search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்தூரி விழா"

    • சந்தனக்கூடு ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நாகூர் தர்காவை வந்தடையும்.
    • நாளை அதிகாலை ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும்.

    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி கந்தூரி விழா கடந்த மாதம்(டிசம்பர்) 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் இரவு தர்கா அலங்கார வாசலில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

    கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரவு 8 மணிக்கு நாகை யாஹூசைன் பள்ளிவாசல் தெருவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று அதிகாலை நாகூர் தர்கா அலங்கார வாசலை வந்தடையும்.

    இதை தொடர்ந்து நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும்.

    • உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா நாகூரில் உள்ளது.
    • சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது.

    நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்கா கந்தூரி விழா கடந்த 24-ந்தேதி கொடியற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 2-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    இதையொட்டி தர்கா உள்புறத்தில் சந்தனம் அரைக்கும் பணி நேற்று மாலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு தர்கா மேனேஜிங் டிரஸ்டி செய்யது காமில் சாஹிப் தலைமை தாங்கினார்.

    பரம்பரை டிரஸ்டி அபுல் பதஹ் சாஹிப் முன்னிலையில் பரம்பரை டிரஸ்டிகள் கலந்து கொண்டு சந்தனம் அரைத்தனர்.

    • இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் நாகூர் தர்காவுக்கு வருவதால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
    • கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 3-ம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது.

    இந்த தர்காவுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் இந்த தர்காவுக்கு வருவதால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 466-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி தர்காவின் ஐந்து மினாராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள், நாகை மீரா பள்ளிவாசலுக்கு எடுத்து வரப்பட்டு, "துவா' ஓதப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட பெரிய ரதம், சின்ன ரதம், செட்டிப்பல்லக்கு மற்றும் கப்பல் ரதம், சிங்கப்பூரில் இருந்து வர வழைக்கப்பட்ட கொடி உள்ளிட்ட அலங்கார வாகனங்களில், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக நாகை, நாகூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.

    ஆண்டவரின் பாடலை தாஹிரா இசையுடன் இசைத்து வந்த இஸ்லாமியர்கள் கொடியினை வரவேற்றனர். அதனை தொடர்ந்து கொடிக்கு தூவா ஓதப்பட்டு வண்ணமிகு வாணவேடிக்கை முழங்க நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள 5 மினாராக்களிலும் கொடியேற்றப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு நாகூர் ஆண்டவரை பிரார்த்தனை செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வருகிற 2-ம் தேதி இரவு தாபூத்து என்னும் சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலத்தின் முடிவில் பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி 3-ந் தேதி அதிகாலை வரை நடைபெறும்.

    கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 3-ம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அல்ஹாஜ் டாக்டர் செய்யது காமில் சாகிப் காதிரி-நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • 24-ந்தேதி கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • ஜனவரி 2-ம்தேதி சந்தன கூடு ஊர்வலம் நடக்கிறது.
    • 3-ம் தேதி சந்தனம் பூசும் நிகழ்வு நடக்கிறது.

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடை பெறுவது வழக்கம்.

    அதன்படி வருகிற 24-ந்தேதி 466-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை ஆண்டவர் தர்காவில் பரம்பரை கலிபா தலைமையில் சிறப்பு துவா ஓதப்பட்டது. பின்னர் மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது.

    அப்போது, கூடியிருந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் கற்கண்டு மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 24ம் தேதி கொடியேற்று வைபவமும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 2-ம் தேதி நாகையில் இருந்து சந்தன கூடு ஊர்வலமும் 3-ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெறுகிறது.

