search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new vehicles"

    • மதுரை மாநகரில் திடக்கழிவு பணிகளுக்கு புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
    • இதனை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அனுப்பானடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி அனுப்பானடி உயர்நிலைப்பள்ளி கட்டிடம் திறப்புவிழா, திடக்கழிவு மேலாண்மை பணிக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள புதிய இலகுரக வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் மற்றும் வண்டியூர் கண்மாய் அழகுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்கான தொடக்க விழா அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், துணைமேயர் நாகராஜன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    அனுப்பானடியில் 100 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வரும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனை சார்பில் ரூ.47.5 லட்சமும், அரசின் நிதியில் இருந்து ரூ.47.5 லட்சமும் சேர்த்து ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் 7 வகுப்பறைகள், 1 நவீன ஸ்மார்ட் வகுப்பறை, தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இவற்றை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

    100-வது வார்டு பகுதி களில் சேரும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வெள்ளைக்கல் குப்பை சேகரிக்கும் மையத்திற்கு தினந்தோறும் சுமார் 800 டன் குப்பைகள் கொண்டு சென்று தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சியின் நுண்ணுயிர் செயலாக்கம் உரக்கூடங்களில் மக்கும் குப்பைகள் மட்டும் தரம் பிரித்து வாங்கப்பட்டு அந்தந்த உரக்கூடங்களில் உரமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் தூய்மை பணி களை விரைந்து மேற்கொள்ள 15-வது மத்திய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.2.87 கோடி மதிப்பீட்டில் 40 இலகு ரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை அமைச்சர்கள் கொடியசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

    மதுரை மாநகராட்சி பகுதியான வண்டியூர், கோமதிபுரம், மேலமடை, மானகிரி, தாசில்தார் நகர், அண்ணா நகர் கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரினை அதிக ரிக்கும் பொருட்டு வண்டியூர் கண்மாய் தூார்வாரப்பட்டு தண்ணீர் நிரந்தரமாக சேமித்து வைக்கப் பட்டுள்ள தால் சுற்றுப்பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.

    இந்த நிலையில் வண்டி யூர் கண்மாயை அழகுப்படுத்தும் பணிக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜையில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிகளில் மண்டல தலைவர்கள் முகேஷ்சர்மா, வாசுகி சசிகுமார், கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் திருமலை, காளிமுத்தன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கியசேவியர், உதவிப்பொறியாளர் ரிச்சார்டு, உதவி பொறி யாளர் அமர்தீப், தி.மு.க. பகுதி செயலாளர் சசிகுமார், கவுன்சிலர்கள் பிரேமா, முத்துமாரி ஜெயக்குமார், கவிதா செல்வம், ம.தி.மு.க. மாநகர் செயலாளர் முனிய சாமி, 88-வது வட்ட கழக செயலாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிதாக வாங்கப்பட்ட 95 வாகனங்களை என்.எல்.சி. அதிபர் பிரசன்ன குமார் மோட்டு பள்ளி தொடங்கி வைத்தார்.
    • ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 47 பழைய வாகனங்கள் மாற்றப்பட்டுள்ளன.

    கடலூர்:

    என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சுரங்கப் பகுதியில் இயக்கப்பட புதிதாக வாங்கப்பட்ட 95 வாகனங்களை என்.எல்.சி. அதிபர் பிரசன்ன குமார் மோட்டு பள்ளி, நிறுவன இயக்குனர்கள், உயர் அதி காரிகள் முன்னலையில் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    நெய்வேலியில் உள்ள 3 சுரங்கங்களில் இதுவரை பயன்பாட்டில் இருந்த பழைய வாகனங்கள் மாற்றப் பட்டு புதிதாக 47 பணியாளர் வாகனங்கள், 33 திறந்த வகை லாரிகள், 7 கேண்டீன் வாகனங்கள் மற்றும் 7 எரி பொருள் நிரப்பும் வாகனங்கள் உள்ளட்ட 95 வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது.

