என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா
- பனைக்குளத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா நடந்தது.
- இதில் ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் காதர் மைதீன், செயலாளர் தாஹிர் உசேன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் ஆண்டு தோறும் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா நடைபெறும். முஸ்லிம் நிர்வாக சபை, வாலிப முஸ்லிம் சங்கம் சார்பில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா சிறப்பு மவுலிது ஓதப்பட்டு இன்று காலை நடந்தது. ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் தலைமையில் சிறப்பு துவா ஒதப்பட்டு சட்டி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து சுப்ஹூ தொழுகை நிறைவடைந்ததும் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
பேஷ் இமாம்கள் அபுதாகிர், சேக் அப்துல்லா ஆகியோர் உலக மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டி சிறப்பு துவா ஒதப்பட்டது. முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி தலைமையில் பொதுமக்களுக்கு தேங்காய் சோறு நேர்ச்சி வினியோகம் நடந்தது. இதில் முஸ்லிம் நிர்வாக சபை செயலாளர் சாகுல் ஹமீது, முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் ஜெய்னுல் அஸ்லாம், செயலாளர் முகமது ரோஸ் சுல்தான், வாலிப முஸ்லிம் சங்கம் தலைவர் சீனி அன்வர் அலி, செயலாளர் சீனி ரிஜாஸ் கான், ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் காதர் மைதீன், செயலாளர் தாஹிர் உசேன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்