search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயரிய விருது"

    இந்தியா-ரஷியா இடையிலான நல்லுறவுகளை மிக சிறப்பான அளவுக்கு மேம்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷியாவின் மிக உயரிய ‘செயின்ட் ஆன்ட்ரு அப்போஸ்தலர்’ விருதுக்கு தேர்வாகியுள்ளார். #Modidecorated #OrderofStAndrewtheApostle
    புதுடெல்லி:

    இயேசுநாதரின் முதல் அப்போஸ்தலரான புனித ஆன்ட்ரு பெயரால் ரஷியாவை முன்னர் ஆட்சி செய்த மாமன்னர் டிசார் பீட்டர் என்பவரால் 1698-ம் ஆண்டில் அந்நாட்டுக்கு மிகச்சிறப்பான சேவை செய்பவர்களை கவுரவிக்கும் வகையில் ‘செயின்ட் ஆன்ட்ரு அப்போஸ்தலர்’ விருது உருவாக்கப்பட்டது.

    ஆண்டுதோறும் சிறப்புக்குரிய நபர்களை தேர்வு செய்து இவ்விருது வழங்கப்பட்டு வந்தது. பின்னர், ரஷியாவின் அருகாமையில் இருந்த பல பகுதிகளை ஒன்றிணைத்து சோவியத் யூனியன் என்ற பெயர் கொண்ட அமைப்புக்கு ரஷியா தலைமை தாங்கியபோது இந்த விருது பல ஆண்டுகாலம் நிறுத்தி வைக்கப்பட்டது.



    பின்னர், 1998-ம் ஆண்டிலிருந்து இந்த விருது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டின் ‘செயின்ட் ஆன்ட்ரு அப்போஸ்தலர்’ விருதுக்கு பிரதமர் நரேந்திர மோடி தேர்வாகியுள்ளார்.

    இந்தியா -ரஷியா இடையிலான நல்லுறவுகளை மிக சிறப்பான அளவுக்கு மேம்படுத்தியமைக்காகவும், மிக மதிப்புக்குரிய நட்புநாடாக ரஷியாவுடன் பல்வேறு வகைகளில் இணைந்து செயல்பட்டதற்காகவும் மோடிக்கு இவ்விருது வழங்கப்படுவதாக டெல்லியில் உள்ள ரஷியா தலைமை தூதரகம் தெரிவித்துள்ளது. #Modidecorated #OrderofStAndrewtheApostle 
    பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மதுக்கு அந்நாட்டின் குடிமக்களுக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருது வழங்கி இன்று கவுரவிக்கப்பட்டது. #PakistanDay #MalaysianPM
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் தேசியநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மதுக்கு பாகிஸ்தான் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனையேற்ற மஹதிர் முஹம்மது நேற்று இஸ்லாமாபாத் வந்தார்.

    இன்று பாகிஸ்தான் அதிபர் மாளிகையில் நடைபெற்ற தேசியநாள் விழாவில் மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மதுக்கு அந்நாட்டின் குடிமக்களுக்கு அளிக்கப்படும் ‘நிஷான் - இ- பாகிஸ்தான்’ எனப்படும் மிக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார்.



    பின்னர் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பேசிய மஹதிர் முஹம்மது பாகிஸ்தான் நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அனைத்து துறைகளிலும் மலேசியா அரசு உறுதுணையாக இருக்கும் என குறிப்பிட்டார். #PakistanDay #MalaysianPM

    ×