    • தடுப்பு கம்பி அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
    • யானைகட்டி முடுக்கு பகுதியில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைப்பது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழா தொடங்குவதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ஆய்வு செய்தார். தர்கா குளத்தை சுற்றி தடுப்பு கம்பி அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

    அப்போது தர்காவை சுற்றியுள்ள சாலைகளில் பேவர் பிளாக் அமைப்பது மற்றும் யானைகட்டி முடுக்கு பகுதியில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

    ஆய்வின் போது தர்கா நிர்வாகிகள், நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில் குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர், நகராட்சி ஆணையர், நகராட்சி செயற்பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

    • பனைக்குளத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா நடந்தது.
    • இதில் ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் காதர் மைதீன், செயலாளர் தாஹிர் உசேன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் ஆண்டு தோறும் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா நடைபெறும். முஸ்லிம் நிர்வாக சபை, வாலிப முஸ்லிம் சங்கம் சார்பில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா சிறப்பு மவுலிது ஓதப்பட்டு இன்று காலை நடந்தது. ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் தலைமையில் சிறப்பு துவா ஒதப்பட்டு சட்டி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து சுப்ஹூ தொழுகை நிறைவடைந்ததும் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.

    பேஷ் இமாம்கள் அபுதாகிர், சேக் அப்துல்லா ஆகியோர் உலக மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டி சிறப்பு துவா ஒதப்பட்டது. முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி தலைமையில் பொதுமக்களுக்கு தேங்காய் சோறு நேர்ச்சி வினியோகம் நடந்தது. இதில் முஸ்லிம் நிர்வாக சபை செயலாளர் சாகுல் ஹமீது, முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் ஜெய்னுல் அஸ்லாம், செயலாளர் முகமது ரோஸ் சுல்தான், வாலிப முஸ்லிம் சங்கம் தலைவர் சீனி அன்வர் அலி, செயலாளர் சீனி ரிஜாஸ் கான், ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் காதர் மைதீன், செயலாளர் தாஹிர் உசேன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறும்.
    • நிறைவு நாளில் கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் சுமார் 721 ஆண்டுகளாக மதங்களை கடந்து மனங்கள் சங்கமிக்கும் தர்காவாக ஹக்கீம் ஷெக்ய்கு தாவூது தர்கா அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த தர்கா விளங்கி வருகிறது. புகழ்பெற்ற தர்காவின் கந்தூரி விழா நடைபெற இருப்பதால் அதற்கான கொடி மரம் நடுவிழா நேற்று நடைபெற்றது.

    தொடந்து, வருகிற 25-ம் தேதி புனித கொடி ஏற்றப்பட்டு அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறும். நிறைவு நாளில் கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். விழாவில் ஜாதி, இன, மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டு விழாவை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றனர்.

    இங்கு மதங்களை கடந்து மனங்கள் சங்கமிப்பதும், மனித நேயம் உயிரோடு இருப்பதும், தர்காவில் உள்ள மகானின் சிறப்பம்சம் என கூறப்படுகிறது. மேலும், இந்த விழாவிற்கு விஷ்வகர்மா சங்கம் மூலம் புனித கொடி வழங்கப்படுகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் 14 நாட்கள் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    கந்தூரி விழாவிற்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், போலீசாரும் உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்தனர். எனவே, அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு முத்துப்பேட்டை தர்கா நிர்வாகத்தினர், பாரம்பரிய முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாஸ்கர் அலி தெரிவித்துள்ளனர்.

    • ஆயிரக்கணக்கானோருக்கு நெய் சோறு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • பாடகர் சீனி முகமது இஸ்லாமிய கீதம் பாடினார்.

    ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பாசிப்பட்டறைதெரு முஸ்லிம் ஜமாத் சார்பில் நபிகள் நாயகம் பிறந்ததின மீலாது விழா மற்றும் முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானி நினைவு கந்தூரி மற்றும் மவுலிது விழா ஜமாத் டிரஸ்டி காதர் முகைதீன் தலைமையில் நடைபெற்றது.

    நிர்வாக டிரஸ்டி அசரப் அலி, டிரஸ்டிகள் காதர், உஸ்மான் அலி, ஜபருல்லா, சைரூஸ் அலி, செய்யது அபுதாகிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதரசா ஆசிரியர் சம்சுதீன் ஆலிம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். பாடகர் சீனி முகமது இஸ்லாமிய கீதம் பாடினார். தலைமை இமாம் அப்துல்காதர் வரவேற்றார். ராமநாதபுரம் நகர் வட்டார உலமா சபை தலைவர் முகமது யாசின், சேலம் தலைமை இமாம் முகமது இப்ராஹிம் ஆகியோர் பேசினர்.

