலையில், டிரோன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், எங்கள் தாக்குதல் இதுபோன்று சேதத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளது.

    அந்த வீடியோவை சுட்டிக்காட்டிய இஸ்ரேல் ராணுவம், நாங்கள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியிருந்தால் அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டிருக்கும். ஆனால், மருத்துவமனையில் அப்படி பள்ளம் ஏற்படவில்லை.

    எங்கள் தாக்குதலில், மிகப்பெரிய அளவில் தீப்பற்றி எரியும் சம்பவம் இருக்காது. ஆனால், மருத்துவமனையின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அதிக அளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.

    எங்கள் தாக்குதலின்போது துண்டு துண்டான கூரைகள் அப்படியே தொங்கிக் கொண்டிருக்கும். அதுபோன்று இல்லாமல் பக்கத்து கட்டங்களில் பெரிய பெரிய துண்டுகளாக அப்படியே உள்ளன.

    இவ்வாறு இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், இருவரின் உரையாடலை இடைமறித்த ஆடியோவையும் வெளியிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜோர்டானில் பேச்சவார்த்தை ரத்து செய்யப்பட்ட போதிலும் இஸ்ரேல் சென்றுள்ளார்
    • இஸ்ரேல் பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி திடீரென யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. மேலும், 100-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் அறிவித்து, காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எந்தவித தொய்வும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஏவுகணை தாக்குதல் மட்டுமே நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழியாகவும் தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

    காசாவை ஆக்கிரமிக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதல் இருப்பதால், இது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.

    அரபு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக ஜோர்டானில் இன்று அரபு நாட்டு தலைவர்களுடன் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்த இருந்தார்.

    இஸ்ரேல் சென்று, அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்த பின், இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில்தான் காசாவில் உள்ள மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 500 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இதனால், அரபு நாட்டு தலைவர்கள் ஜோ பைடன் உடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்ற செய்தி வெளியானது. எங்களால் போரை முடிவுக்கு கொண்டுவர இயலாது என்பதால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக ஜோர்டான் தெரிவித்தது.

    இருந்தாலும், திட்டமிட்டபடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றடைந்துள்ளார். அவரை பெஞ்சமின் நேதன்யாகு கட்டித்தழுவி வரவேற்றார்.

    ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலின்போது இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என பைடன் தெரிவித்திருந்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று இஸ்ரேல் வந்துள்ளார்.

    என்றபோதிலும், இஸ்ரேலிடம் காசா மீதான கண்மூடித்தனமான தாக்குதலை குறைக்க வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காசாவில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவியை ஊக்குவிக்கவும் பைடன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • காசா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்
    • அரபு தலைவர்களை இன்று ஜோர்டானில் சந்தித்து பேச இருந்தார் ஜோ பைடன்

    ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காசாவில் உள்ள மக்கள் ஏவுகணை தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று காசாவில் உள்ள மருத்துவமனை ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் தாக்கியதாக காசா மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அதேவேளையில், பாலஸ்தீனத்தில் இருந்து தவறாக கையாளப்பட்ட ஏவுகணை வெடிப்பால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது என்று இஸ்ரேல் கூறி வருகிறது.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேல் செல்லும் அவர், கடந்த 7-ந்தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிராக தங்களுடைய ஆதரவை இஸ்ரேலுக்கு தெரிவிக்க இருக்கிறார். மேலும், காசா ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஜோ பைடன் ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர், பாலஸ்தீன தலைவர் ஆகியோரை சந்தித்து பேச இருந்தார்.

    இதனால் காசா- இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஆகவே, இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு ஜோ பைடன் அமெரிக்கா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×