    மேலும் மத்திய சுரங்க இயக்குனரகத்தின் சமீபத்திய உமிழ்வு விதிகளுக்கிணங்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் பல்வேறு நவீன வசதிகளுடன் இப் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. சுரங்கத்தில் பணிபுரியும் பணியாளர்கள், சுரங்க பகுதிக்கு சென்று வர பயன்படும் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 47 பழைய வாகனங்கள் மாற்றப்பட்டு அவற்றுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட் டிற்கு வந்தது.

    இந்நிகழ்ச்சியில் சுரங் கங்கள் மற்றும் நித இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் சுரேஷ் சந்திரா சுமன், மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப், மின் துறை இயக்குனர் வெங்கடாசலம், தலைமை அதிகாரி சந்திர சேகர் மற்றும் செயல் இயக்கு னர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கலவரத்தடுப்புக்கு புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #EdappadiPalanisamy
    சென்னை:

    சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்பு துறை மானியக்கோரிக்கையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    30 வயதிற்கு உட்பட்ட காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு முழு உடல் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும். ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கான நல வாரியம் உருவாக்கப்படும். காவல்துறையில் புதிய பதவிகள் ரூ.13.51 கோடி செலவில் உருவாக்கப்படும்.



    அதன்படி, ரூ.44.71 லட்சம் செலவில், காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் (அலுவலக கணினிமயமாக்கல்) பதவி ஒன்று புதியதாக தோற்றுவிக்கப்படும். ரூ.12.02 கோடி ரூபாய் செலவில் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு புதியதாக 3 கூடுதல் ஆயுதப்படை பிரிவுகள் உருவாக்கப்படும். ரூ.1.04 கோடி ரூபாய் செலவில் உயர்நீதி மன்ற மதுரை கிளைக்கு புதியதாக உருவாக்கப்படவுள்ள 3 கூடுதல் ஆயுதப்படை பிரிவுகளுக்கு அமைச்சுப்பணியாளர்கள் உருவாக்கப்படும்.

    ரூ.119.73 கோடி செலவில் 1,397 புதிய காவல் வாகனங்கள் வாங்கப்படும். அதன்படி, ரூ.2.20 கோடி செலவில் 10 கலவர தடுப்பு வஜ்ரா வாகனங்கள் காவல்துறையின் சிறப்பு பயன்பாட்டிற்காக வாங்கப்படும். ரூ.1.76 கோடி செலவில், 8 கலவர தடுப்பு வஜ்ரா (தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்) வாகனங்கள் காவல்துறை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் காவல் துறையின் சிறப்பு பயன்பாட்டிற்காக வாங்கப்படும்.

    ரூ.6.50 கோடி செலவில் 10 கலவர தடுப்பு வருண் வாகனங்கள் காவல்துறையின் சிறப்பு பயன்பாட்டிற்காக வாங்கப்படும். ரூ.3.25 கோடி செலவில் 5 கலவர தடுப்பு வருண் வாகனங்கள் காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப் படும்.

    பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கலவரங்களை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுண்ணறிவுப்பிரிவு மூலம் கூட்டம் கூடுவதை அறிந்து அதனை கண்காணிக்கும் விதமாக மென்பொருள் திட்டம் ஒன்று, ரூ.76 லட்சம் செலவில் சென்னையில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப கழகம் மூலம் உருவாக்கப்படும்.

    இத்தொகை முதல் வருடத்திற்கு தொடரா செலவினமாக வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு வருடந்தோறும் ரூ.56 லட்சம் செலவில் செலவினமாக வழங்கப்படும். ரூ.3 கோடி செலவில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல்துறை நெரிசலை ஒழுங்குபடுத்த ரூ.3 கோடியில் 2 ஆயிரம் நகரும் தடுப்புகள் வாங்கப்படும்.

    ரூ.14.25 கோடி செலவில் காவல் நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க 475 காவல் நிலையங்களுக்கு இளையதளத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராவுடன் கூடிய தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கப்படும். ரூ.3.15 கோடியில் 105 காவல் நிலையங்களுக்கு கண்காணிப்பு தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கப்படும். ரூ.3.87 கோடியில் புல காவலிற்கான 129 மொபைல் உட்சுற்று கண்காணிப்பு தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கப்படும்.

