என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
2 இளம்பெண்கள் குழந்தைகளுடன் மாயம்
- 2 இளம்பெண்கள் குழந்தைகளுடன் மாயமானார்கள்.
- ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள அம்பட்டையன் பட்டியை சேர்ந்தவர் அழகுராஜ் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நித்யா (24). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று அழகுராஜ் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வந்து பார்த்த போது நித்யா மற்றும் 2 மகன்களை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி சிவன் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சத்தியபிரியா (28) இவர்களுக்கு 10 வயதில் சஞ்சனா என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சத்தியபிரியா மகளுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கூத்தியார்குண்டை சேர்ந்தவர் கண்ணன் (42). சம்பத்தன்று மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்