என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் நிலையத்தில் ஏலம் விடாமல் உள்ள கடைகள்
- முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் கடைகள் 32 ஆண்டுகளாக ஏலம் விடாமல் உள்ளன.
- நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் ஏ.ஷாஜகான் தலைமையில், செயல் அலுவலர் மாலதி, உதவி சேர்மன் வயணப்பெருமாள் முன்னிலையில் நடந்தது. ராஜேஷ் வரவேற்றார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சேகர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பேசுகையில், பஸ் நிலைய பகுதிகளில் உள்ள பேரூராட்சி கடைகள் 32 ஆண்டுகளாக ஏலம் விடப்படாமல் உள்ளது. இதனால் பேரூராட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த கடைகளை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Next Story






