search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்காதல் கொலை"

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
    • செல்வபிரகாசம் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு போலீசில் புகார் அளித்தார்.

    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வ பிரகாசம். இவரது மனைவி லாவண்யா. இவர்களது மகன் சர்வேஸ்வரன் (வயது 2½). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து மனைவி லாவண்யாவை பிரிந்து செல்வபிரகாசம் தனியாக சென்று விட்டார். இதனால் லாவண்யா, தனது மகன் சர்வேஸ்வரனுடன் தனியாக வசித்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் மகன் சர்வேஸ்வரன் தவறி கிழே விழுந்ததில் தலையில் காயம் அடைந்து இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சர்வேஸ்வரன் உடல் அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் இதுபற்றி லாவண்யா தனது கணவர் செல்வபிரகாசத்துக்கு தகவல் தெரிவிக்க வில்லை.

    இதற்கிடையே செல்வ பிரகாசம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகனை பார்க்க சென்றபோது அவன் இறந்து இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் லாவண்யாவின் நடவடிக்கை குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் தெரிவித்தனர்.

    இதையடுத்து செல்வபிரகாசம் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதல், உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் லாவண்யா, அவரது கள்ளக்காதலனான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனுடன் சேர்ந்து குழந்தை சர்வேஸ்வரணை அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    மேலும் கொலையை மறைக்க அவன் தவறி கிழே விழுந்ததில் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனால் ஆரம்பத்தில் லாவண்யாவின் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. அவரும் மகன் சாவில் சோகத்தில் இருப்பது போல் நடித்து வந்தார்.

    ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையின் போது லாவண்யா தனது மகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து நாடகமாடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து லாவண்யா, அவரது கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கணவர் பிரிந்து சென்ற பின்னர் வீட்டின் அருகே வசித்த மணிகண்டனுடன் லாவண்யாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவர்களின் உல்லாச சந்திப்பிற்கு இடையூறாக குழந்தை சர்வேஸ்வரன் இருந்தான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், குழந்தை சர்வேஸ்வரன் உடலில் கடித்து வைத்து உள்ளார். மேலும் இருவரும் தொடர்நது குழந்தை சர்வஸே்வரனை அடித்து உதைத்து கொடுமை படுத்தி உள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளியதில் குழந்தை சர்வேஸ்வரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டான். இது வெளியே தெரிந்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து லாவண்யா நாடகமாடியது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தன்னை பிரிந்து சென்றதால் ராஜேஸ்வரி மீது பரமசிவத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
    • ரங்கப்பநாயக்கன்பட்டி கண்மாயில் பகுதியில் பதுங்கி இருந்த பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர்.

    தாயில்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துப்பாண்டி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி ராஜேஸ்வரி தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்கு பதிந்து அவரை கொன்றது யார்? என்று விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின.

    சாத்தூர் அருகே உள்ள சங்கரநத்தம் கிராமத்தை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி பரமசிவம் (51). விறகு விற்க வந்தபோது இவருக்கும், ராஜேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    இந்நிலையில் ராஜேஸ்வரி கணவரை பிரிந்து பரமசிவத்துடன் சென்று விட்டார். அவருடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜேஸ்வரி தனது கணவர் வீட்டுக்கே வந்து விட்டதாக தெரிகிறது.

    தன்னை பிரிந்து சென்றதால் ராஜேஸ்வரி மீது பரமசிவத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அந்த ஆத்திரத்திலேயே சம்பவத்தன்று ராஜேஸ்வரியை கழுத்து அறுத்து கொன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து பரமசிவம் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக இருந்த அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ரங்கப்பநாயக்கன்பட்டி கண்மாயில் பகுதியில் பதுங்கி இருந்த பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். ராஜேஸ்வரியை கொலை செய்து விட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த பரமசிவத்தை 18 நாட்களுக்கு பிறகு போலீசார் இன்று கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் ஏசுதாசனுக்கும், அன்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 58). இவர் அந்த பகுதியில் செங்கல் சூளை வைத்துள்ளார். நேற்று இரவு ஏசுதாசன் செங்கல் சூளையிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

    ஆரல்வாய்மொழி பகுதியில் வந்து கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் ஏசுதாசனை வழி மறித்து கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் ஏசுதாசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. ரத்தவெள்ளத்தில் கிடந்த ஏசுதாசனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஏசுதாசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை மேற் கொண்டனர். ஏசுதாசன் மனைவி ஜெயா கொடுத்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகரை சேர்ந்த அன்பு என்ற அன்பழகன், விஜயன், திருப்பதிசாரத்தை சேர்ந்த மணிகண்டன், ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்டை சேர்ந்த தங்க ஜோஸ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கொலை செய்யப்பட்ட ஏசுதாசன் அதே பகுதியை சேர்ந்த அன்புவின் உறவுக்கார பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். பின்னர் அவரை தூத்துக்குடிக்கு அழைத்து சென்று தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை இங்கு அழைத்து வந்தார். இதனால் அன்புவிற்கும், ஏசுதாசனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் ஏசுதாசனுக்கும், அன்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆரல்வாய் மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தான் அன்பு பழிக்கு பழியாக ஏசுதாசனை தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது.

    கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்த 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

    இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட ஏசுதாசனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

    ×