search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மாவட்டத்தில்"

    • ஈரோடு மாவட்டத்தில் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு, 733.44 மி.மீட்டர். நடப்பாண்டு 1,091.04 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. பவானிசாகர் அணையிலும் நீர் இருப்பு முழு அளவில் உள்ளது.
    • ரசாயன உரங்களான யூரியா – 4,732 டன், டி.ஏ.பி., – 2,321 டன், பொட்டாஷ் – 2,437 டன், காம்ப்ளக்ஸ் – 11,624 டன் இருப்பில் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்கு னர் சின்னசாமி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு, 733.44 மி.மீட்டர். நடப்பாண்டு 1,091.04 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. பவானிசாகர் அணையிலும் நீர் இருப்பு முழு அளவில் உள்ளது.

    கடந்த அக்டோபர் மாதம் வரை, 75,745 எக்டர் பரப்பில் வேளாண் பயிர்க ளும், 45,634 எக்டர் தோட்ட க்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    வேளாண் விரிவாக்க மையங்களில் வினியோகம் செய்வதற்காக நெல் விதை, 42 டன், சிறுதானியங்கள், 16 டன், பயறு வகைகள், 17 டன், எண்ணை வித்துக்கள், 42 டன் இருப்பில் உள்ளன.

    ரசாயன உரங்களான யூரியா – 4,732 டன், டி.ஏ.பி., – 2,321 டன், பொட்டாஷ் – 2,437 டன், காம்ப்ளக்ஸ் – 11,624 டன் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்துக்கு தேவையான அளவு இடு பொருட்களான விதைகள், உரங்கள் இருப்பில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு 581 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • குறிப்பாக பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி போன்ற பகுதிகளில் சராசரியைவிட கூடுதல் மழை பெய்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் ஒரு பகுதி மேற்கு தொடர்ச்சி மலை சூழ்ந்து இருந்தாலும் மழை மறைவு பிரதேசமாக உள்ளதால் இங்கு குறைந்த அளவே மழை பதிவாகும்.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னம் போன்ற காரணத்தால், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தால் ஈரோடு மாவட்டத்திலும் மழை பதிவாகும்.

    பருவமழையும் குறைந்த அளவே பதிவாகும். ஆனால் கடந்த சில ஆண்டாக தென்மேற்கு பருவமழையைவிட, வட கிழக்கு பருவமழை யின்போதே அதிகமாக மழை பதிவாகியது. இருப்பினும் இம்மாவட்ட த்தின் சராசரி மழை 733.44 மி.மீட்டராகும்.

    இந்நிலையில் நடப்பாண்டு கடந்த மாதம் 30-ந் தேதி வரை 581.61 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அத்துடன் தினமும் மாலையில் மழை பெய்து வருவதாலும், குறிப்பிட்ட இடங்களில் அதிகமாக மழை பெய்வதாலும், நடப்பாண்டு பயிர் சாகுபடிக்கு, தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 212 மி.மீட்டர் பதிவாகும். கடந்த சில ஆண்டாக இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகிறது. இந்தாண்டு ஈரோடு மாவட்டத்தில் 581 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தவிர வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், முதல் டிசம்பர் வரை 316 மி.மீ. மழை பெய்ய வேண்டும். நடப்பா ண்டு இதைவிட கூடுதலாக மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி போன்ற பகுதிகளில் சராசரியைவிட கூடுதல் மழை பெய்துள்ளது. அதற்கேற்ப பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 102 அடியாக முழு கொள்ளளவில் உள்ளது.

    நீர் வரத்தும் திருப்திகரமாக உள்ளதுடன் உபரி நீரே வெளியேற்றும் நிலை உள்ளதால் நடப்பாண்டு இரு போக சாகுபடியும் உறுதியாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×