search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைகள் ஏலம்"

    • பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயிலின் பொது ஏலம் நடந்தது.
    • ஏலதாரர்கள் தங்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

    பவானி:

    பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் பின்புறம் உள்ள பரிகார மண்டபத்தில் பரிகார பொருட்கள் விற்கப்படும் உரிமைக்கான ஏலம், பிரசாத கடை, புக் ஸ்டால், ராஜகோபுரம் முன் பகுதியில் உள்ள தேங்காய் பழம் பூ விற்பனை செய்யும் கடைகள் மற்றும் டீக்கடை, ஓட்டல் போன்றவற்றிற்கு ஒராண்டு வாடகை உரிமம் பெறுவதற்கான ஏலம் கோவில் அதிகாரிகள் மூலம் நடைபெறுவது வழக்கம்.

    பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயிலின் பசலி 1433 க்கான பலவகை உரிம இனங்கள் பொது ஏலம் நேற்று மாலை ராஜகோபுரம் அருகில் உள்ள கோவில் திருமண மண்டபத்தில் நடந்தது.

    ஈரோடு மாவட்ட உதவி ஆணையர் அன்னக்கொடி, பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் சுவாமிநாதன், கோவில் கண்காணிப்பாளர் நித்யா கோவில் பணியாளர்கள் மூலம் ஏலம் விடப்பட்டது.

    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 23 கடைகளில் நேற்று 17 கடைகளுக்கு ஒராண்டு வாடகை உரிமம், ஆற்றில் துணி சேகரம் செய்யும் உரிமம், ராஜ கோபுரம் முன் உள்ள கோட்டை விநாயகர் கோவி லில் பக்தர்கள் உடைக்கும் சிதறு தேங்காய் சேகரிக்கும் உரிமம், தென்னை மரங்கள் பலன் உரிமம் ஆகிய இனங்க ளுக்கு ஏலம் விடப்பட்டதில் 47.63 லட்சம் ரூபாய்க்கும்,

    கடந்த சில தினங்களுக்கு முன் கோவில் பின்பகுதியில் பரிகார பொருட்கள் விற்பனை செய்யும் உரிமை க்கான ஏலம் ரூ. 69 லட்சம் ரூபாய் என ஒரு கோடியே 16 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் நடை பெற்று உள்ளதாக சங்கமே ஸ்வரர் கோவில் நிர்வா கத்தினர் தெரிவித்தனர்.

    இந்த ஏலத்தில் கலந்து கொண்ட ஏலதாரர்கள் தங்களுக்கு அடிப்படை வசதியான கழிப்பிட வசதி குடிநீர் வசதி போன்றவையை கோவில் நிர்வாகத்தினர் முறைப்படி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

    கோவில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர். 

    • வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன
    • ஏ.டி.எம். திறக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தரை, முதல் தளத்தில் 85 கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    அவற்றில் 7 கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் முதலுதவி அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வு அறை, போக்குவரத்து ஊழியர்களுக்கு 2 ஓய்வு அறைகள், காவலர் அறை, காவல் கண்காணிப்பு கேமராக்கள் அறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    அதைத்தவிர ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு சில கடைகள், ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மீதமுள்ள 68 கடைகள் ஏலம் விடப்பட உள்ளது. அதிக வாடகை மற்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஏலம் விடாமல் ஒத்திவைத்தனர்.பஸ் நிலையம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் கடைகள் திறக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஏற்கனவே 4 தடவைக்கு மேல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் நாளை வியாழக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று கடைகள் ஏலம் தொடர்பான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

    இதனை ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். மாநகராட்சி விதியில் கூறியுள்ளபடி வைப்புத் தொகை மற்றும் முன்பணம் செலுத்த அறிவுறுத்தினர்.

    புதிய பஸ் நிலையத்தில் சிறு வியாபாரிகள் அமர்ந்து தண்ணீர் குளிர்பானம் பிஸ்கட் தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.சில வியாபாரிகள் விற்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளது.

    பெரும்பாலும் நீண்ட தூரப் பயணிகள், வளாகத்தில் வியாபாரிகள் விற்கும் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. பண்டிகை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில், வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    பெண்கள் மற்றும் முதியோர்கள் உட்பட பயணிகள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பொருட்களை வாங்க முடியவில்லை.

