search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடை அடைப்பு போராட்டம்"

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் உள்ள ஜவுளி சந்தை தினசரி கடை அடைக்கப்பட்டு இருந்தது.
    • பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    ஈரோடு:

    சிறு, குறு தொழில்கள் தங்களது வணிக கடன்களை விரைந்து வசூல் செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசு வருமான வரி சட்டத்தில் கொண்டு வந்துள்ள செக்சன் 43 பி (எச்) மாற்றமானது வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி அமலாகிறது.

    இதன்படி தங்கள் இருப்பு நிலை குறிப்பு (பேலன்ஸ் ஷீட்) கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேலே சென்றிருந்தால் அவை வருமானமாக கருதப்படும். அவற்றுக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என சட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

    ஜவுளி சார்ந்த தொழிலில் துணிகளை கொள்முதல் செய்து பிராசசிங், டையிங், பிரிண்டிங், ஸ்டிச்சிங் என்ன பல நிலைகளை கடந்து விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    அதற்கு ஏற்ப 45 நாட்களுக்குள் அல்லது அதற்கு மேலான நாட்களின் கடன் தொகையை நேர் செய்வார்கள். தற்போதைய புதிய சட்ட திருத்தத்தால் அந்த தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் இத்தொழில் கடுமையாக பாதிப்படையும்.

    இந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் அல்லது ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் ஜவுளி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.


    அதன்படி இன்று ஈரோட்டில் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருவெங்கடாச்சாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு போன்ற பகுதியில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் மற்றும் அதனை சார்ந்த குடோன்கள் அடைக்கப்பட்டிருந்தன. கடைகள் முன்பு வேலை நிறுத்தத்திற்கான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

    இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் காரணமாக சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஜவுளி வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஈரோடு, பவானி, சித்தோடு, பி.பி.அக்ரஹாரம், பள்ளிபாளையம் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இன்று ஒரு நாள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தங்களது உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று ஒரு லட்சம் விசைத்தறியாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் ரூ.7 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும் ஜவுளி வணிகர்களின் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையும் இன்று அடைக்கப்பட்டிருந்தது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் உள்ள ஜவுளி சந்தை தினசரி கடை அடைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான பேனரும் கடையின் முன்பு வைக்கப்பட்டு இருந்தது. ஜவுளி வணிகர்களின் கடையடைப்பு போராட்டத்திற்கு 20-க்கும் மேற்பட்ட சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    • பொன்னேரி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
    • பொன்னேரி பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரியில் வியாபாரிகள் தொடர்ந்து ரவுடிகளால் தாக்கப்படும் சம்பவம் நடந்து வருகிறது.மேலும் கடைகளை குறிவைத்து கொள்ளை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் சம்பவங்களும் நீடித்து வருகின்றன.

    இதுகுறித்து வியாபாரிகள் பலமுறை போலீசில் புகார் செய்தும் ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் புகார் செய்யும் வியாபாரிகளை ரவுடி கும்பல் மிரட்டும் சம்பவங்களும் அதிகரித்து வந்தது. இதனால் பொன்னேரி பகுதியில் வியாபாரிகளும், பொது மக்களும் அச்சம் அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், வியாபாரிகளை அச்சுறுத்தும் ரவுடிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க என்று கூறி பொன்னேரியில் கடைஅடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று பொன்னேரி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    பொன்னேரியி சுற்று வட்டார பகுதியில் உள்ள வேண்பாக்கம் திருவாயர்பாடி, பொன்னேரி பஜார் வீதிஉட்பட இடங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதற்கிடையே ரவுடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்ககோரி வியாபாரிகள் சங்க தலைவர் பத்மநாபன் தலைமையில் பொன்னேரி அண்ணாசிலை அருகே நடைபெற்றது. அப்போது, வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்கவும் போலீசார் ரோந்துவரவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் பொதுச் செயலாளர் அப்துல் காதர் பொருளாளர் பிரகாஷ் சர்மா உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதனால் பொன்னேரி பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • பொன்னேரி பஜார் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • ஆலோசனை கூட்டத்தில் பொன்னேரி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையில் ரவுடி கும்பல் ஏராளமான கடைகளை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

    இதே போல் கடந்த வாரம் முட்டை கடை ஒன்றும் சூறையாடப்பட்டது. வியாபாரிகளை கத்தி முனையில் மிரட்டி பணம் பறிப்பதும் அதிகரித்து உள்ளது.

    இது பற்றி போலீசில் புகார் செய்தும் ரவுடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் புகார் செய்யும் வியாபாரிகளையும் குறி வைத்து ரவுடிகள் மிரட்டும் சம்பவம் நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசாரி டம் வியாபாரிகள் கூறும் போது, கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொன்னேரி பஜார் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    கடைகளை குறிவைத்து திருட்டு சம்பவங்களும் அதிரிக்க தொடங்கி உள்ளன. எனவே ரவுடிகளை அடக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது, ரவுடிகளின் அட்டகாசம், கடைகளில் திருட்டு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தினர்.

    மேலும் இதுபற்றி போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத போலீசாருக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ரவுடிகள் அட்டகாசத்தை தடுக்க வேண்டும், பொன்னேரி பகுதி வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் மற்றும் ரவுடிகள் விஷயத்தில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அனைத்து வியாபாரிகளும் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பொன்னேரி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    • 6 ஊராட்சிகளில் 3850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் வாயிலாக சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது.
    • இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

    அன்னூர்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ளபள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரைசெங்கப்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் வாயிலாக சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது.

    இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்னூர் சிட்கோ அமைப்பதற்காக 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த நிலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நமது நிலம் நமதே போராட்டக்குழுவின் சார்பில் அன்னூரை அடுத்துள்ள குழியூரில் 300- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 500- க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி நடத்தினர். மன்னீஸ்வர சுவாமி கோவில் முன்பு பேரணி நிறைந்தது. தொடர்ந்து அன்னூர் போலீஸ் நிலையம் சென்று போராட்டங்களுக்கு அனுமதி கேட்டு விவசாயிகள் மனு அளித்தனர்.

    வணிகர் சங்கங்களுடன் பேசி விரைவில் அன்னூரில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

    • மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பஸ் நிலையத்தினை 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதிக்கு இட மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.

    காரமடை :

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை நகராட்சியில் தினசரி மார்க்கெட் மற்றும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.

    இங்கு காரமடை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பொருட்கள் எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் காரமடை நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையத்தினை மேம்படுத்தும் நோக்கத்தில் தற்போது செயல்பட்டு வரும் பஸ் நிலையத்தினை 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதிக்கு இட மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கான தீர்மானமும் நிறைவேற்றபட்டுள்ளது.

    அதே சமயத்தில் மார்க்கெட்டை தற்போது பஸ் நிலையமாக செயல்பட்டு வரும் இடத்திற்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளது.நகராட்சியில் இந்த முடிவுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் நகராட்சி தனது முடிவை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் திரும்ப பெறவில்லை.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இன்று காலை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் மார்க்கெட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட காய்கறி, பழக்கடைகள் மூடப்பட்டுள்ளது. 

    ×