search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்.எல்.சி"

    • என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விவசாயிகள் சார்பில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் பாலக்கரையில் தே.மு.சார்பில் தமிழக அரசை கண்டித்தும், என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தி.மு.க.அரசு மகளிர் உரிமை தொகை அனைத்து பெண்களுக்கும் தருவதாக தேர்தல் வாக்குறுதியில் கூறிவிட்டு, பின்னர் குறிப்பிட்ட தகுதியுடைய மகளிருக்கு மட்டுமே உரிமை தொகை வழங்குவது, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவது போல் ஆகும். விளைநிலங்களை அழித்து வாய்க்கால் அமைத்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை வன்மையாக கண்டித்த அவர், பரவனாறு வாய்க்காலை சீரமைக்கிறோம் எனக் கூறி ஒட்டுமொத்த விளைநிலங்களையும் பாழடித்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி.யின் செயலை இதோடு நிறுத்தவில்லை என்றால் தமிழகம் முழுவதும், தே.மு.தி.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். மேலும் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.

    ஆர்ப்பாட்டத்திற்கு பின் நிருபர்களை சந்தித்த பிரேமலதா, கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விடவில்லையென்றால் தே.மு.தி.க மற்றும் விவசாயிகள் சார்பில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து உரிய நேரத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் ராஜ்குமார், ஆனந்தகோபால், பிரபா, மாவட்ட இளைஞரணி ஜான கிராமன், மாநில செயற்குழு உறுப்பினர் பண்ருட்டி புருசோத்தமன்,மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் பண்ருட்டி வசந்தன், மாவட்ட துணை செயலாளர் வேல் முருகன், நகர தலைவர் சங்கர், நகர செயலாளரும், நகர் மன்ற உறுப்பினருமான ராஜ் குமார், நகர பொருளாளர், நகர் மன்ற உறுப்பினர் கருணா,நாராயணன், ராசவன்னியன், சிவகுரு, ராமசந்திரன், டெய்லர் பாலமுருகன் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்டன கோஷங்களிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பழைய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.

    விழுப்புரம்:

    தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும், மாநில விசாரணைக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் நல்லதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • காந்தி சிலைக்கு என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டு பள்ளி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • சமூக நலனுக்காக மேற் கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் என்எல்சி முன்னணியில் இருக்கும்.

    கடலூர்:

    நெய்வேலி நகரியத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் வெகு ஜன தூய்மை இயக்கம் நடைபெற்றது. முன்னதாக, பிரதான சந்தைப் பகுதி யில் உள்ள காந்தி சிலைக்கு என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டு பள்ளி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தூய்மை இயக்க த்தை தொடங்கி வைத்தார். நிறுவன இயக்குநர்கள் சுரேஷ் சந்தி ரசுமன், சமீர் ஸ்வரூப், எம்.வெங்க டாசலம், தலைமை ஒற்றாடல் அதிகாரி எல்.சந்திரசேகர், அங்கீகரிக்கப் பட்ட தொழிற்சங்கங்களின் பிரதி நிதிகள், அதிகாரிகள், ஊழியர்கள், சிஐஎஸ்எப் பணியாளர்கள், ஒப் பந்தத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பல்வேறு இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், தூய்மையின் முக்கிய த்துவத்தை வலியு றுத்தும் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் என்எல்சி தலைவர் பேசியதாவது: சமூக நலனுக்காக மேற் கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் என்எல்சி முன்னணியில் இருக்கும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. நிகழாண்டு தூய் மைக்கான செயல்பாடு களை திறம்பட ஒழுங்கமை ப்பதில் என்எல்சி இந்தியா முதலிடம் வகிக்கும் என்றார்.

    • புதிதாக வாங்கப்பட்ட 95 வாகனங்களை என்.எல்.சி. அதிபர் பிரசன்ன குமார் மோட்டு பள்ளி தொடங்கி வைத்தார்.
    • ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 47 பழைய வாகனங்கள் மாற்றப்பட்டுள்ளன.

    கடலூர்:

    என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சுரங்கப் பகுதியில் இயக்கப்பட புதிதாக வாங்கப்பட்ட 95 வாகனங்களை என்.எல்.சி. அதிபர் பிரசன்ன குமார் மோட்டு பள்ளி, நிறுவன இயக்குனர்கள், உயர் அதி காரிகள் முன்னலையில் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    நெய்வேலியில் உள்ள 3 சுரங்கங்களில் இதுவரை பயன்பாட்டில் இருந்த பழைய வாகனங்கள் மாற்றப் பட்டு புதிதாக 47 பணியாளர் வாகனங்கள், 33 திறந்த வகை லாரிகள், 7 கேண்டீன் வாகனங்கள் மற்றும் 7 எரி பொருள் நிரப்பும் வாகனங்கள் உள்ளட்ட 95 வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது.

    மேலும் மத்திய சுரங்க இயக்குனரகத்தின் சமீபத்திய உமிழ்வு விதிகளுக்கிணங்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் பல்வேறு நவீன வசதிகளுடன் இப் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. சுரங்கத்தில் பணிபுரியும் பணியாளர்கள், சுரங்க பகுதிக்கு சென்று வர பயன்படும் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 47 பழைய வாகனங்கள் மாற்றப்பட்டு அவற்றுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட் டிற்கு வந்தது.

    இந்நிகழ்ச்சியில் சுரங் கங்கள் மற்றும் நித இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் சுரேஷ் சந்திரா சுமன், மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப், மின் துறை இயக்குனர் வெங்கடாசலம், தலைமை அதிகாரி சந்திர சேகர் மற்றும் செயல் இயக்கு னர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×