    இதனால் அதிக அளவு விலை கொடுத்து பொருட்களை வாங்கும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே கடைகளை விரைந்து திறக்கவும், புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஏ.டி.எம்.களை அமைக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் கடைகள் 32 ஆண்டுகளாக ஏலம் விடாமல் உள்ளன.
    • நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் ஏ.ஷாஜகான் தலைமையில், செயல் அலுவலர் மாலதி, உதவி சேர்மன் வயணப்பெருமாள் முன்னிலையில் நடந்தது. ராஜேஷ் வரவேற்றார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சேகர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பேசுகையில், பஸ் நிலைய பகுதிகளில் உள்ள பேரூராட்சி கடைகள் 32 ஆண்டுகளாக ஏலம் விடப்படாமல் உள்ளது. இதனால் பேரூராட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த கடைகளை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஆண்டுக்கு 5 சதவீதம் வாடகை உயர்த்தப்படும்
    • ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஏலம் மற்றும் பொது ஒப்பந்த புள்ளியில் குத்தகை இனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடைகள் ஏலம் 2-வது மண்டல அலுவலகத்தில் உதவி கமிஷனர் சுதா தலைமையில் இன்று நடந்தது.

    இதில் உதவி வருவாய் அலுவலர் குமரவேல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

    2023-24 ஆம் ஆண்டு முதல் 26-ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளுக்கான குத்தகை ஏலம் நடந்தது.

    இதில் பழைய மீன் மார்க்கெட் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கடைகள், இருசக்கர வாகன வசூல் உரிமம், பொருள் பாதுகாப்பு பெட்டகம், அருகில் உள்ள கட்டண கழிப்பிடம், பழைய பஸ் நிலைய பொருள் வைப்பு பாதுகாப்பு அறை உரிமம், பழைய பஸ் நிலையத்தின் அருகில் உள்ள பைக் நிறுத்துமிடம் பஸ் உள்ளிட்ட இடங்களுக்கு ஏலம் நடந்தது.

    குத்தகை விடப்பட்ட கடைகளுக்கு ஆண்டுக்கு 5 சதவீதம் வாடகை உயர்த்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • வேலூரில் பயணிகள் அவதி
    • முறைகேடாக குலுக்கல் நடத்தியாக குற்றம் சாட்டியுள்ளனர்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் விடப்படாததால் பயணிகள் திண்டாடி வருகின்றனர்.ஏற்கனவே புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் 4 முறை ரத்து செய்யப்பட்டது.

    புதிய பஸ் நிலையத்தில் ஏற்கனவே கடை வைத்திருந்த 12 வியாபாரிகள் தங்களுக்கு கடை ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர்.

    அவர்களுக்கு கடை ஒதுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதில் 3 பேருக்கு கடந்த வாரம் முன்னுரிமை அடிப்படையில் தனித்தனியாக குலுக்கல் முறையில் கடை ஒதுக்கும்பணி நடந்தது. ஆனால் 3 பேருக்கும் முதல் தளத்தில் உள்ள கடைகளுக்கான எண்கள் குலுக்களில் வந்தது.

    இதற்கு வியாபாரிகள் தரப்பு ஒத்துக் கொள்ளவில்லை. முறைகேடாக குலுக்கல் நடத்தியாக குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் மீண்டும் குலுக்கள் நடத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

    ஆனால் அவர் கடைகளை ஏற்க மறுத்தால் பொது ஏலத்தில் பங்கேற்றுக் கொள்ளுங்கள் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்:-

    கோர்ட்டு அறிவுறுத்தல் படி பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குலுக்கல் நடத்தப்பட்டது‌. குலுக்கல் தொடங்கி முடிந்த பிறகு முறைகேடு மோசடி என குற்றம் சாட்டுகின்றனர்.

    அவர்கள் மீண்டும் வேறு சீட்டை எடுக்க அனுமதித்தால் குலுக்கலுக்கான அடிப்படையே தவறாகிவிடும்.ஒரு முறை தான் அனுமதிக்கப்படும் மற்றவர்களுக்கு தான் அடுத்த வாய்ப்பு வழங்கப்படும். தரைத்தளத்தில் குறிப்பிட்ட இடத்தில் தான் கடைகள் வேண்டும் என அவர்கள் செயல்படுகின்றனர்.

    அவர்களுக்கு ஒரு வாரம் கெடு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் கடைக்கான தொகையை மாநகராட்சியில் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் குலுக்கலில் விழுந்த கடைகளும் பொது ஏலத்திற்கு கொண்டுவரப்படும். விரும்பிய கடை தான் வேண்டும் என கேட்பவர்கள் பொது ஏலத்தில் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளோம் என்றார்.

    புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் விழுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.இதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×