search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையடைப்பு."

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்ததையொட்டி விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    விழுப்புரம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். இந்த தகவல் தமிழகம் முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப் புரம்-புதுவை சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    இதேபோல் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந் தூர்பேட்டை, திருநாவலூர், மரக்காணம் உள்பட பல இடங்களிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடை மற்றும் பார்களும் அடைக்கப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி முதல் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பணி முடிந்து வீடுகளுக்கு செல்ல முடியாமல் ஊழியர்கள், பொதுமக்கள் தவித்தனர். பின்னர் அவர்கள் ஆட்டோ மூலம் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

    இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை. விழுப்புரம் பஸ் நிலையங்கள் வெறிச் சோடியது.

    புதுவையில் இருந்து இன்று காலை சென்னைக்கு சென்ற ரெயில் விழுப்புரத்துக்கு காலை 6.15 மணிக்கு வந்தது. அந்த ரெயிலில் சென்னைக்கு தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் சென்றனர்.

    பஸ்கள் ஓடாததால் பல ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    இதேபோல் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

    இன்று காலை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. கடலூர் லாரன்ஸ் ரோடு, இம்பீரியல் சாலை, பாரதி சாலை உள்பட பல சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடின.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி முதல் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அரசு பஸ்கள் அனைத்தும் பணிமனைக்கு திரும்பின.

    பஸ்கள் திடீரென்று நிறுத்தப்பட்டதால் கடலூர் பஸ் நிலையத்தில் நேற்று இரவு கூடிய பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

    உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஆட்டோக்களை வரவழைத்து அதன் மூலம் அவர்களை பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி உள்பட பல இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம் உள்பட பல ஊர்களின் பஸ் நிலையங்கள் வெறிச் சோடியது.

    சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. #RIPKarunanidhi #Karunanidhi #Marina4Karunanidhi
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார். 

    தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக சார்பில் முறையிடப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது அரசுத் தரப்பு மற்றும் திமுக தரப்பு வழக்கறிஞர் காரசாரமாக வாதிட்டனர்.

    அப்போது சட்ட சிக்கல்கள், வலுக்கு நிலுவை என்றீர்கள்? இப்போது வழக்குகள் இல்லாததால்எதிர்ப்பது ஏன்? என அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். காமராஜருக்கு நினைவிடம் அமைக்க மெரினாவில் இடம் கோரவில்லை என்றும், ஜானகியம்மாள் இறந்தபோதும் முறையான அனுமதி கோரப்படவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர். 

    எனினும் பல்வேறு காரணங்களைக் கூறிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என தொடர்ந்து பிடிவாதம் செய்தார். திமுக தரப்பும் எதிர்வாதம் செய்தது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வாசித்தனர். அப்போது, திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். #RIPKarunanidhi #Karunanidhi #Marina4Karunanidhi
    புதுச்சேரியில் திமுக தலைவர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். #RIPKarunanidhi #KarunanidhiStatue
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் புதுச்சேரியிலும் அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

    மேலும், புதுச்சேரி அரசு சார்பில் கருணநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்றும் காரைக்காலில் அமைய உள்ள புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்றும் நாராயணசாமி அறிவித்துள்ளார். #RIPKarunanidhi #KarunanidhiStatue #PuducherryCM 

    ×