    ரூ.100 கோடி மதிப்பில் கழிவு செய்யப்பட்ட (பழைய) பல வகை வாகனங்களுக்கு பதிலாக 1,340 புதிய வாகனங்கள் வாங்கப்படும். ரூ.6.02 கோடி செலவில் 6 காவல் ஆணையரகங்கள், சென்னை நகரத்தில் உள்ள 4 சட்டம் மற்றும் ஒழுங்கு மண்டலங்கள் ஆகியவற்றின் உபயோகத்திற்காக 24 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் வாங்கப்படும்.கடலோர பாதுகாப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளரின் தலைமையிடம் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு மாற்றப்படும்.

    ரூ.5.48 கோடி செலவில் திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தை பிரித்து திருமுருகன் பூண்டியில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும். இந்த காவல் நிலையத்திற்கு ரூ.1 கோடியில் கட்டிடங்கள் கட்டப்படும்.

    ரூ.3.31 கோடி செலவில் அனைத்து மாவட்ட மற்றும் சிறப்பு படைப்பிரிவுகளில் காவல் வாத்தியக்குழுக்கள் உருவாக்கப்படும். ரூ.4.20 கோடி செலவில் காவலர்களின் பயிற்சிக்காக 19 வகையான சிறப்பு படைகலன்கள் வாங்கப்படும். ரூ.50 லட்சத்தில் நேரியல் அல்லாத சந்தி கண்டுபிடிக்கும் கருவி 5 வாங்கப்படும். ரூ.45 லட்சம் செலவில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் 3 கருவிகள் வாங்கப்படும். ரூ.12 லட்சம் செலவில் ஆழமாக புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் 4 கருவிகள் வாங்கப்படும். ரூ.34 லட்சம் செலவில் ஊடுகதிர் மூலம் கண்டறியும் 2 கருவிகள் வாங்கப்படும். ரூ.1.50 லட்சத்தில் கையடக்க வாயிற்படி உலோக கண்டுபிடிப்பிற்கான 3 கருவிகள் வாங்கப்படும்.

    ரூ.25 லட்சத்தில் வாயிற்படி உலோக கண்டுப்பிடிப்பிற்கான 5 கருவிகள் வாங்கப்படும். ரூ.45 ஆயிரம் செலவில் 5 நீட்டிப்பு கண்ணாடிகள் வாங்கப்படும். ரூ3.15 லட்சம் செலவில் 35 புரோடர் கருவிகள் வழங்கப்படும். 98 ஆயிரம் செலவில் வாகனத்தின் கீழ் தேடும் 14 கண்ணாடிகள் வாங்கப்படும். ரூ.4.95 லட்சம் செலவில் 55 தேடுதல் பணிக்கான விளக்குகள் வாங்கப்படும். ரூ.3 லட்சம் செலவில் 2 பகல் நேர கண்காணிப்பு தொலைநோக்கு கருவிகள் வாங்கப்படும். ரூ.15.60 லட்சத்தில் 2 இரவு நேர கண்காணிப்பு தொலைநோக்கு கருவிகள் வாங்கப்படும்.

    ரூ.5.05 கோடி செலவில் பணித்திறன் மேம்பாட்டிற்காக 250 காவல் நிலையங்களுக்கென அடிப்படை சாதனங்கள் வாங்கப்படும். ரூ.12.20 கோடியில் அதிவிரைவு படைக்கு 14 வகையான சாதனங்கள் வாங்கப்படும். ரூ.55 லட்சத்தில் 100 எண்ம முறையிலான 800 மெகா ஹெர்ட்ஸ் கையடக்க சாதனங்கள் வாங்கப்படும். ரூ.80 லட்சம் செலவில் தமிழ்நாடு காவல் அகாடமிக்கு அனைத்து வகையான தடய அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வாங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    ×