search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 இளம்பெண்கள் குழந்தைகளுடன் மாயம்
    X

    2 இளம்பெண்கள் குழந்தைகளுடன் மாயம்

    • 2 இளம்பெண்கள் குழந்தைகளுடன் மாயமானார்கள்.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள அம்பட்டையன் பட்டியை சேர்ந்தவர் அழகுராஜ் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நித்யா (24). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று அழகுராஜ் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வந்து பார்த்த போது நித்யா மற்றும் 2 மகன்களை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி சிவன் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சத்தியபிரியா (28) இவர்களுக்கு 10 வயதில் சஞ்சனா என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சத்தியபிரியா மகளுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூத்தியார்குண்டை சேர்ந்தவர் கண்ணன் (42). சம்பத்தன்று மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×