என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவி-இளம்பெண்கள் மாயம்
- பள்ளி மாணவி-இளம்பெண்கள் மாயமானார்கள்.
- இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள அம்பனேரி பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அந்தப் பெண் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பூங்கொடி திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதில் மில்லில் டிரைவராக வேலை பார்க்கும் தேனூரை ஊரைச் சேர்ந்த பிச்சைமணி எனது மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி அருகே உள்ள உச்சனேந்தலை சேர்ந்தவர் பெத்தம்மாள். சம்பவத்தன்று இவர் இலங்கிபட்டியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த இவரது மகள் திடீரென மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கட்டனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
சாத்தூர் மேல காந்தி நகரைச் சேர்ந்த 14 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவி சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாய மான மாணவியை தேடி வருகின்றனர்.
வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முத்து மணி கண்டன். திருமணமான இவர் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை ஊர் பெரியவர்கள் கண்டித்துள்ளனர். இதில் விரக்தி அடைந்த முத்து மணிகண்டன் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறி மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்