search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் தற்கொலை"

    • கடந்த 3 நாட்களாக சக்திவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
    • கோபம் அடைந்த சக்திவேல் அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    கடலூரை அடுத்த வெங்கடாம் பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). விவசாயி. கடந்த 3 நாட்களாக சக்திவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதன் காரணமாக அவரது மனைவி மகேஸ்வரி சக்திவேலை திட்டி உள்ளார். இதனால் கோபம் அடைந்த சக்திவேல் அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோகத்தில் இருந்து வந்த மாரப்ப கவுண்டர் சம்பவத்தன்று அதிகாலை திடீரென வாந்தி எடுத்துள்ளார்.
    • அவரது மகள் பூங்கொடி அவரிடம் விசாரித்தபோது களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொண்டப்ப நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த வர் மாரப்பகவுண்டர் (82). விவசாயி.

    கடந்த 1½ வருடங்களுக்கு முன் இவரது மனைவி இறந்துவிட்டார். அன்று முதல் சோகத்தில் இருந்து வந்த மாரப்ப கவுண்டர் சம்பவத்தன்று அதிகாலை திடீரென வாந்தி எடுத்துள்ளார்.

    அவரது மகள் பூங்கொடி அவரிடம் விசாரித்தபோது களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு சத்திமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரப்ப கவுண்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மனைவி உமா தூங்கியவுடன் சமையல் அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து ஈவு இரக்கமின்றி மனைவியின் கழுத்தை அறுத்தார்.
    • சிறிது நேரத்தில் உமா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் சிம்மாதிரி (வயது60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமா (45). தம்பதிக்கு கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சிம்மாதிரிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டையிட்டு வந்தார். இதேபோல் கடந்த சனிக்கிழமை இரவும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தூங்கச் சென்றனர். மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் சிம்மாதிரி தூங்காமல் விழித்துக் கொண்டே இருந்தார்.

    மனைவி உமா தூங்கியவுடன் சமையல் அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து ஈவு இரக்கமின்றி மனைவியின் கழுத்தை அறுத்தார்.

    சிறிது நேரத்தில் உமா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பக்கத்து அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நீண்ட நேரம் சிம்மாதிரியின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது உமா ரத்த வெள்ளத்திலும், சிம்மாதிரி மற்றொரு அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மனைவி இறந்த மன வேதனையில் இருந்த சின்னச்சாமி சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே உள்ள அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 77). இவரது மனைவி லிங்கம்மாள். கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்ேபாது முதல் மன வேதனையில் இருந்த சின்னச்சாமி சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது மகன் முத்துச்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
    • மிகுந்த வேதனையில் இருந்த நந்தகுமார் யாருடனும் பேசாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள குட்டம் ஊராட்சி சுக்காம்பட்டியை சேர்ந்தவர் நந்தகுமார்(25). இவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த கவுசல்யா(22) என்பவரும் காதலித்து கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

    அதன்பிறகு மிகுந்த வேதனையில் இருந்த நந்தகுமார் யாருடனும் பேசாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமான ஓராண்டிலேயே கணவனும், மனைவியும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×