search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus stopped"

    • இந்து அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தை இன்று அறிவித்திருந்தனர்.
    • விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    முன்னாள் மத்திய மந்திரியும் நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசா இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனை கண்டித்தும், ஆ.ராசாவை கைது செய்யக்கோரியும் புதுவையில் இந்து முன்னணி, இந்து அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தை இன்று அறிவித்திருந்தனர். அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. 

    இதையொட்டி புதுவை யில் தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதேபோல விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு செல்லும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. திட்ட மிடப்பட்டபடி விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதுவைக்கு விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ்கள் வழக்கம்போல் சென்றது. திருபுவனை, வில்லிய னூர் பகுதியில் விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன.

    விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு ஏரா ளமானோர் வேலைக்கு சென்றுவருகிறார்கள். மேலும் ஜிப்மர், புதுவை கதிர்காமத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்தி ரிக்கு விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் சென்று பயனடைந்து வருகிறார்கள். ஆனால் இன்று விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் புதுவை ஜிப்மருக்கு செல்ல வேண்டிய நோயாளிகள் கடும் அவதி யடைந்தனர். அதோடு வேலைக்கு செல்வோரும் முற்றிலும் பாதிக்க ப்பட்டனர். விழுப்புரத்தில் இருந்து புதுவை எல்லையான கெங்க ராம்பாளையம் வரை அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அங்கிருந்து ஷேர் ஆட்டோ, வாடகை கார்களில் ஏராள மானோர் புதுவைக்கு சென்றனர்.

    மஞ்சூரில் இருந்து கோவைக்கு செல்லும் பிரதான சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.
    மஞ்சூர்:

    நீலகிரியில் இருந்து கோவைக்கு செல்ல, 3–வது மாற்றுப்பாதையாக மஞ்சூர் வழியாக ஒரு முக்கிய சாலை உள்ளது. இது மஞ்சூரில் இருந்து கெத்தை, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு செல்லும் பிரதான சாலை. இந்த சாலையோரங்களில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இதனால் அவ்வப்போது காட்டுயானை, காட்டெருமைகள் சாலையில் உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருவது, வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை அந்த சாலை வழியாக கீழ்குந்தாவில் இருந்து கோவைக்கு அரசு பஸ் சென்றது. பெரும்பள்ளம் அருகே ஒரு காட்டுயானை சாலையின் குறுக்கே நின்றவாறு அரசு பஸ்சை வழிமறித்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் 1 மணி நேரத்திற்கு பிறகு, சாலையை விட்டு காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து அந்த வழியே மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியது.
    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்ததையொட்டி விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    விழுப்புரம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். இந்த தகவல் தமிழகம் முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப் புரம்-புதுவை சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    இதேபோல் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந் தூர்பேட்டை, திருநாவலூர், மரக்காணம் உள்பட பல இடங்களிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடை மற்றும் பார்களும் அடைக்கப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி முதல் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பணி முடிந்து வீடுகளுக்கு செல்ல முடியாமல் ஊழியர்கள், பொதுமக்கள் தவித்தனர். பின்னர் அவர்கள் ஆட்டோ மூலம் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

    இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை. விழுப்புரம் பஸ் நிலையங்கள் வெறிச் சோடியது.

    புதுவையில் இருந்து இன்று காலை சென்னைக்கு சென்ற ரெயில் விழுப்புரத்துக்கு காலை 6.15 மணிக்கு வந்தது. அந்த ரெயிலில் சென்னைக்கு தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் சென்றனர்.

    பஸ்கள் ஓடாததால் பல ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    இதேபோல் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

    இன்று காலை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. கடலூர் லாரன்ஸ் ரோடு, இம்பீரியல் சாலை, பாரதி சாலை உள்பட பல சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடின.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி முதல் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அரசு பஸ்கள் அனைத்தும் பணிமனைக்கு திரும்பின.

    பஸ்கள் திடீரென்று நிறுத்தப்பட்டதால் கடலூர் பஸ் நிலையத்தில் நேற்று இரவு கூடிய பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

    உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஆட்டோக்களை வரவழைத்து அதன் மூலம் அவர்களை பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி உள்பட பல இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம் உள்பட பல ஊர்களின் பஸ் நிலையங்கள் வெறிச் சோடியது.

    ×