    கந்தூரி விழாவையொட்டி ஆயிரக்கணக்கானோருக்கு நெய் சோறு அன்னதானம் வழங்கப்பட்டது. மவுலிது நிகழ்ச்சியில் ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் இமாம்கள், ஆலிம்கள், உலமாக்கள், ஜமாத் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மவுலவி சேக் அப்துல் காதிர் உலக நன்மைக்காக பிரார்த்தனை துவா ஓதினார். முடிவில் துணை இமாம் அன்வர் அலி நன்றி கூறினார்.

    • சந்தன குட ஊர்வலம், சந்தனம் பூசுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • முடிவில் பொதுமக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.

    கோபால்பட்டி அருகே கணவாய்பட்டியில் பக்கீர் செய்யது சாயுபு தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா தர்காவில் கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சந்தன குட ஊர்வலம், சந்தனம் பூசுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கந்தூரி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முடிவில் பொதுமக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தர்மராஜன், நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக்சிக்கந்தர் பாட்ஷா, கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், கணவாய்பட்டி ஜமாத் தலைவர் ராஜ்கபூர், செயலாளர் பாட்ஷா, பொருளாளர் ஷாஜகான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • துதிபாடும் நிகழ்ச்சி தினமும் நடந்து வருகிறது.
    • பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    தாராவியில் 57-வது சந்தன கூடு திருவிழா கடந்த 2-ந் தேதி முதல் வருகிற 13-ந் தேதி வரை தாராவி 90 அடி சாலை சங்கம் கல்லியில் உள்ள அஸ்தானா தர்கா மற்றும் சன்னி ஜிலானி மசூதியில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி நீராட்டு விழாவும், மறுநாள் கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதனை தொடர்ந்து துதிபாடும் நிகழ்ச்சி தினமும் மாலை 6 மணி அளவில் நடந்து வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.பி, ராகுல் செவாலே, சயான் கோலிவாடா பா.ஜனதா எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தன கூடு ஊர்வலமாக சங்கம் கல்லி, 90 அடிசாலை, கும்பர்வாடா, ஷாகுநகர், ஜாஸ்மின் மில் ரோடு, மாகி பாடக், படி மஸ்ஜித், ஹோலி மைதானம், காலக்கில்லா எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சங்கம் கல்லி வந்தடைந்தது.

    அதன்பின்னர் சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற்றது. தொழுகைக்கு பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • தொண்டி அருகே கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 2-ம் நிகழ்ச்சியாக சந்தாதாரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் 99-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் நடந்தது. மஸ்தான் சாகிபு தர்காவில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் ஊர்வலமாக கொடி கொண்டு செல்லப்பட்டு ஏற்றப்பட்டது.

    இதில் திரளாேனார் கலந்து கொண்டனர். 2-ம் நிகழ்ச்சியாக சந்தாதாரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. குர்ஆன் ஓதி மகான் பெயரால் தப்ரூக் என்னும் உணவு வழங்கப்படும். மகான் பெயரால் மவுலிது ஓதி கந்தூரி விழா நிறைவுபெறும்.

    • நாள்தோறும் இரவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
    • தர்கா முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் தர்காவில் சந்தனக்கூடு விழாவானது கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து நாள்தோறும் இரவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    இதற்காக மின் விளக்குகளால் கப்பல் போன்று அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதமானது, ஊர்வலமாக சிலம்பாட்டம், மேளதாள வாத்தியங்கள் முழங்க, தெற்குமாரட் வீதி, காஜிமார்தெரு, நேதாஜி ரோடு, சிம்மக்கல், நெல்பேட்டை வழியாக கொண்டு செல்லப்பட்டது.

    இந்த விழாவில் மதுரை மட்டுமின்றி விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்தனர். சந்தனகூடுவிழாவினை முன்னிட்டு தர்கா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    ×