search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண்கள்"

    • விருதுநகர் அருகே 2 இளம்பெண்கள் குழந்தைகளுடன் மாயமானார்கள்.
    • திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பாலாஜி நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மகாலட்சுமி (24). இவர் அதிக இடங்களில் கடன் வாங்கியதாக தெரிகி றது‌. இதனை கணவர் கண்டித்துள்ளார்‌.

    இந்த நிலையில் மகாலட்சுமி சம்பவத்தன்று தனது 3 வயது மகனுடன் மாயமானார். இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் கே.கே. நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி அதே பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சம்பவத்தன்று கருப்பசாமியின் மனைவி தனது 2 குழந்தைகளுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 2 இளம்பெண்கள் குழந்தைகளுடன் மாயமானார்கள்.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள அம்பட்டையன் பட்டியை சேர்ந்தவர் அழகுராஜ் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நித்யா (24). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று அழகுராஜ் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வந்து பார்த்த போது நித்யா மற்றும் 2 மகன்களை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி சிவன் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சத்தியபிரியா (28) இவர்களுக்கு 10 வயதில் சஞ்சனா என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சத்தியபிரியா மகளுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூத்தியார்குண்டை சேர்ந்தவர் கண்ணன் (42). சம்பத்தன்று மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பள்ளி மாணவி-இளம்பெண்கள் மாயமானார்கள்.
    • இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள அம்பனேரி பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அந்தப் பெண் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பூங்கொடி திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதில் மில்லில் டிரைவராக வேலை பார்க்கும் தேனூரை ஊரைச் சேர்ந்த பிச்சைமணி எனது மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி அருகே உள்ள உச்சனேந்தலை சேர்ந்தவர் பெத்தம்மாள். சம்பவத்தன்று இவர் இலங்கிபட்டியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த இவரது மகள் திடீரென மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கட்டனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    சாத்தூர் மேல காந்தி நகரைச் சேர்ந்த 14 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவி சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாய மான மாணவியை தேடி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முத்து மணி கண்டன். திருமணமான இவர் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை ஊர் பெரியவர்கள் கண்டித்துள்ளனர். இதில் விரக்தி அடைந்த முத்து மணிகண்டன் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறி மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×