search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோட்டில் இருந்து"

    • ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
    • பழனி முருகன் கோவிலுக்கும் அதிக அளவில் பக்தர்கள் செல்வதால் அங்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு மண்டல பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிட ப்பட்டு ள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணா மலை அருணா ச்சலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.

    எனவே, பக்தர்க ளின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு அரசு போக்குவ ரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஆண்டு தோறும் இயக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோட்டில் இருந்தும் திருவண்ணா மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதேபோல பழனி முருகன் கோவிலுக்கும் அதிக அளவில் பக்தர்கள் செல்வ தால் அங்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இதற்காக 40 சிறப்பு பஸ்கள் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணா மலை, பழனி ஆகிய ஊர்களு க்கு வரும் 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை இயக்கப்ப டுகின்றன.

    இவ்வாறு அதில் தெரிவி க்கப்பட்டுள்ளது.

    • ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • 24 மணி நேரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக இன்று முதல் வரும் 12-ந் தேதி வரை ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, சேலம், மதுரை, சென்னை, நாம க்கல், ராசிபுரம், திருப்பூர், சத்தி, பழனி மற்றும் கரூர் ஆகிய ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும் ஈரோட்டில் இருந்து கம்பம், குமுளி, சிவகாசி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், வேலூர், புதுச்சேரி, செங்கோட்டை, நாகர்கோவில், சென்னை ஆகிய ஊர்களுக்கு செல்ல www.tnstc.in என்ற இணைய தளத்தின் வாயி லாக முன்ப திவு செய்து கொள்ளலாம்.

    கோபி, சத்தி, பவானி, அந்தியூர், பெருந்துறை ஆகிய ஊர்களில் இருந்து கோவை, ஈரோடு ஆகிய ஊர்களுக்கு 24 மணி நேரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து ஈரோடு பஸ் நிலையத்திற்கு இன்று முதல் 12-ந் தேதி வரை தினமும் இரவு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

    • ஈரோட்டில் இருந்து வாரம் தோறும் வார இறுதி நாட்கள் பல பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
    • சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இருந்து வாரம் தோறும் வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈரோடு மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர் உள்பட பல்வேறு ஊர்களுக்கு ஏற்கனவே பல பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த வழித்தடங்களில் வார இறுதி நாட்களில் கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

    ×