search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.ஜே.சூர்யா"

    • விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

    விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.


    விஜய் - எஸ்.ஜே.சூர்யா

    விஜய் - எஸ்.ஜே.சூர்யா


    இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தில் வில்லனாகவும், வாரிசு படத்தில் கவுரவ தோற்றத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    குஷி
    குஷி


    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வித்தியாசமான வில்லத்தனம் காட்டி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதற்குமுன்பு எஸ்.ஜே.சூர்யா, விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜிகர்தண்டா 2 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
    • இப்படத்திதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

     

    ஜிகர்தண்டா 2

    ஜிகர்தண்டா 2

    8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி பலரயும் கவர்ந்தது.


    ஜிகர்தண்டா 2

    ஜிகர்தண்டா 2

    இந்நிலையில் ஜிகர்தண்டா படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் சண்டை காட்சி ஒன்று கொடைக்கானலில் திலீப் சுப்பராயன் தலைமையில் 80 சண்டை கலைஞர்களுடன் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சண்டைக்காட்சியில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் பங்குபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜிகர்தண்டா 2 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

    ஜிகர்தண்டா 2

    ஜிகர்தண்டா 2

     

    8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் அறிவித்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு ஜிகர்தண்டா 2-ம் பாகத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர்.

     

    ஜிகர்தண்டா 2

    ஜிகர்தண்டா 2

    இந்நிலையில் அறிவித்தபடி ஜிகர்தண்டா 2 படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படத்தின் டீசர் இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.



    • நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியான வெப் தொடர் ‘வதந்தி’.
    • இந்த வெப் தொடரை புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ளனர்.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.


    வதந்தி

    புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    வதந்தி

    இந்நிலையில், 'வதந்தி' வெப் தொடர் குறித்து 'வெண்ணிலா கபடி குழு' இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எஸ்.ஜே. சூர்யா சார் நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'வதந்தி' வெப் தொடரில் எஸ்.ஜே.சூர்யா மிக சிறப்பான நடிப்பை அளவாக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். லைலா அவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் புஷ்கர் - காயத்ரி மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த அறிக்கையை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.



    • நடிகர் எஸ்.ஜே. சூர்யா தற்போது நடித்துள்ள வெப் தொடர் ‘வதந்தி’.
    • இந்த தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது 'பொம்மை', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'ஆர்சி 15' படங்கள் உள்ளது. தொடர்ந்து இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.


    எஸ்.ஜே.சூர்யா

    புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இதையடுத்து வதந்தி படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். வதந்தி படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதில் நடிகர் சூர்யா, "போய் சேர வேண்டிய இடம் நூறு என்றால் நான் 15 கிலோ மீட்டர் மட்டுமே கடந்திருக்கிறேன். எனக்கு ஆஸ்கர் விருது வாங்குவது தேசிய விருது வாங்குவது இவைகளில் விருப்பம் இல்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்தால் அதை உடனே பார்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்க வேண்டும். அந்த அன்பை மக்களிடம் அவர்களிடம் இருந்து வாங்க வேண்டும்" என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.



    • சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் ஜிகர்தண்டா.
    • இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார்.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

     

    ஜிகர்தண்டா

    ஜிகர்தண்டா

    பலரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி 8 வருடங்கள் நிறைவு செய்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு இதனை நினைவு கூர்ந்து ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டிருந்தார். அதன்படி இப்படம் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

     

    இறைவி

    இறைவி

    இந்நிலையில் ஜிகர்தண்டா-2 படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதற்குமுன்பு இந்த கூட்டணியில் வெளியான இறைவி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • வாலி, குஷி, நியூ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா.
    • சில வாரங்களுக்கு முன்பு எஸ்.ஜே.சூர்யாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் பரவின.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. எஸ்.ஜே.சூர்யாவுக்கு 54 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. சில வாரங்களுக்கு முன்பு குடும்பத்தினர் பெண் பார்ப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனை அவரும் மறுத்து வந்தார்.

     

    எஸ்.ஜே.சூர்யா

    எஸ்.ஜே.சூர்யா

    இந்நிலையில் திருமணம் செய்துகொள்ள தயங்குவதற்கான காரணத்தை தற்போது அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் நான் ஆபத்தான சில விஷயங்களில் துணிந்து இறங்க வேண்டி உள்ளது. சினிமாவில் சம்பாதித்த மொத்த பணத்தையும் நான் இயக்கி நடித்த நியூ படத்தில் முதலீடு செய்தேன். அந்த படம் வெற்றி பெற்றது.

     

    எஸ்.ஜே.சூர்யா

    எஸ்.ஜே.சூர்யா

    ஒருவேளை நியூ படம் தோல்வி அடைந்து இருந்தால் என் நிலைமை மோசமாக மாறி இருக்கும். அந்த கஷ்டமும் என்னுடனேயே போய் இருக்கும். ஆனால் திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் இருந்திருந்தால் அது அவர்களையும் பெரிய அளவில் பாதித்து இருக்கும்" என்றார்.

    • வாலி, குஷி படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் எஸ்.ஜே.சூர்யா.
    • தற்போது நடிகராக படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

    அஜித் நடிப்பில் 1999-ல் வெளியான வாலி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் குஷி படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து, பின்னர் அவரே நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களை இயக்கி கதாநாயகனாகவும் நடித்தார்.

     

    எஸ்.ஜே.சூர்யா

    எஸ்.ஜே.சூர்யா

    தற்போது கதாநாயகனாகவும் வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் மெர்சல், மாநாடு படங்களில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். தற்போது இவருக்கு வில்லனாக நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

    தற்போது 54 வயதாகும் எஸ்.ஜே.சூர்யா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாகவும், விரைவில் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது.

     

    எஸ்.ஜே.சூர்யா

    எஸ்.ஜே.சூர்யா

    இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டபோது, "எனக்கு திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. திருமணம் பற்றி நான் சிந்திக்கவே இல்லை. அதற்கு நேரமும் இல்லை. இதுபோன்ற வதந்திகள் எப்படி பரவுகிறது என்று தெரியவில்லை. இப்போது எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது" என்றார்.

    ×